செய்திகள் :

பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய தவெக நிர்வாகி – தட்டி தூக்கிய பொள்ளாச்சி போலீஸ்!

post image

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்களை இயக்கபட்டு வருகிறது. இதில் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் (30) என்பவர் தமிழக வெற்றிக் கழகத்தின் பொள்ளாச்சி நகர கிளை சார்பில் ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேஷ் தனது பிறந்த நாளை முன்னிட்டு  நேற்று முன்தினம் நள்ளிரவில் நண்பர்களுடன், பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள சிடிசி மேடு புதிய பேருந்து நிலையத்தில் கொண்டாடியுள்ளார். அப்போது ஆம்புலன்சில் நோயாளிகளை எடுத்துச் செல்லும் ஸ்ட்ரெச்சர் இருக்கையில் இரண்டு கேக்குகளை வைத்து பட்டா கத்தியால் வெட்டிய சுரேஷ், தனது நண்பர்களுக்கு கொடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் சுரேஷ் பதிவிட்டுள்ளார். பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இச்சம்பவம் குறித்து மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பொது இடத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டா கத்தியை பயன்படுத்திய குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சுரேஷ், அவருடன் இருந்த திவான்சாபுதூரை சேர்ந்த வாஞ்சிநாதன் (26), மரப்பேட்டையை சேர்ந்த வெங்கடேஷ் (27) ஆகிய 3 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

'அப்பா, அம்மாவை தனியாக விட்டுவிடாதே' - ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால் வாலிபர் விபரீத முடிவு

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் பகுதியை சேர்ந்த ரோஹித் தன்கர்(17) என்ற வாலிபர் 11வது வகுப்பு படித்து வந்தார். ரோஹித் ரக்‌ஷாபந்தன் அன்று தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்... மேலும் பார்க்க

ஆவின்: டப்பா டப்பாவாக நெய் திருட்டு; வேலியே பயிரை மேய்ந்த கதையாக அதிர்ச்சி கொடுத்த பெண் அதிகாரி!

சேலம் மாவட்டம்‌ இரும்பாலை சாலை, தளவாய்பட்டி பகுதியில் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியம் இயங்கி வருகிறது. பாக்கெட் பால் , பால் பவுடர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் பொருள்கள் உற்பத்தி செய... மேலும் பார்க்க

சென்னை: வி.சி.க பிரமுகர் கொலை - நண்பர்களாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறிய பின்னணி!

சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்​மலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் அன்​பழகன் என்கிற மைனாகுட்டி ​(40). விசிக மாவட்ட தொண்​டர் அணி அமைப்​பாள​ராக பதவி வகித்து வந்​தார். தற்போது குடும்பத்தினருடன் கே.கே.நகர் பகு... மேலும் பார்க்க

வீடு தேடி வந்து மிரட்டிய ரௌடி; கண்ணில் மிளகாய் பொடி தூவி தோழிகளுடன் கொலைசெய்த பெண் - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கமுனீஸ்வரன். தப்பாட்டக் கலைஞரான இவர் மீது பொது இடத்தில் தகராறு செய்தது, அச்சக அதிபர் மீது பெட்ரோல் குண்டு வீசியது, வீடு புகுந்து ப... மேலும் பார்க்க

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் கம்மல் திருட்டு... வைரலான வீடியோவால் சிக்கிய இருவர்

நேபாளத்தின் நாராயணி ஆற்றங்கரையில், கடும் வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் கம்மலை இருவர் திருடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சித்வான் மாவட்ட போலீஸார் 25 மற்றும்... மேலும் பார்க்க

மதுரை: 'இரட்டிப்பு லாபம் பெறலாம்' - 'சதுரங்க வேட்டை' பட பாணியில் ஏமாற்றும் Bitcoin மோசடி கும்பல்

மதுரை மாவட்டம் மேலூரைச் சுற்றியுள்ள கட்டையம்பட்டி, கோட்டநத்தாம்பட்டி, அ.வல்லாளப்பட்டி, அய்யாப்பட்டி, மேலவளவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்களைத் தொடர்பு கொள்ளும் மக்களிடம் ரூபாய்... மேலும் பார்க்க