செய்திகள் :

நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் ராகுல் டிராவிட் வாக்குவாதம்!

post image

நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்த டிராவிட்டின் விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அமைதியான ஆட்டம் மற்றும் மிகச்சிறந்த தலைமைக்கு பெயர் பெற்றவரான ராகுல் டிராவிட், பெங்களூருவில் ஒரு ஆட்டோ ஓட்டுநருடன் வாய்த் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு டி20 உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தவரான ராகுல் டிராவிட் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐபிஎல்லுக்கு முன்னதாக, தற்போது தனது சொந்த ஊரான பெங்களூரில் நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், கர்நாடகத்தின் பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு அருகிலுள்ள கன்னிங்ஹாம் சாலையில், ராகுல் டிராவிட்டின் கார் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் விபத்து நேரிட்டது. இதனால் நடுரோட்டில் நின்று ஆட்டோ ஓட்டுநரிடம் டிராவிட் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள் | கம்மின்ஸ் காயம்: சாம்பியன்ஸ் டிராபி ஆஸி. அணியின் புதிய கேப்டன் யார்?

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டார். இந்த விபத்து குறித்து எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் இதன் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆட்டோ ஓட்டுநர் திடீர் பிரேக் போட்டதால் டிராவிட்டின் கார் மோதியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். விடியோவின் இறுதியில், கன்னடத்தில் பேசிய ஓட்டுநர், தவறை ஒப்புக்கொண்டார். மேலும், டிராவிட் ஆட்டோ ஓட்டுநரின் எண்ணை புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் அங்கிருந்தவர் தெரிவித்தனர்.

மீம் மெட்டீரியலான விடியோ

இது ஒருபுறம் இருக்க சில ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான “இந்திரா நகர் குண்டா” என்ற விளம்பரத்தில் போக்குவரத்து நெரிசலில் காருக்கு சிக்கியிருக்கும் ராகுல் டிராவிட், அருகிலிருக்கும் மற்ற கார்களை ஆக்ரோஷமாகத் தாக்குவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்த இரு விடியோக்களையும் ஒப்பிட்டு இணையதளவாசிகள் ராகுல் டிராவிட்டை கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் |டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்! சாதனை படைத்த ரஷீத்கான்!

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது: ஜகதீப் தன்கா்

ஜெய்பூா்: வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது என்றும் வேளாண் அறிவியல் மையங்களை விவசாயிகள் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார... மேலும் பார்க்க

மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சென்று வந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிப். 12, 13 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயண... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் யார்? அமித் ஷாடன் நட்டா சந்திப்பு!

தில்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேரில் சந்தித்தார். தில்லி புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக விரைவில் அ... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி அமைத்ததும் பாஜகவின் முதல் திட்டம்!

தில்லியில் முறையாக ஆட்சி அமைத்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்திலுள்ள ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நடைபெற்றுமுடிந்த தில்லி சட்டப் பேரவைத் தோ்தல... மேலும் பார்க்க

2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: தர்மேந்திர பிரதான்

2026-ல் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (பிப். 9) தெரிவித்தார். இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களுட... மேலும் பார்க்க

மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா!

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் வழங்கினார். மேலும் பார்க்க