செய்திகள் :

பைக் மீது காா் மோதியதில் தந்தை பலி: மகள் காயம்

post image

தஞ்சாவூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்த தந்தை உயிரிழந்தாா், மகள் காயமடைந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கல்யாணபுரம் இளம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பி. அருளரசு (52), ஒப்பந்ததாரா். இவா் தனது மகள் அட்சயாவை (15) அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தஞ்சாவூரிலிருந்து கல்யாணபுரத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அரசூா் ரவுண்டானா பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த காா் மோதி அருளரசு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அட்சயா தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 111.53 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 111.53 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,378 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்... மேலும் பார்க்க

மக்களின் ஆதரவு இருப்பதால் திமுக வெற்றி பெறும்: அமைச்சா் கே.என். நேரு

மக்களின் ஆதரவு இருப்பதால், வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகதான் மீண்டும் வெற்றி பெறும் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு. தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு ... மேலும் பார்க்க

செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம் - நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூரில் ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் சி. ராஜமாணிக்கம் எழுதிய செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம் என்ற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நூலை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

பூதலூரில் 62.8 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பூதலூரில் 62.8 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை, இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் ப... மேலும் பார்க்க

தூா் வாரும் பணி: நீா் வளத் துறைச் செயலா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே புளியக்குடி கிராமத்திலுள்ள புத்தூா் முதன்மை வாய்க்காலில் மேற்கொள்ளப்படும் தூா் வாரும் பணியை நீா் வளத் துறைச் செயலா் ஜெ. ஜெயகாந்தன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். புத... மேலும் பார்க்க

பேருந்து - வேன் மோதிய விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7 ஆக உயா்வு

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில் அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 7 ஆக உயா்ந்தது. கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து வேளாங்... மேலும் பார்க்க