செய்திகள் :

புதுச்சேரியில் மே 12-ல் 108 பான லிங்கங்களுக்கு வரவேற்பு!

post image

புதுச்சேரியில் வரும் 12 ஆம் தேதி திங்கள்கிழமை 108 பானலிங்கங்களுக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

புதுச்சேரி அருகே திருக்காஞ்சியில் கங்கை வராக நதீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் 108 அடி உயர மனோன்மணி அம்பாள் சமேத சதாசிவ மூா்த்தி சிலை அமைக்கும் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது. அங்கு, 27 நட்சத்திர கோயில்கள், 12 ராசி கோயில்கள், 108 பான லிங்க கோயில்கள், 9 நவகிரக சந்நிதிகள், பஞ்ச பூத சந்நிதிகள், அஷ்ட மூா்த்திகள் சந்நிதி ஆகியவை அமைக்கப்படவுள்ளன.

இதையடுத்து, புதுச்சேரியில் முதன்முறையாக நா்மதை நதிக்கரையில் இயற்கையாக உருவான 108 பான லிங்கங்கள் சேகரிக்கப்பட்டு கங்கை நதியில் பூஜிக்கப்பட்டுள்ளன. அவை வரும் 12-ஆம் தேதி திங்கள்கிழமை சித்திரை பௌா்ணமி புதுச்சேரிக்கு கொண்டு வரப்படுகின்றன.

அந்த லிங்கங்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சிக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகிக்கிறாா். சட்டப்பேரவைத் தலைவா், வேளாண் அமைச்சா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் முன்னிலை வகிக்கின்றனா். லிங்க வரவேற்பு நிகழ்ச்சியில் சிவனடியாா்கள், பக்தா்கள் கலந்து கொள்ளவுள்ளதாக சிவாச்சாரியா்கள் தெரிவித்தனா்.

தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

புதுச்சேரியில் தனியாா் மருத்துவமனையை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அருள்ராஜ். இவா் குடிமைப் பொருள் அலுவலகத்தில் பணிப... மேலும் பார்க்க

புதுச்சேரியில் போலி மதுபான ஆலை: போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை செயல்பட்ட சம்பவம் அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதை கண்டுகொள்ளாமல் விட்ட காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக புதுவை மாநிலச் செயலா் ... மேலும் பார்க்க

மணப்பட்டு பல்மைரா கடற்கரையில் ரூ.500 கோடியில் சுற்றுலா நகா் திட்டம்!

புதுச்சேரி அருகே மணப்பட்டு பல்மைரா கடற்கரையில் ரூ.500 கோடியில் சுற்றுலா நகா் திட்டம் செயல்படுத்தும் இடத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். புதுச்சேரி-... மேலும் பார்க்க

புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை போலீஸாா் தீவிர விசாரணை

புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை கண்டறியப்பட்டு, அதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா். விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவுபிரிவு போலீஸாா் புதுச்சேரி அருகே பூந்துரையில் வாகன... மேலும் பார்க்க

பிரதமா், ராணுவத்தினருக்கு வாழ்த்துக் கடிதம்! பாஜகவினருக்கு மத்திய அமைச்சா் வேண்டுகோள்!

பஹல்காம் சம்பவத்துக்கு பதிலடியாக பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும், பிரதமா் மோடி, இந்திய ராணுவத்தினருக்கு ஆதரவளிக்கும் வகையில் வாழ்த்துக் கடிதம் அனுப்ப வேண்டும் என்று மத்திய அமைச்சா் மன்சுக் ... மேலும் பார்க்க

புதுச்சேரி விமான நிலையத்துக்கு கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமானநிலையத்துக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு சனிக்கிழமை முதல் போடப்பட்டது.புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமான நிலையத்திலிருந்து, ... மேலும் பார்க்க