NASA: செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த அறிகுறி; நாசா ரோவரின் புதிய கண்டுப...
`நடிகர் சூர்யா அரசியலுக்கு வருகிறாரா?'- நற்பணி மன்றம் கொடுத்த அதிகாரப்பூர்வ விளக்கம் என்ன?
அகில இந்தியா சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ' காலம் முடிவு செய்துவிட்டது.
கடவுள் முடிவு செய்துவிட்டார். சூர்யா மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது' என்று நிர்வாகி வீரமணி என்பவர் பேசியிருந்தார்.
இது இணையத்தில் வைரலான நிலையில், நடிகர் சூர்யா அரசியலுக்கு வருவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.
இந்நிலையில் இது தொடர்பாக அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அதிகாரபூர்வ விளக்கமளித்திருக்கிறது.

நற்பணி இயக்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "28.06.2026 அன்று நடைபெற்ற மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட திரு.இரா.வீரமணி அவர்கள்,
`இது என்னுடைய தனிப்பட்ட கருத்து' என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னரே தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
ஆனால், அவரது உரையை தவறான விளக்கத்துடன் சமூக வலைதளங்களில் பரப்பி, அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை யாரும் நம்பவோ. பொருட்படுத்தவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக திரு. இரா.வீரமணி அவர்கள் மன்றத்தின் நிர்வாகத்தில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேபோல், திரு.சூர்யா அவர்களுக்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை.

அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்கான சமூகச் சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருகிறது.
மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் செயல் தலைவர் திரு.R.A. ராஜ் மற்றும் அமைப்பாளர் திரு.G.ஹரிராஜ் ஆகியோரின் மூலமாக மட்டுமே வெளியிடப்படும்.
எனவே, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பாமல் மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ விளக்கம்.
— All India Suriya Fans Club (@Suriya_AISFC) June 29, 2026
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் இயக்கத்தின் நிலைப்பாடுகளை மட்டும் பின்பற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!! pic.twitter.com/78m31gmIyh

















