செய்திகள் :

”நகையை அடகு வச்சி தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தார்” - மறைந்த தாயை நினைத்து உருகும் தவெக வேட்பாளர்

post image

த.வெ.க-வின் திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளர் யு.வி.எம்.ராஜராஜன். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் த.வெ.க சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர்.

இவரது தாய் வான்மதி என்கிற பானுமதி நேற்று திடீரென உயிரிழந்தார். நீடமாங்கலம் தாலுகாவில் எடகீழையூரில் உள்ள ராஜராஜன் இல்லத்தில் பானுமதி உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான த.வெ.க-வினர் மற்றும் உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க கூட்டணியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட எஸ்.காமராஜ் அரசியல் நாகரீகத்துடன் ராஜராஜன் அம்மா உடலுக்கு அஞ்சலி செலுத்தியது கவனம் பெற்றது.

மன்னார்குடி த.வெ.க வேட்பாளர் ராஜராஜன் அம்மானின் உடல்
மன்னார்குடி த.வெ.க வேட்பாளர் ராஜராஜன் அம்மானின் உடல்

இந்நிலையில், த.வெ.க வேட்பாளர் யு.வி.எம்.ராஜராஜன், ''15 நாளுக்கு முன்னாடி என் அம்மா கழுத்து, காதில் கிடந்த நகையை அடகு வச்சி தேர்தல் செலவுக்கு எனக்கு பணம் கொடுத்தார். நீ ஜெயிக்கணும்டானு சொல்லி எனக்கு பக்கபலமா இருந்தார். தேர்தல் முடிவு வருவதற்குள்ளேயே எங்களைத் தவிக்க விட்டுட்டு போயிட்டார்" என்று கதறியிருக்கிறார். இது மன்னார்குடி பகுதியில் அரசியல் வட்டத்தில் பேசு பொருளாக இருந்து வருகிறது.

இது குறித்து த.வெ.க வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம், ''யு.வி.எம்.ராஜராஜன் ஆரம்பத்தில் இருந்தே த.வெ.க-வில் இருக்கிறார். தி.மு.க, அ.தி.மு.க என அரசியல் கட்சிகளின் நெருக்கடிகளைச் சமாளித்து த.வெ.க-வை வளர்த்தவர். மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் 35,000 பேர் த.வெ.க-வில் உறிப்பினர்களாக உள்ளனர்.

தலைவர் விஜய் மன்னார்குடி தொகுதியில் யு.வி.எம்.ராஜராஜன் போட்டியிடுவார் என்றதுமே பிரதான அரசியல் கட்சிகளுக்குப் புளியைக் கரைத்தது. குறிப்பாக தி.மு.கவினர் ராஜராஜன் மீது பல விமர்சனங்களைக் கிளப்பி விட்டனர்.

தவெக ப்ளக்ஸ்
தவெக ப்ளக்ஸ்

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகச் சொல்லி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டார் என்றெல்லாம் ஆதாரமில்லாத கட்டுகதைகளை அள்ளி விட்டனர். இதுபோன்ற பொய்யான தகவலைப் பரப்புவதாகக் கூறி காவல் நிலையத்தில் ராஜராஜன் புகார் அளித்தார்.

இந்நிலையில் வேட்பாளராக களமிறங்கிய யு.வி.எம்.ராஜராஜன் தேர்தல் களத்தில் அசுர பாய்ச்சல் காட்டினார். போதுமான பணபலம் இல்லாத நிலையிலும் பிரதான கட்சி வேட்பாளர்களுக்கு இணையாகப் பிரச்சாரம் செய்தார்.

தொகுதிக்குள் மக்களிடமும் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் சில அரசியல் கட்சியினர் செல்வாக்கு படைத்த குறிப்பிட்ட அந்த வேட்பாளரிடம் ராஜராஜன் பணம் வாங்கி விட்டார் அவருக்கு ஓட்டு போடாதீர்கள் எனக் கிளப்பி விட்டனர். ஒரு பக்கம் தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் சிரமப்பட்டார்.

