செய்திகள் :

நாஞ்சிக்கோட்டை: பூட்டியே கிடக்கும் பொதுக் கழிவறை; அவதியுறும் மக்கள்- நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

post image

தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை சாலை முனியாண்டவர் காலனியில் உள்ள கழிவறை பயன்பாடு இன்றி பூட்டியே கிடப்பதால், அப்பகுதி மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய அந்த ஊர் மக்கள், "இங்க ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து போறாங்க.100-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்குது. தஞ்சாவூர் டு நாஞ்சக்கோட்டை செல்லும் சாலையில்தான் இந்த முனியாண்டவர் காலனி இருக்குது. முறையான பொதுக் கழிவறை இருந்தும் எந்த ஒரு பயன்பாடும் இன்றி பூட்டியே கெடக்குது. இங்க உழவர் சந்தை, ஸ்கூல், கோயில், நிறைய அங்காடிகள் இருக்கு. இப்படிப்பட்ட முக்கியமான இடத்துல பொதுக் கழிப்பிடம் பூட்டியே இருக்குறது, மிகவும் சிரமத்தை ஏற்படுத்துது.

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த இடத்துல தஞ்சை மாநகராட்சி மூலமா அஞ்சு லட்சம் செலவில் பொதுக் கழிவறை கட்டப்பட்டது. இப்போ இந்த பொதுக் கழிவறை எவ்வித பயன்பாடும் இல்லாம ரொம்பா நாளாவே பூட்டியே கெடக்குது. இதனால அந்த வழியாக போகுற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிங்க ஆத்திர அவசரத்துக்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க. நிலைமை இப்படி இருக்குறதால, பெரும்பாலானவங்க சாலையோரங்கள்லையே இயற்கை உபாதைகள கழிக்குறாங்க. அதனால, சுகாதார சீர்கேடு நிலவி, நோய்பரவல் அபாயமும் இருக்குது.

கிட்டத்தட்ட ஆறு மாசமா இந்தக் கழிவறையைத் திறக்க வேண்டும்னு கோரிக்கை வெச்சுட்டு இருக்கோம். ஆனா அதிகாரிங்க மக்கள் சுகாதார விஷயத்துல அலட்சியமா இருக்காங்க. எந்தவித நடவடிக்கையும் இதுவரைக்கும் எடுத்தப்பாடில்லை" என்று மனம் நொந்தனர்.

இது குறித்து அப்பகுதி கவுன்சிலர் கல்பனாவிடம் கேட்டதற்கு,  

“எங்களுக்கும் இதை திறக்கச் சொல்லி ஏராளமான கோரிக்கை வந்தது.‌ ஆனால் இதில் இன்னும் ஒரு சில மாற்றங்கள் செய்ய வேண்டும்‌. அதனால்தான் இதனை இன்றளவும் திறக்காமல் வைத்திருக்கிறோம். விரைவில் இக்கழிவறை திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்" என்று கூறினார்.

விஜய்யின் வேலூர் விசிட்; 25,000 பேர் திரளும் இடம் தேர்வு - தவெக சொல்வதென்ன?

வேலூரில், பிப்ரவரி 8-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, வேலூர் அடுத்துள்ள அகரம்சேரியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி, பிரமாண்டமான வெ... மேலும் பார்க்க

'நாட் ரீச்சபிளில் இருப்பவர்கள் பற்றி கேட்காதீங்க' - விஜய் குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியில் திமுக தேர்தல் அலுவலகம் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகளில் இன்று தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. முன்னாள்... மேலும் பார்க்க

திருமாவளவன் பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்; தமிழ் மன்னர்கள் தொடர்பாக அவர் பேசியது என்ன?!

தமிழ் மன்னர்கள் தொடர்பாக வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியது, சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. திருமாவளவனின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமமுக தலைவர் டி.ட... மேலும் பார்க்க

திமுக - காங்கிரஸ் பஞ்சாயாத்து; அனல் தகிக்கும் மதுரை வடக்குத் தொகுதி - என்னதான் நடக்கிறது அங்கே?

திமுக, காங்கிரஸ் இடையேயான உறவில் ஏற்கெனவே புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இருதரப்பினரும் மாறி மாறி வசைபாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஒரு கூட்டத்தில் எம்.எல்.ஏ கோ.தளபதி காங்கிரஸின் மாணிக்கம் தாகூ... மேலும் பார்க்க

`நீங்கள் வரத்தான் போகிறீர்கள்' - ப.சிதம்பரத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசகம்!

பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்திருந்தார். நலதிட்ட உதவிகளை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் த... மேலும் பார்க்க