செய்திகள் :

பீகார்: கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் உயிரிழப்பு; 12 பேர் காயம்; விபத்து ஏற்பட்டது எப்படி?

post image

பிகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஷெரீப் என்ற இடத்திற்கு அருகில் உள்ள மெஹ்ரா என்ற கிராமத்தில் ஷீட்லாஷ்டமி கோயில் இருக்கிறது.

வட இந்தியர்களின் சைத்ரா மாதத்தில் இன்று கடைசி செவ்வாய்கிழமை என்பதால் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். அவர்களில் அதிகமானோர் பெண்கள் ஆவர்.

ஒரே நேரத்தில் அதிகப்படியான பக்தர்கள் கூடியதால் கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஒருவர் ஒருவர் முண்டியடித்துக்கொண்டு செல்ல முயன்றனர். இதனால் கீழே விழுந்தவர்கள் மீது மற்ற பக்தர்கள் ஏறிச்சென்றனர். எனவே ஏராளமான பெண்கள் ஆங்காங்கே மயங்கி கிடந்தனர்.

எங்கும் கூச்சல் குழப்பமாக இருந்தது. பக்தர்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

அலறியடித்து ஓடிய பக்தர்கள்
அலறியடித்து ஓடிய பக்தர்கள்

தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் சேர்ந்து காயம் அடைந்தவர்களை மீட்டு உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். அவர்கள் அனைவருமே பெண்கள் ஆவர். மேலும் 12 பேர் காயம் அடைந்தனர்.

இது குறித்து கோயிலில் இருந்த மம்தா தேவி என்ற பக்தர் கூறுகையில், ''செவ்வாய்க் கிழமையன்று இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். ஷீட்லா மாதா தரிசனத்திற்கு மக்கள் வருகிறார்கள்.

நாங்களும் பாட்னாவில் இருந்து தரிசனத்திற்கு வந்துள்ளோம். ஆனால் நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறந்துவிட்டனர். தவறான நிர்வாகத்தால் இது நடந்தது. இங்கு கூட்டம் அதிகம். நிர்வாகம் இங்கு இல்லை" என்கிறார்.

சம்பவம் குறித்து ஏராளமான புகைப்படங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி இருக்கின்றன. ஒரு படத்தில், ஒரு ஆண், ஒரு பெண்ணிற்கு அவசர உதவி செய்வது போன்றும், மற்றொரு பெண், சுயநினைவற்ற நிலையில் கிடந்த ஒரு பெண்ணின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து, அவரை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டது போன்ற படங்கள் வெளியாகி இருக்கின்றன.

`பெரிய அலை இழுத்துசென்றது' - ஒடிசா கடற்கரையில் படப்பிடிப்பின் போது கடலில் மூழ்கி உயிரிழந்த நடிகர்

மேற்கு வங்கத்தில் டிவி மற்றும் பெங்காலி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ராகுல் அருணோதய் பானர்ஜி. இவர் அதிக அளவில் டிவி தொடர்களில் நடித்து வந்தார். புதிதாக போலே பாபா பார் கரேகா என்ற டிவி தொடரில் நடித்... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் பலி - கும்பாபிஷேகம் நடந்து 4 ஆண்டுகளிலேயே விபத்து

சக்தி தலங்களில் முதன்மையானதும், அம்மன் திருத்தலங்களில் பிரசித்தி பெற்றதுமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தற்போது பூச்சொரிதல் விழா நட... மேலும் பார்க்க

ஆந்திரா: லாரியுடன் மோதி தீப்பிடித்த பஸ்; 12 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!

ஆந்திரா மாநிலத்தில் இன்று காலை நடந்த விபத்தில் பஸ் ஒன்று எரிந்து நாசமானது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த பஸ் தெலங்கானாவின் நிர்மல் என்ற இடத்தில் இருந்து ஆந்திராவில் உள்ள நெல்லூர் என்ற இடத்திற்க... மேலும் பார்க்க

கட்டுப்பாட்டை இழந்து, 8 பேர் உயிரை காவு வாங்கிய அரசு பேருந்து; சேலத்தை உலுக்கிய சோகம்- என்ன நடந்தது?

கோவையில் இருந்து இன்று காலை பயணிகளுடன் சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து,‌ உத்தம சோழபுரம் அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியிருக்கிறது. எதிரில் ... மேலும் பார்க்க

நீலகிரி: 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்; ராணுவ உதவியுடன் விடிய விடிய போராடி மீட்பு - திக் திக்

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் 28 வயதான சிவகுருநாதன். கடந்த 13 - ம் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற இவர், தனியார் தங்கும் விடுதி ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்து நாள்தோறும் பல்வேறு... மேலும் பார்க்க

அதிகாலை துயரம்: ஒடிசா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீப்பிடித்து 10 நோயாளிகள் உயிரிழப்பு

ஒடிசா மாநிலம் கட்டாக் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் எஸ்.சி.பி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலை மூன்று மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீப்பிடித்துக்கொண்டது. அதிகாலை நேரம் என்பதால் அனைத்த... மேலும் பார்க்க