பாளையங்கோட்டை: இராஜகோபால சுவாமி திருக்கோயில் ஶ்ரீனிவாச திருக்கல்யாணம் வைபவம் விழ...
'தோத்தாலும் பெருமையா இருக்கு சார்...' - குஜராத் கேப்டன் சுப்மன் கில்
ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி.

தோல்விக்கு பிறகு பேசிய குஜராத் கேப்டன் கில், '180–190 ரன்கள் எடுத்திருந்தால் போட்டி இன்னும் சவாலாக இருந்திருக்கும். ஆரம்பத்தில் மைதானம் சற்று மெதுவாக இருந்தது,முதல் சில ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியது.நாங்கள் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியின் நடுவில் வேகத்தை இழந்தோம். இருந்தாலும் 150–160 ரன்கள் எடுத்தாலும் ஆரம்பத்தில் சில விக்கெட்டுகள் எடுத்தால் போட்டிக்குள் இருக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் பவர்பிளேயில் எதிரணி கொஞ்சம் அதிக ரன்கள் எடுத்துவிட்டது.
இந்த சீசனில் எங்கள் அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. முதல் சில போட்டிகளில் தோற்ற பிறகும் நாங்கள் மீண்டு வந்து தொடர்ந்து முன்னேறினோம்.

ஒவ்வொரு நாளும் எங்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சித்தோம். சிறிய விஷயங்களிலும் கவனம் செலுத்தி அணியாக வளர்ந்தோம். இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தாலும், இந்த சீசனில் அணியின் செயல்பாட்டில் நான் பெருமைப்படுகிறேன். இன்னும் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. இந்த அனுபவம் அடுத்த சீசனில் எங்களை இன்னும் வலிமையான அணியாக மாற்றும்' என்றார்.


















