செய்திகள் :

பயணப்படிக்கு விண்ணப்பம் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்; ஆபாச படங்கள் அனுப்பிய எஸ்.பி அலுவலக பணியாளர் கைது

post image

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் அமைச்சுப் பணியில் ஈடுபட்டு வந்தவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான முருகன். அரசின் நிரந்தர பணியாளரான இவர், காவலர்களுக்கான பயணப்படி பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

ஆபாச வீடியோ

இந்த நிலையில், வழக்கு தொடர்பாக வெளியூர் சென்று வந்த பெண் ஆய்வாளர் ஒருவர் பயணப்படிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முருகனிடம் கொடுத்துச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், அன்றைய தினம் இரவு புதிய செல்போன் எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் வந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஆய்வாளர், சம்பந்தப்பட்ட எண் குறித்து புகார் அளித்திருக்கிறார்.

காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் பணியாற்றி வந்த முருகனின் எண் என்பதைக் கண்டறிந்துள்ளனர். ஆபாச வீடியோக்களை முருகன் அனுப்பியதை உறுதி செய்த காவல்துறையினர், முருகன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

முருகன்

பிண்ணனி குறித்து தெரிவித்த காவல்துறையினர், " டிராவல் அலவன்ஸ் விண்ணப்பத்தில் சம்மந்தப்பட்ட லேடி இன்ஸ்பெக்டர் தன்னுடைய செல்போன் எண்ணை எழுதியிருக்கிறார். இதை கவனித்த முருகன், எண்ணை செல்போனில் ஏற்றி வாட்ஸ் அப் மூலம் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியிருக்கிறார். இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

கிருஷ்ணகிரி: நடுராத்திரியில் நடுங்க வைத்த பெண் குரல்... வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த போலீஸ்!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஜெகதேவி சாலை, எம்.ஜி.ஆர் நகரில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி அருகில் வசிப்பவர் அர்ஜுனன் (வயது 71). விவசாயியான இவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று... மேலும் பார்க்க

பள்ளிவாசலுக்கு மந்திரிக்க சென்ற இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்ய முயன்ற நபர்; நரிக்குடியில் பரபரப்பு!

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே வீரசோழன்‌ பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவர் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அஷ்ரத் ஆக பணியாற்றி‌ வருகிறார். இந்நிலையில் நரிக்குடி‌ பகுதியை சேர்ந்த 22 வயது இளம்... மேலும் பார்க்க

சிவகாசி: மின்வாரியத்தில் கத்தை கத்தையாக பணம் எண்ணிய அதிகாரி, லஞ்சமா? - பணியிடை நீக்கம்

சிவகாசியில் மின்வாரியத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரி ஒருவர் அலுவலகத்தில் பணம் எண்ணும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளராக பணியாற்றி வந்தவர் பத்ம... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: பெண் B.L.O தற்கொலை; வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிச்சுமை காரணமென கணவர் புகார்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜாகிதா பேகம், சிவனார்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கிராம உதவியாளராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வாக்காளர் பட்டியல் சிற... மேலும் பார்க்க

தாமிரபரணி ஆறு: ”தண்ணீர் எடுக்கும் நிறுவனங்களிடம் லிட்டருக்கு ஒரு பைசாதான் வசூலா?” - ஐகோர்ட் கேள்வி

தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து தற்போது வரை ஒரு லிட்டருக்கு ஒரு பைசாதான் வசூலிக்கப்பட்டு வருகிறதா? என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக... மேலும் பார்க்க

சேலம்: திமுக பிரமுகர் சுட்டுக்கொலை; மூன்று தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை; பின்னணி என்ன?

சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்துள்ள கிராங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். திமுக கிளை செயலாளராக உள்ளார். ராஜேந்திரனுக்கும், பக்கத்து தோட்டத்தில் வசித்து வரும் இவரது உறவினர்களான ராஜமாணிக்கம், ... மேலும் பார்க்க