செய்திகள் :

நெல்லை: மதுபோதையில் தகராறு; நண்பரைக் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடியவர் சிக்கியது எப்படி?

post image

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பொதிகையடியைச் சேர்ந்தவர் வனராஜ். இவர், கடந்த 12-ம் தேதி பாபநாசம், லோயர் கேம்ப் வனப்பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு வருவதாகக்கூறிச் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

2 நாட்களாகியும் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அவரது மகன் முருகலிங்கம் விசாரித்தார். தன் தந்தை குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால் விக்கிரமசிங்கபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையம்
விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையம்

இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி, பாபநாசம் லோயர் கேம்ப் ஆற்றங்கரையில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கும், விக்கிரமசிங்கபுரம் போலீஸாருக்கும் தகவல் கிடைத்துள்ளது. உடலைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தியதில், காணாமல் போன முதியவர் வனராஜ்தான் என்பது தெரிய வந்தது.

போலீஸாரிடம் பேசினோம், ”வனராஜும் அவரது நண்பருமான வெள்ளத்துரை என்பவரும் கடந்த 12-ம் தேதி நடந்த வனப்பேச்சி அம்மன் கோயில் கொடை விழாவிற்குச் சென்றுள்ளனர்.

அப்போது இருவரும் மது அருந்தியுள்ளனர். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெள்ளத்துரை, கம்பால் வனராஜின் தலையில் தாக்கியுள்ளார். இதில் வனராஜ் உயிரிழந்துள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பிச்சென்ற வெள்ளத்துரை, லோயர் கேம்ப் ஆற்றங்கரையில் முதியவர் ஒருவர் இறந்துகிடப்பதாகவும், அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் போலீஸாருக்கு ஒருவர் போனில் தகவல் கூறியுள்ளார்.

Murder
Murder

தகவல் கூறியவர் குறித்து விசாரணை செய்த நிலையில்தான், தகவல் கூறியவர் வெள்ளத்துரை என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். தீவிரமாக நடத்திய விசாரணையில்தான் வனராஜுவை கம்பால் தாக்கிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து வெள்ளத்துரையைக் கைது செய்துள்ளோம்” என்றனர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிய காரணமான புனே பேராசிரியர் கைது; சிக்கியது எப்படி? வெளியான பகீர் பின்னணி

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு இம்மாத தொடக்கத்தில் நடந்தது. ஆனால் இத்தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தேர்வுக்கான வினாத்தாள் மாணவர்களிடையே கசிந்தது. இது தேர்வு நடந்து முடிந்த பிறகுதான் வ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: மாணவியை மிரட்டி அந்தரங்க வீடியோ; தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய பள்ளி மாணவர்கள் கைது

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி அந்தரங்க வீடியோ எடுத்து, அம்மாணவியின் தந்தையிடம் ரூ. 10 லட்சம் கேட்ட 3 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

நகை, பணத்துக்காக மூதாட்டி கொலை... அம்பத்தூரில் பயங்கரம்!

சென்னை அம்பத்தூர், சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் (70). இவரின் கணவர் தாமோதரன். சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தத் தம்பதியினருக்கு 6 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும... மேலும் பார்க்க

திருவள்ளூர்: லிஃப்ட் கேட்ட பெண்ணுக்கு இருட்டில் பாலியல் தொல்லை... இளைஞரைத் தேடும் போலீஸ்!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, பணி முடித்து விட்டு வீட்டுக்குச் செல்ல 40 வயதாகும் பெண் ஒருவர் ஆமூர் ஏரிக்கரை சாலை பகுதியில் காத்திருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் சென்ற இளைஞரிடம் லிஃப்ட் கேட... மேலும் பார்க்க

அடுத்தடுத்து இரண்டு கொலைகள்; நாகையில் பரபரப்பு - நேரில் ஆய்வு செய்த எஸ்.பி!

நாகப்பட்டினத்தில் வெவ்வேறு இடங்களில் மீனவர் மற்றும் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாகை ரயில் நிலையம் அருகே உள... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மின்கசிவால் சிறுவன் உயிரிழப்பு; மின்சாரத் துறையின் அலட்சியமா? என்ன நடந்தது?

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவரின் 8 வயது மகன் உதய சுதர்சன். இச்சிறுவன் பள்ளி கோடை விடுமுறைக்காக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் காவடிப்பிறை தெருவில் உள்ள ... மேலும் பார்க்க