செய்திகள் :

‘ஒன்டாரியோ ஏரி’ இனி ‘அமெரிக்கா ஏரி’! - கனடாவை சீண்டும் ட்ரம்ப்; இந்தப் பெயர் மாற்றம் செல்லுமா?

post image

தற்போது அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையே வர்த்தகப் போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பர வரி விதித்துள்ளன.

இந்த நிலையில், இந்தப் பிரச்னையை இன்னும் பெரிதாக்கும் விதமாக, ஒன்டாரியோ ஏரியை ‘அமெரிக்கா ஏரி’ என்று பெயர் மாற்றி, அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ஒன்டாரியோ ஏரி

இந்த ஏரியின் நடுவில்தான் அமெரிக்கா மற்றும் கனடாவின் எல்லை இருக்கிறது. அமெரிக்காவின் பக்கம், இந்த ஏரி நியூயார்க் மாநிலம் பக்கம் உள்ளது. கனடாவின் பக்கம், ஒன்டாரியோ மாகாணத்தில் இருக்கிறது.

ஒன்டாரியோ ஏரி
ஒன்டாரியோ ஏரி

இதனால், இந்த ஏரியையொட்டி அமெரிக்கா மற்றும் பிரிட்டன் (அப்போது கனடா பிரிட்டனுக்குக் கீழ் இருந்தது) 1909-ஆம் ஆண்டு எல்லை நீர் ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் பரஸ்பர நாடுகளைப் பாதிக்கும் வகையில், அதன் நீரோட்டத்தை மாற்றவோ, கட்டுப்படுத்தவோ கூடாது.

நாடுகளைப் பாதிக்கும் வகையில் அந்த ஏரியின் நீரை மாசுப்படுத்தக் கூடாது.

இரு நாடுகளுமே அந்த ஏரியைப் போக்குவரத்திற்காகவும், வணிகத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ட்ரம்ப் என்ன சொல்லியுள்ளார்?

பெயர் மாற்ற உத்தரவில் கையெழுத்திட்ட பின் ட்ரம்ப், “ஒன்டாரியோ ஏரியின் பெயரை ‘அமெரிக்கா ஏரி’ என்று பெயர் மாற்றுகிறோம். இது உடனடியாக அமுலுக்கு வருகிறது.

கனடாவைத் தாங்கிச் சுமப்பதால், கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு ஆண்டுக்குச் சராசரியாக 60 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், இனிமேலும் அதைச் செய்ய முடியாது.

‘அமெரிக்கா ஏரி’ என்று பெயர் மாற்றுவது நீண்ட நாள்களாக நான் யோசித்து வந்ததில் ஒன்று.

மார்க் கார்னி

‘மெக்சிகோ வளைகுடா’ என்று இருந்ததை, ‘அமெரிக்க வளைகுடா’ என்று மாற்றினோம். இப்போது அது இயல்பாகவே புழக்கத்திற்கு வந்துவிட்டது.

இப்போது நம்மிடம் ஒரு வளைகுடாவும், ஒரு ஏரியும் உள்ளது. இனி நமக்குத் தேவை ஒரு பெருங்கடல் மட்டும்தான். எனவே, அடுத்து அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலின் பெயரை நாம் மாற்ற வேண்டியிருக்கும்” என்று பேசியிருக்கிறார்.

கனடாவின் ரியாக்‌ஷன்

ட்ரம்பின் இந்த உத்தரவிற்கு கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...

“ ‘ஒன்டாரியோ ஏரி’ என்ற பெயர் ‘ஒன்டாரி இயோ’ எனும் வெண்டாட் பழங்குடியின மொழியிலிருந்து வந்ததாகும். அதற்கு ‘மிகவும் அழகான ஏரி, மிகப்பெரிய ஏரி’ என்று பொருள்.

இந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலாகப் புழக்கத்தில் உள்ளது. அதாவது கனடாவின் கூட்டமைப்பு உருவாவதற்கும், அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்திற்கும் முன்பிருந்தே இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்கா மாறிவருகிறது என்பதை நாம் அறிவோம். அவர்களின் வர்த்தக உறவுகள், வெளியுறவுக் கொள்கைகள், தேசிய நினைவிடங்கள், ஏன் நீர்நிலைகளின் பெயர்கள் கூட மாறிக்கொண்டிருக்கின்றன.

ஆனால், என்றென்றும் அதை ‘ஒன்டாரியோ ஏரி’ என்று அழைப்பதுதான் உண்மைக்கு அழகு என்பதைக் கனடா மக்கள் நன்றாகவே அறிவார்கள்.”

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்பின் அறிவிப்பு செல்லுபடியாகுமா?

அமெரிக்காவிலும், அமெரிக்க அரசாங்கத்திலும் ஒரு இடத்தின் பெயரை எப்படி அழைக்க வேண்டும்... எப்படி குறிப்பிட வேண்டும் என்று மாற்றுகிற அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு உண்டு.

இதனால், இனி அமெரிக்கா ஒன்டாரியோ ஏரியை அமெரிக்கா ஏரி என்று அழைக்கலாம்.

ஆனால், இந்தப் பெயர் மாற்றத்தைக் கனடாவின் மீதோ, உலக நாடுகள் மீதோ அமெரிக்கா திணிக்க முடியாது.!

"பதிலுரைய நேற்றே ஆரம்பித்திருக்கணும்; இதில் பாட்டு வேற"- பாட்டு பாடிய TVK அமைச்சர்; கண்டித்த உதயநிதி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக. 28) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவாதத்தின்போது பேசிய அமைச்சர் சம்பத்குமார... மேலும் பார்க்க

"மேகதாது அணை தமிழகத்திற்கே உதவும்; உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காப்பாற்றுவேன்" - கர்நாடக முதல்வர்

கர்நாடகாவின் முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்ற பின், தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் மேகதாது அணைப் பிரச்னை மீண்டும் வெடித்துள்ளது. இந்த அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு கர்நாடகாவிலிருந்து வரும் தண்ண... மேலும் பார்க்க

'புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதது ஏன்?’ - பேரவையில் முதல்வர் ரங்கசாமி கொடுத்த விளக்கம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதையொட்டி கவர்னர் உரை மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் ரங்கசாமி, ``புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரு... மேலும் பார்க்க

கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம்... நிதி ஆயோக்கின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை, நம் இளைய தலைமுறை பற்றி உடனடியாக கவனம் செலுத்தவேண்டிய ஒரு கசப்பான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. ‘Reimagining Skills for Viksit Bharat @2047’ என்ற அந்த ... மேலும் பார்க்க

'பரிதாபத்தில்தான் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத்தினீர்களா?' - அவையில் வன்னி அரசு சரமாரி கேள்வி!

அமைச்சர் வன்னி அரசுவின் சமூகநீதித்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் இன்று நடந்திருந்தது. விவாதத்தின் போது சில திமுக, அதிமுக உறுப்பினர்கள், 'நாங்கள் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத... மேலும் பார்க்க

'திமுக அரசு மதவாதிகளுடன் கரம் கோர்த்து அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டத்தை முடக்கியது!- ஆதவ் ஆவேசம்!

சமூகநீத்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் இன்று நடந்திருந்தது. இந்த விவாதத்தின் போது 'அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டம்' குறித்து கடும் வாக்குவாதம் எழுந்தது. கோவி.செழியன்திமுக முன்... மேலும் பார்க்க