செய்திகள் :

பஞ்சாப்: நண்பரிடம் ரூ.500 கடன் வாங்கி லாட்டரி; காய்கறி வியாபாரிக்குக் கிடைத்த ரூ. 11 கோடி பரிசு

post image

ராஜஸ்தான் மாநில வியாபாரி ஒருவருக்கு லாட்டரியில் ரூ.11 கோடி கிடைத்து இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் அமித் செஹ்ரா. காய்கறி வியாபாரியான அமித், பஞ்சாப் மாநில லாட்டரி வாங்க அமித்திடம் பணம் இல்லை. அந்நேரம் அவரது நண்பர் அவருடன் இருந்தார். அவரிடம் ரூ.500 கடன் வாங்கி சில லாட்டரி சீட்டுக்களை வாங்கினார்.

அமித்திடம் மொபைல் போன் கூட அதிகமாகப் பயன்படுத்த மாட்டார். லாட்டரியில் பரிசு விழுந்திருக்கிறதா என்று பார்க்கவும் தெரியாது. லாட்டரி சீட்டுகளை வாங்கி வீட்டில் வைத்துவிட்டார். திடீரென பஞ்சாப் லாட்டரி துறையில் இருந்து அமித் வீட்டிற்கு போன் செய்து, அமித் வாங்கிய லாட்டரிக்கு ரூ.11 கோடி பரிசு விழுந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

Lottery
Lottery

அதனை அமித் ஆரம்பத்தில் நம்பவில்லை. அதன் பிறகு அவர்கள் எடுத்துச் சொன்னவுடன் அவரால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இது குறித்து அமித் கூறுகையில், "லாட்டரி முடிவுகளை எனக்கு பார்க்கக் கூட தெரியாது. ஆனால் திடீரென எனக்கு லாட்டரி ஏஜென்சியிடமிருந்து போன் வந்தது. அவர்கள் எனக்கு ரூ.11 கோடி பரிசு கிடைத்திருப்பதாகச் சொன்னபோது அதனை என்னால் நம்ப முடியவில்லை.

அவர்கள் எனது வீட்டிற்கு வந்து பரிசு பணத்தை எப்படி வாங்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் லாட்டரி வாங்குவது இதுதான் முதல் முறை. என்னிடம் லாட்டரி வாங்க பணமும் இல்லை. எனவே எனது நண்பன் முகேஷிடம் 500 ரூபாய் வாங்கித்தான் லாட்டரியே வாங்கினேன்.

எனவே எனக்கு லாட்டரி வாங்க ரூ.500 கடன் கொடுத்த எனது நண்பணின் இரண்டு மகள்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். அவர்களுக்குக் கொடுத்த பிறகுதான் அடுத்து பணத்தை என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்'' என்று தெரிவித்தார். அமித் பரிசு பணத்தை வாங்க சண்டிகர் சென்றுள்ளார்.

ஸ்கூட்டர் ரூ.1 லட்சம்; அபராதம் ரூ.21 லட்சம்! என்ன நடந்தது?

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய இளைஞர் ஒருவருக்கு, போக்குவரத்து போலீசார் ரூ.20.74 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கூட்டரி... மேலும் பார்க்க

`பிக் பாஸ்' பார்த்துக்கொண்டே ஹைவேஸில் ஆம்னி பஸ் ஓட்டிய டிரைவர், பணிநீக்கம் - பின்னணி என்ன?

மும்பையிலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர், பேருந்தை ஓட்டிக்கொண்டே தனது மொபைல் போனில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.கட... மேலும் பார்க்க

’டாக்ஸி ஓட்டுநர்களின் அட்டூழியம்'- கோவா சென்ற ஜெர்மன் சுற்றுலா பயணியின் வீடியோ வைரல்

'கோவா மைல்ஸ்' என்ற செயலி மூலம் கார் புக் செய்த ஜெர்மன் சுற்றுலா ஜோடியை உள்ளூர் டாக்சி ஓட்டுநர்கள் வழிமறித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய... மேலும் பார்க்க

``ட்ரோன் மூலம் வீட்டை கண்காணிக்கிறார்கள்; ஜன்னல் வரை வந்தது வெட்கக்கேடு'' - ஆதித்ய தாக்கரே புகார்

மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரே இல்லமான ‘மாதோஸ்ரீ’ பங்களா எப்போதும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து வருகிறது. மறைந்த பால்தாக்கரே உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், அவர் காலத்திலிருந்தே இந்த பாதுகாப்ப... மேலும் பார்க்க

``பெங்களூருர் விமான நிலையத்தில் தொழுகை; முதல்வர் சித்தராமையா எப்படி அனுமதித்தார்?'' - பாஜக கேள்வி

பெங்களூரு விமான நிலையத்தில் நமாஸ் செய்த காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஹஜ் செல்லும் பயணிகள் பெங்களூரு விமான நிலையத்தில் கூடியிருந்தனர். அவர்கள் ஹஜ் செல்வதற்கு முன்பு திடீரென 2ஆம் நம்ப... மேலும் பார்க்க

ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு : எப்படி நாட்டினுள் வந்தது?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க