செய்திகள் :

"பதிலுரைய நேற்றே ஆரம்பித்திருக்கணும்; இதில் பாட்டு வேற"- பாட்டு பாடிய TVK அமைச்சர்; கண்டித்த உதயநிதி

post image

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக. 28) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய அமைச்சர் சம்பத்குமார், "என்னை வெற்றி பெறவைத்த என் தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த வெற்றி என்பது மக்களின் வெற்றி.

இந்த வாய்ப்பு என்பது மக்கள் தளபதி மீது கொண்டுள்ள மாபெரும் நம்பிக்கை. பேரவை தலைவர் அவர்களே, நீங்கள் புரட்சி தலைவரின் ரசிகர் என்று தெரியும்.

அமைச்சர் சம்பத்குமார்
அமைச்சர் சம்பத்குமார்

ஒரே ஒரு பாடல் மட்டும் பாடி கொள்கிறேன். இந்தப் பாடல் எதிர்க்கட்சித் தலைவருக்கு பிடிக்கும் என்று தெரியும். "தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று... அதை நான் நாடறிய சொல்லட்டுமா? இன்று... தெரு தெருவாய் கூட்டுவது பொதுநலத் தொண்டு. ஊரார் தெரிந்துக்கொள்ள படம் பிடிப்பார் சுயநலமுண்டு..." அப்போதே ரீல்ஸைப் பரப்பி இருக்கிறார்கள் என்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் பாடியிருக்கிறார்" என்று அமைச்சர் சொன்னதும் திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனிடையே எழுந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "புரட்சித் தலைவர் பாடலைத்தான் பாடினாரே தவிர வேறு எந்த அர்த்தத்துடனும் எங்கள் அமைச்சர் பேசவில்லை. ரசிகராகப் பாடியிருக்கிறார். அதனைக் குற்றமாக எடுத்துக்கொள்ளக்கூடாது" என்றார்.

தொடர்ந்து, "பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும் இதற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என்று தெரியவில்லை" என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சொன்னார்.

தமிழக சட்டமன்றம்
தமிழக சட்டமன்றம்

பிறகு எழுந்து பேசிய எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், "அமைச்சர் நேற்றே பதிலுரையை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் இன்றுதான் ஆரம்பித்திருக்கிறார். இதில் பாட்டு வேறு பாடுகிறார்.

சாட்சிக்கு என்னை அழைத்திருக்கிறார். அதனால் நாங்கள் இதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அதற்கு எங்களைப் பேச நீங்கள் அனுமதிக்க வேண்டும் பேரவை தலைவர் அவர்களே" என்று கூறினார்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க