செய்திகள் :

பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; சாகும்வரை ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்

post image

நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இன்ஜினியர் சுஜி பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களுடன் நெருக்கமாக இருந்து வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் 2020-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தன்னைக் காதலிப்பதாக நடித்து நெருக்கமாக இருந்ததாகவும், அதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாகக் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி, சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் நாகர்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த வழக்கில் 2020 ஏப்ரல் 24-ம் தேதி காசி கைது செய்யப்பட்டார். காசியின் மொபைல் போனை போலீஸார் பரிசோதித்து பார்த்தபோது, பல பெண்களை வலையில் வீழ்த்தி நெருக்கமாக இருந்த வீடியோக்கள் சிக்கின. காசியை போலீஸார் விசாரித்தபோது தமிழகம் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்களைத் தனது வலையில் வீழ்த்தி பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது.

சிறுமி உள்பட 7 பெண்கள் காசி மீது பாலியல் புகார் அளித்திருந்தனர். ஒரு கந்து வட்டி வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து காசி வழக்கு கடந்த 2020 மே 27-ம் தேதி சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தனது ஜிம் பாடியைக் காட்டியும், தன்னை பணக்காரனாகக் காட்டியும் பெண்களிடம் காசி நெருங்கியிருக்கிறான். லேப்டாப் மற்றும் மொபைல் போன்களில் இருந்த வீடியோவில் மட்டுமே 150-க்கும் மேற்பட்ட பெண்களின் 1900 வீடியோக்கள் இருந்துள்ளன.

ஃபைல் போட்டோ
காசி என்ற சுஜி

காசி வலையில் வீழும் பெண்களின் மொபைல் எண்களைத் தனது நண்பர்களுக்கும் கொடுத்துள்ளார். அந்தப் பெண்களைத் தொடர்புகொண்டு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக காசியின் நண்பர்கள் டேசன் ஜினோ, தினேஷ், கெளதம் உள்ளிட்டோ கைது செய்யப்பட்டிருந்தனர்.

நாகர்கோவில் காசி மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 2 போக்ஸோ வழக்குகள், ஒரு கந்துவட்டி வழக்கு என மொத்தம் 8 வழக்குகள் பதியப்பட்டன. காசி மீதான 6 வழக்குகள் நாகர்கோவிலில் உள்ள மகிளா கோர்ட்டிலும், ஒரு வழக்கு போக்ஸோ கோர்ட்டிலும், மற்றொரு வழக்கு 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டிலும் விசாரிக்கப்பட்டன.

பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த காசி என்ற சுஜி

இதில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 22 வயது இளம்பெண் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் மகிளா கோர்ட் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம், இளம்பெண்ணை அந்தரங்க வீடியோ எடுத்த குற்றத்துக்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்தத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று 2023-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. நாகர்கோவில் மகிளா கோர்ட் அளித்த தீர்ப்பை மதுரை உயர்நீதிமன்றக் கிளை இன்று உறுதிப்படுத்தி உள்ளது.

டிஜிட்டல் யுகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு, இந்தத் தீர்ப்பு முக்கிய பாடமாக அமைய வேண்டும் எனக்கூறி இந்தத் தீர்ப்பைப் பலரும் வரவேற்றுள்ளனர்.

"நான் திவ்யா பேசுறேன்.!" - ஒரு வாட்ஸ்அப் மெசேஜ்; ரூ.21 கோடி இழந்த ஆடிட்டர் - முழுப் பின்னணி!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 70 வயது மூத்த ஆடிட்டர் (CA) அசோக் விஜயவர்கியா. இவர் மத்தியப் பிரதேச வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் தலைமை தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். கடந்த... மேலும் பார்க்க

லாக்கப் மரணம்: 'தலையில் ரத்தக்கட்டு, கழுத்தில் காயம்' - கடும் தாக்குதலால் கொல்லப்பட்ட சபரி வர்மன்

நாகர்கோவில் கிளைச் சிறையில் சபரிவர்மன் (34) என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர... மேலும் பார்க்க

சபரி வர்மன் லாக்கப் மரணம்: 'மனைவிக்கு அரசு வேலை வழங்க உறுதி' - கடைசிவரை போராடிய திமுக எம்.எல்.ஏ

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரி வர்மன் (34) சிறையில் அடித்து கொலைச் செய்யப்பட்ட வழக்கில் சிறை வார்டன் ஜெகன், இரண்டாம் நிலை காவலர்... மேலும் பார்க்க

நாகர்கோவில்: உடலில் 19 காயங்கள்; சிறையில் இளைஞரை அடித்துக் கொன்றது உறுதி - 3 வார்டன்கள் கைது!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரி வர்மன் (34). வீட்டுக்கு அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும் சபரி வர்மன் குட்கா விற்பனை செய்ததாக கட... மேலும் பார்க்க

டிடர்ஜென்ட், பாமாயில் மூலம் செயற்கை பால் தயாரிப்பு: மகாராஷ்டிரா முழுவதும் 2.3 கோடி லிட்டர் விநியோகம்

மகாராஷ்டிராவில் பால் கலப்படத்திற்கு எதிராக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தின் பூம் தாலுகாவில் நடத்திய ரெய்டில் பெரிய அளவில் பால் கலப்படம் நடப்பது கண... மேலும் பார்க்க

தூத்துக்குடி: 10 சவரன் தங்க நகைக்காக பெரியம்மாவைக் கொன்றுவிட்டு நாடகமாடிய மகன்; சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள மிட்டாவடமலாபுரத்தைச் சேர்ந்தவர் திருக்கண்ணன் என்பவரின் மனைவி கலாவதி. இவர், சத்துனவு திட்ட மேற்பார்வையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு இரு மகன்... மேலும் பார்க்க