செய்திகள் :

மகாராஷ்டிராவில் கிணற்றுக்குள் விழுந்த கார்; 7 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி; விபத்து நடந்தது எப்படி?

post image

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகில் உள்ள தீண்டோரி சிவாஜி நகரில் கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துள்ளானது.

கார் சாலையோர தடுப்பை மீறி அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்தது. கிணறு முழுக்க தண்ணீர் இருந்தது. இதனால் காருக்குள் இருந்தவர்களால் வெளியில் வர முடியவில்லை. விபத்தைப் பார்த்தவர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

கார் கிணற்றுக்குள் விழுந்தது குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து வந்து தண்ணீருக்குள் கிடந்த காரை கிரேன் மூலம் வெளியில் எடுத்தனர்.

விபத்துள்ளான கார்
விபத்துள்ளான கார்

காரில் இருந்த அனைவரும் மூச்சு விடமுடியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். காரில் அதிக அளவில் மாணவர்கள் இருந்தனர். அவர்கள் தங்களது உறவினர்களுடன் தனியார் கோச்சிங் கிளாஸ் ஒன்றுக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்தக் கோரச் சம்பவம் நடந்தது. விபத்தில் மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

அவர்களில் 7 பேர் மாணவர்கள் ஆவர். இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் ஆழ்ந்த அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இறந்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

கேரளம்: திருச்சூர் பூரத்துக்கு தயாரித்த பட்டாசு வெடித்து விபத்து; 13 பேர் பலி, 5 பேர் கவலைக்கிடம்!

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் திருச்சூர் பூரம் எனப்படும் விழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். திருச்சூர் பூரத்தின்போது பட்டாசுகள் போட்டிப்போட்டுக்கொண்டு வெடிக்கப்படுவது மிகவும் பிரமாண்டமான நிகழ்வா... மேலும் பார்க்க

திறப்பு விழா நேரத்தில் விபரீதம்: ராஜஸ்தான் பெட்ரோகெமிக்கல் வளாகத்தில் தீ - பிரதமர் மோடி வருகை ரத்து!

ராஜஸ்தான் மாநிலம், பலோத்ராவில் உள்ள பச் பத்ரா (Pachpadra) சுத்திகரிப்பு நிலையத்தை பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கவிருந்த நிலையில், இன்று அங்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாகத் திற... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீரில் கோர விபத்து: மலைப்பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 15-க்கும் மேற்பட்டோர் பலி!

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று ஒரு பயணிகள் பேருந்து மலையிலிருந்து உருண்டு விழுந்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்... மேலும் பார்க்க

ரீல்ஸ் வீடியோவுக்காக கையில் துப்பாக்கியுடன் ஒரே பைக்கில் பயணம்; விபத்தில் சிக்கி 3 சகோதரர்கள் பலி

மத்திய பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில் 3 சகோதரர்கள் ஒரே பைக்கில் அமர்ந்து கொண்டு சென்றனர். அவர்களில் ஒருவரிடம் துப்பாக்கி இருந்தது. அவர்கள் முன்னால் செல்ல பின்னால் இருந்து மற்றொரு பைக்கில் அவர்களை... மேலும் பார்க்க

விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 23 பேர் பலி, 6 பேர் காயம்!

விருதுநகரில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் அங்கு பதற்றநிலை நிலவுகிறது. ... மேலும் பார்க்க

விருதுநகர்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து; 18 பேர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.விருதுநகர் பட்டாசு ஆலை விபத்துவிருதுநகர் மாவட்டத்திலுள்ள கட்டனா... மேலும் பார்க்க