செய்திகள் :

ராமேஸ்வரம்: ஹோட்டல் பெண் வரவேற்பாளரிடம் பாலியல் சீண்டல்... தலைமறைவான பயண முகவரைத் தேடும் போலீஸார்

post image

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் நகரில் வசித்து வருபவர் ராஜா. இவர் ராமேஸ்வரத்தில் ஶ்ரீ பாலாஜி டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான பயண முகவராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இங்குள்ள தனியார் ஹோட்டல் ஒன்றுக்குச் சென்ற ராஜா, அங்கு வரவேற்பாளராகப் பணிபுரியும் பெண்ணிடம் பயணம் தொடர்பான ஆவணங்களைக் கேட்டுள்ளார்.

பயண ஏற்பாட்டாளர் ராஜா
பயண ஏற்பாட்டாளர் ராஜா

அந்தப் பெண் பயண ஆவணங்களை நகல் எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென ராஜா அந்தப் பெண்ணின் உடலில் கிள்ளி பாலியல் சீண்டல் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் ஹோட்டல் மேலாளரிடம் இது குறித்து புகார் செய்ததுடன், வீட்டிற்குச் சென்று தனது கணவரிடம் இது பற்றி கூறியுள்ளார்.

அவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராஜாவிடம் இது குறித்து செல் போனில் கேட்டுள்ளார்.

அப்போது எதிர் தரப்பில் பேசிய பயண ஏற்பாட்டளரான ராஜா, பாதிக்கபட்ட பெண்ணையும், அவரது கணவரையும் மிரட்டும் வகையில் பேசியுள்ளார். இதையடுத்து அப்பெண் ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜா மீது புகார் அளித்தார்.

பாலியல் சீண்டல்

இதனைத் தொடர்ந்து பயண ஏற்பாட்டாளர் ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதனை அறிந்த ராஜா போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து தலைமறைவான ராஜாவை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் தேடி வருகின்றனர்.

பேத்தி மீது அதிக பாசம் காட்டிய தாத்தா - பாட்டி; ஆத்திரத்தில் சிறுமியை கிணற்றில் வீசிக் கொன்ற அத்தை!

மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் - செல்வி தம்பதிக்கு சாய்தீப்தி (5), சாரு நித்திகா (5) ஆகிய இரட்டை குழந்தைகள். விடுமுறை நாள்களில் ராமநாதபுரம் பசும்பொன் நகரில்உள்ள செல்வியின் தந்தை முத்து முருகன் வீட்டுக்கு ... மேலும் பார்க்க

`அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை' - வருங்கால கணவனிடம் ரூ.1 கோடியை வாங்கி காதலனிடம் கொடுத்த மணமகள்

புனேயில் கடந்த 18-ம் தேதி ஷியா கோயல் என்ற பெண் தனது வருங்கால கணவர் கேதன் அகர்வாலை தனது காதலன் துணையோடு மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது... மேலும் பார்க்க

`வருங்கால கணவனை எப்படி கொலை செய்தேன்.!' - சம்பவம் நடந்த மலை உச்சிக்கு வந்து செய்து காட்டிய பெண்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கடந்த 18ம் தேதி அங்குள்ள லோஹாகட் மலைக்கோட்டையில் ரியஸ் எஸ்டேட் உரிமையாளர் கேதன் அகர்வால் என்பவரை அவரது வருங்கால மனைவி ஷியா கோயலும், அவரது காதலன் சேதன் செளதரியும் சேர்ந்து ... மேலும் பார்க்க

`ஹோட்டல் உரிமையாளருக்கு விற்கப்பட்ட சிறுமி' - 5 நாளில் 30 பேரால் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனார். அந்த சிறுமி கைவண்டி இழுக்கும் ஒருவரிடம் சிக்கினார். அந்த நபர் அச்சிறுமியை ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம் வி... மேலும் பார்க்க

ஆபரேஷன் தூஃபான்: தாய்லாந்திலிருந்து ஹைபிரிட் கஞ்சா கடத்தல்; சர்வதேச கும்பலை கைதுசெய்த கேரள போலீஸ்!

கேரள மாநிலத்தில் ஆபரேஷன் தூஃபான் திட்டத்தின் கீழ் போதைப்பொருள்களுக்கு எதிரான வேட்டை தொடர்ந்து நடந்துவருகிறது. அதன் ஒருபகுதியாக எர்ணாகுளம் மாவட்டம், மாறம்பிள்ளி குன்னுவழிப் பகுதியில் கடந்த புதன்கிழமை ம... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: தூங்கிக் கொண்டிருந்த சிறுமி மாயம்; கிணற்றில் காயங்களுடன் உடல் மிதந்ததால் அதிர்ச்சி

மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் - செல்வி தம்பதிக்கு சாய்தீப்தி (5), சாரு நித்திகா(5) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். விடுமுறை நாள்களில் ராமநாதபுரம் பசும்பொன் நகரில் உள்ள செல்வியின் தந்தை முத்து முருகன் வீட்டு... மேலும் பார்க்க