கண்டுகொள்ளாத துரைமுருகன்; கவனம்பெற்ற தவெக சுதாகர் - காட்பாடி எம்எல்ஏ அலுவலகத்துக...
RCB: "இந்திய அணித் தேர்வு பத்தி யோசிக்கல; என் கவனம் இதுலதான் இருக்கு..." - கேப்டன் ரஜத் பட்டிதார்
நடப்பு ஐபிஎல் சாம்பியனான பெங்களூரு அணியும், குஜராத் அணியும் இறுதிப் போட்டியில் இன்று (மே. 31) மோத இருக்கின்றன.
போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டிதார், "கடந்த வருடம் நாங்கள் கோப்பையை வென்றோம், ஆனால் இது ஒரு புதிய சீசன்.

நாம் எப்போதும் கடந்த காலத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க முடியாது. இந்த ஃபைனலுக்கு முன்பாக என்னால் என்ன சிறந்த பங்களிப்பைக் கொடுக்க முடியுமோ, அதில் மட்டுமே என் கவனம் இருக்கிறது.
ஃபைனல் போட்டியில் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். எங்களுக்கு மற்றுமொரு கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று பேசியிருக்கிறார்.
தொடர்ந்து இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து பேசிய அவர், "இந்திய டி20 அணித் தேர்வைப் பற்றி நான் யோசிக்கவில்லை. என்னை இந்திய அணியின் கேப்டனாகவும் பார்க்கவில்லை.

ஒவ்வொரு கேப்டனின் கனவும் கோப்பையை வெல்வதுதான். ஐபிஎல் தொடரில் பட்டத்தை வெல்ல எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்றிருக்கிறார்.















