செய்திகள் :

மணிப்பூர்: தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது!

post image

மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அம்மாநில காவல் துறையினர் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் இணைந்து பராக் நதிக்கரையில் உள்ள துயிசோலன் கிராமத்தில் கடந்த ஜன.9 அன்று மேற்கொண்ட சோதனையில் ஹமார் பீப்பல்ஸ் கன்வென்ஷன் (டெமாக்கட்ரிக்) எனும் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், அவரிடம் இருந்து 20 வெடிக்குச்சிகள், 11 டெட்டோனேட்டர்கள், 44 சோப்பு டப்பாக்களில் நிரப்பப்பட்ட சுமார் 457 கிராம் அளவிலான போதைப் பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க:அசாமில் 10 மாதக் குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று!

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, குக்கி-ஜோ சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பெர்ஸாவல் மாவட்டத்தில் இருந்து அவர் ஏன் வந்தார் என்று விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினருக்கு மத்தியில் நடைபெற்று வரும் கலவரத்தில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜீவசமாதி அடைந்ததாகக் கூறப்படும் நபரின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது!

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஜீவசமாதி அடைந்ததாகக் கூறி அடக்கம் செய்யப்பட்டவரின் உடல் காவல் துறையினரால் தோண்டியெடுக்கப்பட்டது.நெய்யத்திங்கராப் பகுதியின் கவுவிளக்கத்தில் கோபன் சுவாமி (வயது 69)... மேலும் பார்க்க

'ஆம்பள’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள்.. ஹிப்ஹாப் தமிழா பகிர்ந்த பதிவு!

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் தயாரித்து நடித்த ‘ஆம்பள’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் (ஜன.15) 10 ஆண்டுகள் ஆகின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு நகைச்சுவைக் கலந்த ஆக்‌ஷன் படமாக திரையரங்குகளில் வெளியான ஆம... மேலும் பார்க்க

23 தீவிரவாதிகள் கைது! வரைபடங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல்!

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் 23 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.அம்மாகாணத்தின் லாஹூர் நகர் பகுதியில் பஞ்சாப் காவல் துறையினர் மேற்கொண்ட... மேலும் பார்க்க

மூடுபனியால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதல்! 100 ஆடுகள் பலி! 3 பேர் படுகாயம்!

உத்தரப் பிரதேசத்தில் இன்று (ஜன.15) காலை நிலவிய மோசமான வானிலை மற்றும் மூடுபனியால் நெடுஞ்சாலையில் சென்ற வாகனஙக்ள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. அம்மாநிலத்தின் அக்ரா-தில்லி நெடுஞ்சாலையில் இ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: வங்கதேசப் பெண்கள் 3 பேர் கைது!

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வாழ்ந்துவந்த வங்கதேசத்தைச் சேர்ந்த பெண்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தாணேவின் உல்ஹாஸ் நகர் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலி... மேலும் பார்க்க

விரைவில் 'வாடிவாசல்' படப்பிடிப்பு!

விரைவில் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில்... மேலும் பார்க்க