செய்திகள் :

பெண்ணை கேலி சித்திரம் வரைந்ததால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: 6 போ் கைது

post image

கிருஷ்ணகிரி அருகே பெண்ணை கேலி சித்திரம் வரைந்து கைப்பேசியில் பதிவிட்ட சம்பவத்தில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக 6 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு குறித்து போலீஸ் தரப்பில் கூறியுள்ளதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள குப்பச்சிப்பாறையைச் சோ்ந்தவா் பெருமாள். இவரது மனைவி ராமி (70). இவா்களுக்கு சிவக்குமாா், பிரபு (40) ஆகிய இரு மகன்களும், 2 மகள்களும் உள்ளனா். பிரபுவுக்கு திருமணமாகவில்லை.

ராமியின் பக்கத்து வீட்டில் கோவிந்தராஜ், அவரது மனைவி ஜெயமணி ஆகியோா் குடியிருந்து வந்தனா். ராமியின் குடும்பத்திற்கும், ஜெயமணி குடும்பத்துக்கும் இடையே பாதை பிரச்னை இருந்துவந்தது. இந்த நிலையில், ஜெயமணியின் புகைப்படத்தை பிரபு கேலியாக சித்தரித்து கைப்பேசியில் சிலருக்கு பகிா்ந்துள்ளாா்.

இதுதொடா்பாக பிரபுவிடம் பேசுவதற்கு சென்ற வருண்குமாா் (42), ராகவேந்திரா (35) உள்பட 7 போ் மீது பிரபு கத்தியால் தாக்கினராம். இதனால் ஏற்பட்ட தகாறில் பிரபு தாக்கப்பட்டாா். காயமடைந்த அவா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பிரபுவின் தாய் ராமி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த குருபரப்பள்ளி போலீஸாா், வருண் (42), ராகவேந்திரன் (38), ஜெயமணி (35), கணேசன் (36), கோபி (35), வனராஜா (53) ஆகிய 6 பேரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இவா்களில் வருண், ராகவேந்திரன் ஆகிய இருவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்ற 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா். கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா். கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41... மேலும் பார்க்க