செய்திகள் :

ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன் 17 வயது சிறுவன் ஓட்டம்; 3 மணி நேரத்தில் சிக்கியது எப்படி?

post image

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் வசிப்பவர் சுஹாஷ் (48). மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மயிலாடுதுறை ஸ்டேட் பேங்க் ரோடு அருகே ஸ்ரீ கிருஷ்ணா டெஸ்டிங் ஏஜென்சி என்ற பெயரில் தங்க நகைகளை உருக்கிக் கட்டிகளாக மாற்றி விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறார்.

திருட்டு
திருட்டு

இவர் தனது கடையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனைத் தனக்கு உதவியாளராக கடந்த வாரம் பணிக்குச் சேர்த்துள்ளார். நேற்று வழக்கம் போல் கடை செயல்பட்டுள்ளது.

மாலை கடையில் சுஹாஷ் மற்றும் அந்தச் சிறுவன் என இருவர் மட்டுமே இருந்துள்ளனர். இந்நிலையில், சுகாஷ் ஒன்றரை கிலோ நகைகளை உருக்கி அதனைக் கட்டியாக மாற்றினார். இதையடுத்து அதை எடை போட்டு வருமாறு சிறுவனிடம் கொடுத்துள்ளார்.

அதை எடுத்துக்கொண்டு கடையின் முன்பகுதிக்கு எடை போடப் போன சிறுவன் மீண்டும் கடையின் உள்பகுதிக்கு வரவில்லை. நீண்ட நேரம் ஆனதால் சுஹாஷ் வந்து பார்க்க சிறுவனைக் காணவில்லை.

சந்தேகமடைந்த சுஹாஷ் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். மேலும், இது குறித்து மயிலாடுதுறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

அதை எடுத்துக்கொண்டு கடையின் முன் பகுதிக்கு எடை போட போன சிறுவன் மீண்டும் கடையின் உள்பகுதிக்கு வரவில்லை. நீண்ட நேரம் ஆனதால் சுஹாஷ் வந்து பார்க்க சிறுவனைக் காணவில்லை.

சந்தேகமடைந்த சுஹாஷ் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். மேலும், இது குறித்து மயிலாடுதுறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை

மயிலாடுதுறை எஸ்பி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து தனிப்படை அமைத்து சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஒன்றரை கிலோ தங்கக் கட்டிகளுடன் வெளியூருக்குத் தப்பிச் செல்வதற்காக மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் பதுங்கி இருந்த சிறுவனை போலீஸார் பிடித்ததுடன் தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து சிறுவனிடம் விசாரணை நடத்தி விட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். சுமார் ரூ.2 கோடி மதிப்புடைய தங்க நகைக் கட்டிகளுடன் ஓடிய சிறுவனை 3 மணி நேரத்தில் மயிலாடுதுறை போலீஸார் பிடித்தனர்.

'30% வட்டிக்கு ரூ.80 லட்சம் கடன்' - மகன் திரும்பச் செலுத்தாததால் 62 வயது தாயைக் கடத்திய கும்பல்

மும்பை அந்தேரி ஜுகு பகுதியில் வசிக்கும் மோனில் என்பவர் ஜாபர் குரேஷி என்பவரிடம் ரூ.80 லட்சத்தை 30 சதவீத வட்டிக்கு வாங்கி இருந்தார். ஆனால் மோனல் குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்ல... மேலும் பார்க்க

ம.பி: 145 வழக்குகளில், 6 பேரை மீண்டும் மீண்டும் அரசு சாட்சிகளாக நிறுத்திய காவலர் - சாட்சி மோசடி

மத்திய பிரதேச மாநிலத்தில் போலீஸார் வழக்குகளில் அரசு சாட்சிகளை சேர்ப்பதில் மோசடியில் ஈடுபட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பொதுவாக வழக்குகளில் அரசு சார்பாக சாட்சி சொல்ல யாரும் வரமாட்டார்கள்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் முன்விரோதம்; Instagram ரீல்ஸால் கோபம்; இளைஞர் படுகொலையின் பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், கீழ வேப்பங்குடி பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரது மகன் இன்பரசன் (வயது: 25). இவர், சென்ட்ரிங் வேலை செய்யும் கூலித் தொழிலாளியாக இருந்து வந்தார்.மேலும், இவர் ஜல்லிக்கட்டு காளைய... மேலும் பார்க்க

ஒரே லிங்க்.. ஒட்டு மொத்தமாக கொள்ளை; கோவை முதியவரை பதறவிட்ட குஜராத் சைபர் கொள்ளையர்கள்!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திர போஸ் (71). அவரின் செல்போன் எண்ணிற்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ அலுவலகம் என்கிற பெயரில் ஒரு லிங்க் வந்துள்ளது.சைபர் கொள்ளைஅந்த லிங்கை திறந... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கு DNA பரிசோதனை; கனடாவில் இருந்து திரும்பும் இளம்பெண்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ராகுல் மாங்கூட்டத்தில் பாலக்காடு தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னா... மேலும் பார்க்க

சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரௌடி கொலை - அதிகாலையில் வந்த `ஹெல்மெட்' மர்ம நபர்கள் யார்?

சென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதி என்கிற ஆதிகேசவன் (23). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாள... மேலும் பார்க்க