செய்திகள் :

பட்டம் டு தமிழ்த்தாய் வாழ்த்து.! மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!

post image

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, இன்று காலை தொடங்குவதற்கும் முன்பே இரண்டு முக்கிய விவகாரங்களால் பரபரப்பை ஏற்படுத்தியது.

பட்டம் வழங்கும் நடைமுறை தொடர்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் வரிசை தொடர்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டமும் இந்த விழாவைச் சுற்றி கவனத்தை ஈர்த்தது.

பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கம் பெறும் 131 மாணவர்களுக்கு மட்டுமே தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தனது கையால் பட்டங்களை வழங்குவார் என்றும், மற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பட்டங்களை வழங்கும் என்றும் தகவல் வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், "பட்டம் பெறும் அனைவருக்கும் சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தி, பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம், துணைவேந்தர் மற்றும் உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பட்டம் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் ஆளுநரே தனது கையால் பட்டங்களை வழங்குவார் என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் சுமூகமாக நடைபெற்றது.

இதற்கிடையில், பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் வரிசையை மாற்றக் கூடாது என்று வலியுறுத்தி, நேற்று திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் மாணவர் அமைப்புகள், மாதர் சங்கம் மற்றும் எழுத்தாளர் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரிலேயே இயங்கும் பல்கலைக்கழகத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை இறுதியில் பாடுவது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், பட்டமளிப்பு விழாவில் அதன் பாரம்பரியத்தையும் மரியாதையையும் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் இன்றைய மட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்க்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை.

ஒருபுறம் பட்டம் வழங்கும் நடைமுறையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்த, மறுபுறம் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இரண்டு முக்கிய சர்ச்சைகளால் பேசுபொருளாக மாறியுள்ளது.

மேகதாது: `நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கிய மத்திய அரசு; கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா?' - அண்ணாமலை

நேற்று மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் நாடாளுமன்றத்தில் ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி, "காவிரி நீர் விவகாரம் தொடர்பாக 16.02.2018 நாளிட்ட மாண்புமிகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கா... மேலும் பார்க்க

மேகதாது விவகாரம்: ``ஒரு செங்கல்லை வைக்கக்கூட முதல்வர் அனுமதிக்க மாட்டார்" - அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின் பணிகள் குறித்து முதல்வர் விரிவாக ஆய்வு செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக,... மேலும் பார்க்க

நெல்லை: பள்ளி மாணவர் மீது சக மாணவர்கள் தாக்குதல் - சாதிய மோதலா? தீவிர விசாரணை!

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பருத்திப்பாடு கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப... மேலும் பார்க்க

பீகார்: 'ஜனநாயகத்தின் மீது கொடூர தாக்குதல்' மாணவர் போராட்டத்தில் காவலர் கையில் AK-47 - என்ன நடந்தது?

நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடிகளை எதிர்த்து பீகாரில் அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) 'பீகார் பந்த்' என்கிற பெயரில் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த ஜூலை 25-ம் தேதி, பீகாரின் சிவான் மாவட்டத்த... மேலும் பார்க்க

"அமைச்சரானதும் ஊர்க்கிணற்றைப் பூட்டிட்டாங்க ஜெகதீஸ்வரி" - வருந்தும் சொந்த கிராம‌ மக்கள்

தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்குவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மிகச் சமீபமாக அமைச்சர் ஜெகதீஸ்வரி சொந்தக் கட்சி நிர்வாகியிடம் பேசியதாக வெளியான ஆடியோ ஒன்று சமூக ஊடகங்கள... மேலும் பார்க்க

M Sand, ஜல்லி: தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல இடைக்காலத் தடை - 9 காரணங்கள்!

தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்து செல்ல தமிழ்நாடு அரசு 3 மாதங்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளது. என்ன உத்தரவு? சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தில் 'தமிழ்நாடு சட்டவிரோதக... மேலும் பார்க்க