செய்திகள் :

பொங்கல் முடிந்ததும் பரந்தூர் செல்கிறார் விஜய்

post image

ஜனவரி 3ஆவது வாரத்தில் பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் செல்லவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

விமான நிலைய அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் பரந்தூா் விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் பொங்கல் முடிந்ததும் பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் செல்லவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அனுமதி கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக கடிதம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்!

விஜய் வருகைக்கு ஜன.19 அல்லது ஜன.20ஆம் தேதிகளில் அனுமதி தரும்படி கட்சி தரப்பில் இந்த கடிதம் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

அரசியல் கட்சி அறிவித்த பின்னர் முதல்முறையாக களத்திற்கு விஜய் செல்லவுள்ளார். கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், தற்போது கட்சி பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 10 பேர் வேட்பு மனு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல் நாளில் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், இன்று 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பே... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

பொங்கல் திருநாளையொட்டி உலகத் தமிழர் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், முத்தமிழ், முச்சங்கம், முக்கனி, மூவேந்தர், முக்கொடி கொ... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒ... மேலும் பார்க்க

பொங்களன்று 3 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,13.01-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்... மேலும் பார்க்க

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு- ஆளுநர் விருது அறிவிப்பு

ஆளுநர் விருது-2024 சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வென்றவர்களின் விவரங்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க

தமிழக காவல்துறையினர் 3186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு!

சென்னை: 2025ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி, தமிழக காவல்துறையைச் சேர்ந்த 3186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், 2025 பொங்கல் ... மேலும் பார்க்க