செய்திகள் :

``நாளையுடன் உலகம் அழியப்போகிறது" - தீவிரமாக கப்பல் கட்டும் எபோநோவா?: யார் இவர்? என்ன சொல்கிறார்?

post image

இஸ்லாம் குர்ஆனிலும், கிறிஸ்தவம் பைபிலிலும் நூஹ் - நோவா என்பவரின் சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறது. உலகை அழிக்க நினைத்த இறைவன் இவர் மூலம் நல்லவர்களை காப்பாற்றி இந்த உலகை மீளுறுவாக்கம் செய்ததாக அந்த சம்பவம் முடியும்.

தற்போது ஆப்ரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஒருவர் தன்னை தீர்க்கதரிசி என அழைத்துக்கொள்கிறார். தன்னை நோவானின் மகன் எனப் பொருள்படும்படியான் எபோநோவா என அடையாளப்படுத்திக்கொள்ளும் அவர், டிசம்பர் 25 அன்று மீண்டும் இறைவன் மனிதகுலத்தை அழிக்க முடிவு செய்திருப்பதாகவும், நல்லவர்களை காப்பாற்ற பத்து பெரும் பேழைகளை செய்யக் கட்டளையிட்டதாகவும் ஆகஸ்ட் மாதம் முதல் பிரசாரம் செய்துவருகிறார்.

எபோநோவா
எபோநோவா

'பூமியை மூழ்கடிக்கப் போகும் பைபிள் கால வெள்ளத்திலிருந்து மனிதர்களையும் அனைத்து விலங்கினங்களையும் காப்பாற்றுவதற்காக, நோவாவின் பணியைத் திரும்பச் செய்யும்படி கடவுள் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்" எனக் கூறுகிறார்.

அவரின் சமூக ஊடகப் பக்கத்தைப் கவனித்தால் அவர் கோணித்துணியை உடையாக அணிந்து, ஒரு கையில் புத்தகமும், மற்றொரு கையில் செல்போனுமாக வலம் வருகிறார். அவர் கானா நாட்டில் இருக்கிறார் என்பது செய்திகளின் மூலம் அறியமுடிகிறதே தவிர, அவர் எந்தப் பகுதியில் வசிக்கிறார் என்பதற்கான எந்த குறிப்பும் கிடைக்கவில்லை.

பெரும்பாலான வீடியோகளில் அவர் கப்பல் கட்டுவது தொடர்பாகவும், அதைப் பார்வையிடுவது தொடர்பாகவும் பேசுகிறார். அவரின் ஒவ்வொரு பேச்சின் முடிவிலும் டிசம்பர் 25 முதல் தொடர்ந்து மூன்று மாதங்கள் பெருமழைப் பெய்யும், அதைத் தொடர்ந்து உலகம் மூன்று வருடம் வெள்ளத்தால் மூழ்கும் எனக் கூறுகிறார். 25-ம் தேதி நெருங்கி வருகிறது விருப்பம் இருப்பவர்கள் இப்போதே வரலாம் என்கிறார். மேலும், அவருடைய ஆதவராளர்கள் சிலர் அவரையும், அவர் கப்பலையும் புகழ்ந்து பேசும் வீடியோகளும் அவர் வலைதளங்களில் பதிவாகியிருக்கிறது.

எபோநோவா
எபோநோவா

சில வீடியோகளில் அந்தப் பேழையை நோக்கி சில ஆடுகளும், கோழிகளும், பூனைகளும் வருவதாக காட்சிப்படுத்தப்பட்டு வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. அவை அங்கு இயல்பாக சுற்றும் விலங்குகள் என கமெண்ட் பகுதியில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். சிலர் எபோ நோவாவை போலி என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கிண்டல் செய்தும் வருகின்றனர்.

இவரை ஆதரிப்பவர்கள் அளிக்கும் நன்கொடையிலேயே இவ்வளவு பெரிய கப்பல்களைக் கட்டுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு ஆதரப்பூர்வமான எந்த தகவலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

"நாங்கள்தான் தப்பியோடியவர்கள்; உங்கள் வயிறு எரியட்டும்" - லலித் மோடி வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூடு: தனி ஒருவனாக போராடி பலரை காப்பாற்றிய பழக்கடைகாரர் - யார் அந்த ஹீரோ?

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் அமைந்துள்ளது பான்டி (Bondi) கடற்கரை. யூதர்களின் விழாவான ஹனுக்காவை (Hanukkah) கொண்டாட பான்டி கடற்கரையில் சுமார் 1,000 முதல் 2,000 பேர் ... மேலும் பார்க்க

Lionel Messi: ராகுல் காந்திக்கு மெஸ்ஸி கொடுத்த கிஃப்ட் - வைரலாகும் வீடியோ!

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 'G.O.A.T. Tour' (Greatest Of All Time Tour) என்ற பெயரில் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கொல்கத்தா, அகமதா... மேலும் பார்க்க

Indigo: `தொடரும் விமான ரத்து, தாமதம்' - பயணிகள் ஆர்ப்பாட்டம்; இண்டிகோ நிறுவனத்துக்கு என்ன பிரச்னை?

இந்தியாவின் முக்கிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் ... மேலும் பார்க்க

சிங்கக் கூண்டுக்குள் தானே நுழைந்த இளைஞர் - பிரேசிலில் அதிர்ச்சி சம்பவம் | வீடியோ

பிரேசில் நாட்டில் இருக்கும் உயிரியல் பூங்கா ஒன்றில் 19 வயது இளைஞர் ஒருவர் தானாகவே சிங்கத்தின் கூண்டுக்குள் சென்று மாட்டிக்கொண்டு உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கடந்த நவம்... மேலும் பார்க்க

Rage Bait: 2025-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை; `இது வெறும் சொல் அல்ல' - எச்சரிக்கும் ஆக்ஸ்போர்ட்!

ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்போர்ட் அகராதி ஒரு சொல்லைத் தேர்வு செய்து அதை அந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக அறிவிக்கும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு "ரேஜ் பெய்ட்" (Rage Bait) என்ற வார்த்தையைத் தேர்வு செய்திருக... மேலும் பார்க்க