மறுபக்கம் இது போன்ற வதந்திகள் மூலம் வாக்கு சிதைவை ஏற்படுத்த சிலர் முயன்றனர். ஆனால் இவை மக்களிடம் எடுபடவில்லை. கடைசி கட்டத்தில் ராஜராஜன் அம்மா தன் கழுத்தில், காதில் தான் அணிதிருந்த நகையைக் கழட்டி அடமானம் வச்சி தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தார்.

மன்னார்குடி த.வெ.க வேட்பாளர் ராஜராஜன்
மன்னார்குடி த.வெ.க வேட்பாளர் ராஜராஜன்

தன் புள்ளை விஜய்யையும், மக்களையும் நம்பி களத்தில் இறங்கியிருக்கான். அவனுக்கு நாம் உறுதுணையாக இருக்கணும் எனத் தைரியப்படுத்தியுள்ளார்.

'எல்லா நகையையும் எனக்கு கழட்டி கொடுத்துட்ட பொட்டு நகை இல்லாம அம்மா கிடக்குது. இதைப் பாக்குறதுக்கு எனக்கு கஷ்டமா இருக்கு. வாக்கு எண்ணிக்கை தினத்தில் என் அம்மாவின் ஆசியுடன் எனக்கு அதிசயம் நடக்கும். நானும் கடுமையாக உழைச்சிருக்கேன். மக்கள் என்னைக் கைவிட்டிருக்க மாட்டார்கள். அம்மா ஆசியோடு நான் ஜெயிப்பேன்' என்று தன் அம்மா உடல் வைக்கப்பட்டுள்ள கூலர் பாக்ஸில் தலை சாய்ந்து கொண்டு புலம்புகிறார் ராஜராஜன். அவரைத் தேற்ற முடியாமல் நிற்கிறோம் என்றனர்.

தேர்தல் முடிந்த சூட்டோடு விநாயகர், காளி கோயிலில் சாமி தரிசனம்; சொந்த ஊரில் வைகோ

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து விட்ட சூழலில் பதிவான அதிக வாக்கு சதவிகிதத்தால் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் மே 4 ம் தேதியை திக் திக் மனநிலையுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றன. முதல்வர் மு.... மேலும் பார்க்க

``பையில் வெங்காயம் வைத்திருந்தால் எந்த ஆபத்தும் வராது" - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

மத்தியப்பிரதேச மாநிலம், சிவபுரியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``நான் காரிலோ அல்லது தங்கும் இடத்திலோ ஏசியைப் பயன... மேலும் பார்க்க

"எனது இளமைக் காலத்தில் பொன்னான 15 ஆண்டுகளை ஆம் ஆத்மிக்காகவே அர்ப்பணித்தேன், ஆனால்..!" - ராகவ் சதா

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்த ராகவ் சதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "ஒரு பட்டயக் கணக்காளராக எனக்குக் காத்திருந்த நம்ப... மேலும் பார்க்க

இணைந்த 7 எம்.பி-கள்: `மாநிலங்களவையில் பலம் கூடிய பாஜக' - ஏற்றுக்கொண்ட சபாநாயகர்

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) இருந்தனர். இவர்களில் ராகவ் சதா உள்ளிட்ட 7 உறுப்பினர்கள், கடந்த வெள்ளிகிழமை ஆம் ஆத்மி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கா... மேலும் பார்க்க

மதுபான வழக்கு: "இந்த நீதிபதி முன் ஆஜராக மாட்டேன், அதற்கு பதில்.!"- கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ (CBI) பதிவு செய்த ஊழல் வழக்கில் இருந்து, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் டெல்லி ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: "பாஜக பெண்களுக்கு ரூ. 1.80 லட்சம் தரும்" - மோடியின் வாக்குறுதி என்ன?

மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்குக் கடந்த 23 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத்தேர்தல்... மேலும் பார்க்க