செய்திகள் :

நீலகிரி: 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்; ராணுவ உதவியுடன் விடிய விடிய போராடி மீட்பு - திக் திக்

post image

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 28 வயதான சிவகுருநாதன். கடந்த 13 - ம் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற இவர், தனியார் தங்கும் விடுதி ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்து நாள்தோறும் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்திருக்கிறார். கூடலூர் அருகில் வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஊசி மலை காட்சி முனை பகுதிக்கு நேற்று மாலை சென்றிருக்கிறார்.

ஊசிமலை காட்சி முனை மீட்பு பணி

இந்த நிலையில், ஊசி மலை பகுதியில் உள்ள பெரிய பள்ளத்தில் தவறி விழுந்து விட்டதாகவும், உடலில் காயங்கள் ஏற்பட்டிருப்பதால் எழுந்து நடக்க முடியாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தங்கும் விடுதிக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். செல்போனில் தன்னுடைய லொக்கேஷனையும் அனுப்பியிருக்கிறார்.

இதனைக் கேள்விப்பட்டு பதறிய தங்கும் விடுதி நிர்வாகத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். நிகழ்விடத்திற்கு உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு அந்த இளைஞரைக் கண்டறிந்துள்ளனர். முதுகு தண்டுவடம் பகுதியில் கடுமையான காயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

ஊசிமலை காட்சி முனை மீட்பு பணி

அவரை மீட்டு மேலே கொண்டு வருவதில் சிரமம் இருப்பதை உணர்ந்து, மாவட்ட நிர்வாகம் மூலம் ராணுவத்தினரின் உதவியை நாடியுள்ளனர். குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் இருந்து ராணுவ வீரர்கள் குழுவாகச் சென்று மீட்பு பணியில் இணைந்துள்ளனர். இளைஞர் விழுந்து கிடந்த இடத்திலியே வைத்து விடிய விடிய சிகிச்சை அளித்துள்ளனர்.

இன்று அதிகாலை அந்த இளைஞரை மீட்டு ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞரை தொடர்ந்து 15 மணி நேரமாக போராடி ராணுவ உதவியுடன் தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் உயிருடன் மீட்ட நிகழ்வு மக்களிடையே பாராட்டுதலைப் பெற்று வருகிறது.

ஊசிமலை காட்சி முனை மீட்பு பணி

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு, " பள்ளத்தில் விழுந்து கிடந்த இளைஞரை கண்டறிவது எளிமையாக இருந்தது. அவர் சுய நினைவுடன் இருந்தாலும் தண்டுவட காயம் காரணமாக நகர முடியாமல் இருந்தார். அவரை மீட்பதற்கு சிறப்பு உதவி தேவைப்பட்டது. இதன் காரணமாகவே ராணுவ உதவி தேவைப்பட்டது. அவரை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்" என்றார்.

அதிகாலை துயரம்: ஒடிசா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீப்பிடித்து 10 நோயாளிகள் உயிரிழப்பு

ஒடிசா மாநிலம் கட்டாக் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் எஸ்.சி.பி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலை மூன்று மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீப்பிடித்துக்கொண்டது. அதிகாலை நேரம் என்பதால் அனைத்த... மேலும் பார்க்க

நாவலூர்: அதிகாலை நேர்ந்த கோரம்; சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 குழந்தைகள் பலியான சோகம்

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் பகுதியில் இன்று (மார்ச் 15) அதிகாலை குடியிருப்பு ஒன்றில் எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இந்த வெடிப்புச் சம்பவத்தின் வீரியம் காரணமாக அந்த வீடு முற்ற... மேலும் பார்க்க

கரூர்: கல்லூரி பேருந்து மீது மோதிய ரயில்; 23 மாணவர்கள் காயம்; ஆளில்லாத லெவல் கிராசிங்கால் விபத்து

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள குளத்தூர் பகுதியில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கைக் கடக்க முயன்ற தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த 23... மேலும் பார்க்க

யானை - மனித எதிர்கொள்ளல்: வீட்டுக்கு சென்ற வழியில் சிக்கிய நண்பர்கள் - இருவரும் உயிரிழந்த சோகம்

இந்திய அளவில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களில் நீலகிரி மாவட்டம் முக்கிய இடத்தில் இருக்கிறது. குறிப்பாக கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானை - மனித எதிர்கொள்ளல்களின... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஆயுதத் தொழிற்சாலையில் வெடிவிபத்து; 17 பேர் பலியான சோகம்; பிரதமர் இரங்கல்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள ரவுல்காவ் என்ற இடத்தில் எஸ்.பி.எல். எனர்ஜி லிமிடெட் என்ற ஆயுத தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.இதில் டெட்டனேட்டர், துப்பாக்கி பவுடர் உட்பட பல்வேறு விதமான ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் பயங்கரம்: ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து விபத்து; பயணம் செய்த 7 பேரின் நிலை என்ன?

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் 7 பேருடன் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.41 வயது மதிக்கத்தக்க நோயாளி, விபத்து ஒன்றில் சிக்கி 63 சதவீத தீக்க... மேலும் பார்க்க