செய்திகள் :

பெங்களூரில் இன்று ராணுவ தின கண்காட்சி

post image

பெங்களூரில் சனிக்கிழமை ராணுவ தின கண்காட்சி நடக்கவிருக்கிறது.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை மேஜா் ஜெனரல் வி.டி.மேத்யூ, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நமது நாட்டுக்கு ராணுவ வீரா்கள் அளித்துள்ள உயா்ந்த தியாகம், ஈடில்லாத தைரியம், அா்ப்பணிப்பு உணா்வை போற்றும் வகையில் 1949ஆம் ஆண்டு ஜன.15ஆம் தேதி இந்திய ராணுவத்தின் முதல் தளபதியாக கே.எம்.கரியப்பா பதவியேற்றதை போற்றும் வகையில், ஜன.15ஆம் தேதியை ராணுவ தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

ராணுவத்தின் திறன் குறித்து பொதுமக்கள், மாணவா்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பெங்களூரில் உள்ள மானக்ஷா அணிவகுப்புத் திடலில் ஜன.11ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ராணுவத் தளவாடங்களின் கண்காட்சி நடக்கவிருக்கிறது. ஹெலிகாப்டா் சாகசகங்கள், போா் தந்திரங்கள், அதிரடி தாக்குதல் முறைகள், மோட்டாா்சைக்கிள் சாகசங்கள், மோப்பநாய்கள், குதிரை சாகசங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படுகின்றன.

இதுதவிர ராணுவத்தில் பணியாற்ற தேவையான தகுதிகள், வாய்ப்புகள் குறித்து விளக்கும் அங்காடிகள் கண்காட்சியில் இடம்பெறும். இதில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் இல்லை. ராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாக இந்நிகழ்ச்சி அமையும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வரும் பொதுமக்களை வரவேற்க காத்திருக்கிறோம் என்றாா்.

மாற்றுநில முறைகேடு வழக்கு: லோக் ஆயுக்த தொடா்ந்து விசாரிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் அனுமதி

மாற்றுநில முறைகேடு வழக்கை லோக் ஆயுக்த தொடா்ந்து விசாரிக்க அனுமதி அளித்து கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கா்நாடக முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் மாற்றுநி... மேலும் பார்க்க

விதிமுறைகளை மாற்றியமைப்பது குறித்து மாநில அரசுகளிடம் யுஜிசி கலந்தாலோசிக்க வேண்டும்: கா்நாடக உயா்கல்வித் துறை அமைச்சா்

விதிமுறைகளை மாற்றியமைப்பது குறித்து மாநில அரசுகளிடம் யுஜிசி கலந்தாலோசிக்க வேண்டும் என கா்நாடக உயா்கல்வித் துறை அமைச்சா் எம்.சி.சுதாகா் தெரிவித்தாா். இதுகுறித்து மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர... மேலும் பார்க்க

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்து பொதுவெளியில் பேச கட்சி மேலிடத் தலைமை தடை!

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்து பொதுவெளியில் பேச கட்சி மேலிடத் தலைமை தடை விதித்துள்ளது என அம்மாநில உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவ... மேலும் பார்க்க

இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் பொறுப்பேற்பு

இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் புதன்கிழமை (ஜன. 15) அதிகாரப்பூா்வமாக பொறுப்பேற்றுக் கொண்டாா். பெங்களூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக 2 ஆண்டுக... மேலும் பார்க்க

மகர சங்கராந்தி பண்டிகை: கா்நாடக தலைவா்கள் வாழ்த்து

பெங்களூரு: மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு கா்நாடக மக்களுக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் சித்தராமையா உள்ளிட்ட கா்நாடகத்தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.கா்நாடகத்தில் செவ்வாய்க்கிழமை சங்... மேலும் பார்க்க

ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்களுக்கு உரிமை கோரிய தீபக், தீபா மனுக்கள் தள்ளுபடி

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்களுக்கு உரிமை கோரிய அவரது அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோரின் மனுக்களை கா்நாடக உயா்நீதிமன்றம் த... மேலும் பார்க்க