செய்திகள் :

மகாராஷ்டிரா தேர்தல்: 'பெண்களுக்கு முன்கூட்டியே ரூ. 1500' - பாஜகவின் திட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தடை

post image

மகாராஷ்டிராவில் வரும் 15ம் தேதி மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன.

உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் சேர்ந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர். இதே போன்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாரும் இத்தேர்தல் பிரசாரத்திற்கு வரவில்லை. இத்தேர்தலையொட்டி தேர்தலுக்கு முந்தைய தினத்தில் லட்கி பெஹின் திட்டத்தில் வழங்கப்படும் பணத்தை முன்கூட்டியே வழங்க மாநில அரசு திட்டமிட்டு இருந்தது.

இதற்காக டிசம்பர் மாதம் வழங்க வேண்டிய 1500 ருபாயை பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தாமல் இருந்தது. டிசம்பர் மாத தவணையோடு ஜனவரி மாத தொகையை முன்கூட்டியே சேர்த்து ரூ.3000-ஆக பெண்களின் வங்கிக் கணக்கில் நாளை செலுத்த திட்டமிட்டு இருந்தது.

ஏக்நாத் ஷிண்டே-பட்னாவிஸ்
ஏக்நாத் ஷிண்டே-பட்னாவிஸ்

இது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தன. இது குறித்து காங்கிரஸ் கட்சி மாநிலத் தேர்தல் அதிகாரி வாக்மாரேயிக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதையடுத்து ஜனவரி மாத தொகையை முன்கூட்டியே பெண்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்க மாநிலத் தேர்தல் அதிகாரி வாக்மாரே தடை விதித்து இருக்கிறார்.

டிசம்பர் மாதத்திற்குக் கொடுக்கவேண்டிய நிலுவைத் தொகையைக் கொடுக்கலாம் என்றும், ஆனால் ஜனவரி மாதத்திற்குக் கொடுக்க வேண்டிய தொகையை முன்கூட்டியே கொடுக்கக்கூடாது என்றும் வாக்மாரே மாநிலத் தலைமை செயலாளர் ராஜேஷ் அகர்வாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு இத்திட்டத்தில் புதிதாக பெண்களைச் சேர்க்கக்கூடாது என்றும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளுக்கு எந்த வித தடையும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் அதிகாரியின் உத்தரவு பா.ஜ.க கூட்டணி அரசுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் இதேபோன்று தேர்தலுக்கு முன்பு பெண்களின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.

முன்னதாக மாநில அமைச்சர் கிரீஷ் மகாஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகரசங்கராந்திக்கு முன்பு முதல்வரின் சிறப்பு பரிசாக லட்கி பெஹின் திட்டத்தில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்திற்கான தவணைத் தொகை ரூ.3000 பெண்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது இது போன்று வழங்குவது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் கட்சி மாநிலத் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியது. அதனைத் தொடர்ந்தே ஜனவரி மாதத்திற்கான தொகையை முன்கூட்டியே வழங்க தேர்தல் அதிகாரி தினேஷ் வாக்மாரே தடை விதித்து இருக்கிறார்.

ஈரானுடன் வணிகமா? ட்ரம்ப் போட்ட 25% வரி; மீண்டும்‌ இந்தியாவுக்குப் பாதிப்பு; மொத்தம் எவ்வளவு வரி?

கடந்த ஜூன் மாதம், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்தது. அப்போது ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது.இதனால், கடந்த சில மாதங்களாக, ஈரான், அமெரிக்காவிற்கு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.இ... மேலும் பார்க்க

மும்பை தேர்தல்: திணறும் தாக்கரே சகோதரர்கள்; தாராவியைத் தக்கவைக்க தமிழ் வேட்பாளர்கள் தீவிரம்!

மும்பை மாநகராட்சிக்கு வரும் 15ம் தேதி நடக்கும் தேர்தல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பா.ஜ.க-சிவசேனா(ஷிண்டே) கூட்டணி தனியாகவும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் அவரது சித்தப்பா மகன் ராஜ்... மேலும் பார்க்க

தேமுதிக: `எல்லா பக்கமும் ஒரு துண்டு!' - தப்பு கணக்கால் சரிந்த வாக்கு | கூட்டணி சர்க்கஸ் 01

குழம்பி நிற்கும் காங்கிரஸ். ரீல் ஓட்டும் பிரேமலதா. 'மெகா கூட்டணி' என மணற் கோட்டை கட்டும் எடப்பாடி. கூட்டணி வலுவாக இருக்கிறது என தினசரி அலாரம் போல அலறும் திமுக. கூட்டணிக்காக காத்திருக்கிறது தவெக. கடந்த... மேலும் பார்க்க

Birth Certificate பெற, EB Bill கட்ட WhatsApp-ல் ஒரு மெசேஜ் போதும்; தமிழக அரசின் புது அப்டேட் |How to

பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் பெற... EB பில் கட்ட வரிசையில் நிற்பது... அலையோ அலை என அலைந்து கொண்டிருப்பது எல்லாம் இனி வேண்டாம்.வாட்ஸ்ஆப்பில் சில கிளிக்குகளிலேயே விண்ணப்பித்துவிடலாம்.வாட்ஸ்ஆப... மேலும் பார்க்க