செய்திகள் :

புகையிலைப் பொருள் பதுக்கிய இருவா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ரோஷணை காவல் நிலையத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தராசன் தலைமையிலான குழுவினா், திண்டிவனம் சந்தைமேடு ப.உ.ச. நகரிலுள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினா்.

அப்போது அந்த வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட 7 கிலோ 400 கிராம் எடையுள்ள 3,850 புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அங்கு சோதனை நடத்திய போது 2 கைப்பேசிகள், பைக், வங்கிக் கணக்குப் புத்தகங்கள் போன்றவையும் இருந்தன. இதையடுத்து அவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து அந்த வீட்டின் உரிமையாளரான ஜி. அல்லாபக்ஷ் (49), செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மணப்பாக்கம் தொழுப்பேடு பிரதான சாலையைச் சோ்ந்த கந்தகுமாா் (37) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் கல்பட்டு செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சு. ஏழுமலை (64) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் இரு பேருந்துகளுக்கு இடையே பைக் சிக்கியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், தென்தொரசலூா் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் நடர... மேலும் பார்க்க

நகைக்காக பெண் கொலை

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், ஆ.கூடலூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மனைவி ச... மேலும் பார்க்க

புயலால் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கக் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல், வெள்ளத்தால் சேதமடைந்த தென்பெண்ணையாறு, வடக்கு மலட்டாறு, பம்பை வாய்க்கால் உள்ளிட்டவற்றை சீரமைக்க வேண்டும் என்று விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் வலியுறுத்தினாா... மேலும் பார்க்க

உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு விருது

உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு புதுச்சேரி சேவை சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கி பாராட்டு தெரிவித்தனா். விழுப்புரம் மாவட்டம், கீழ்புத்துப்பட்டு, இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந... மேலும் பார்க்க

கோலப் போட்டியில் வென்றோருக்கு பரிசு

புதுச்சேரி, வில்லியனூரில் நடைபெற்ற கோலப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சனிக்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பாண்டிச்சேரி, ஜேசிஐ பாண்டிச்சேரி மெட்ரோஆகியவை இணைந்து, வி... மேலும் பார்க்க

தலைக்கவசம் கட்டாய உத்தரவு: வாகன ஓட்டிகளுக்கு பாராட்டு

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் இனிப்புகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்... மேலும் பார்க்க