GT vs RCB : 'ஆர்.சி.பி அந்த சவாலை திறம்பட சமாளித்திருக்கிறது' - சச்சின் பாராட்டு
GT vs RCB: "கடந்த சீசனை போல இந்த சீசனில் அழுத்தம் இல்லை, ஆனால்.!" - விராட் கோலி
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த, ஐ.பி.எல். 19-வது சீசனின் இறுதிப்போட்டியில், குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் அகமதாபாத் மைதானத்தில் மோதின.
டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார், குஜராத் அணியின் பேட்டிங் வரிசையைக் கட்டம்கட்டித் தூக்கி, முதல் இன்னிங்ஸிலேயே வெற்றியைத் தன் பக்கம் கொண்டுவந்தார்.

குஜராத் அணி 20 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்துத் திணற, இந்த இலக்கை எளிதாக விரட்டிய பெங்களூரு அணி, விராட் கோலியின் அதிரடி ஆட்டதால்,அபார வெற்றி பெற்று தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய விராட் கோலி, " கடந்த சீசனை போல அழுத்தம் இந்த சீசனில் இல்லை. நம்முடைய திறன்களிலும் நம்முடைய திட்டங்களிலும் மட்டும் கவனமாக இருந்தால் போதும் என வீரர்களிடம் கூறினோம். இடையில் கொஞ்சம் தோற்றோம்.

மும்பைக்கு எதிரான வெற்றி எங்களுக்கு மீண்டும் நம்பிக்கை கொடுத்தது. எங்கள் அணி எந்த ஒரு வீரரையும் நம்பி இல்லை. அணியில் நிறைய ஆட்டநாயகர்கள் இருந்தார்கள். எங்கள் அணி ஒரு முழுமையான அணியாக இருந்தது." என்றார்
.

















