செய்திகள் :

மதுரை: சீரமைக்கப்படாத மலைச்சாலை; கண்டுகொள்ளாத அரசு; 40 ஆண்டுகளாக அவதிப்படும் மக்கள்; பின்னணி என்ன?

post image

மதுரை - தேனி மாவட்டங்களை இணைக்கும் மல்லப்புரம் - மயிலாடும்பாறை சாலையைச் சீரமைத்து, பொதுப்போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றவில்லையென்றால் தேர்தலை புறக்கணிக்க இரண்டு மாவட்ட கிராம மக்கள் முடிவெடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சப் கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்
சப் கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்

மதுரை மாவட்டம் எழுமலை அருகே மல்லப்புரத்திலிருந்து தேனி மாவட்டத்திலுள்ள மயிலாடும்பாறையை இணைக்கும் 8 கிலோ மீட்டர் தூர மலைப்பாதை மூலம் 30 கிலோ மீட்டர் தூரமும், பயண நேரமும் மிச்சமாகும் என்பதால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சாலையைச் சீரமைத்து அகலப்படுத்தி தர வேண்டும் என்று 40 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியிலுள்ள இரண்டு மாவட்ட கிராம மக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள இந்த வனப்பகுதி சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாக இருப்பதால் மல்லப்புரம் - மயிலாடும்பாறை சாலையை அகலப்படுத்தி, போக்குவரத்து வசதி ஏற்படுத்த வனத்துறை அனுமதிக்கவில்லை.

அதுமட்டுமின்றி இப்பகுதி புலிகள் சரணாலயமாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதனால் ஏற்கனவே இருக்கின்ற சாலையைச் சீரமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வனத்துறையினர், சிறிய ரக வாகனங்கள் செல்லவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

மோசமான சாலை
மோசமான சாலை

சமீபகாலமாகப் பெய்து வரும் மழை காரணமாகவும் இந்தச் சாலை குண்டும் குழியுமாக மாறி சிறிய ரக வாகன ஓட்டிகளுக்குப் பெரும் அவதியை ஏற்படுத்தி வருகிறது. தேனி மாவட்டத்திலிருந்து விவசாயப் பொருட்களை சந்தைபடுத்த வரும் விவசாயிகளும், பள்ளி கல்லூரிக்கு வரும் மாணவ மாணவிகளும் பெரும் சிரமத்தைச் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்தச் சாலையைச் சீரமைத்து, பொது போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுக்க கோரி இரு மாவட்ட பகுதிகளில் உள்ள கிராம மக்களின் முக்கிய பிரதிநிதிகள் உசிலம்பட்டி சப் கலெக்டர் உட்கர்ஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்கள், "சரியான சாலை வசதி இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்டாகாலமாகச் சிரமத்தைச் சந்தித்து வருகிறோம். மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு பகுதியில் விளையும் விவசாயப் பொருட்கள் சேடப்பட்டி, பேரையூர் வழியாக விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லவும், இப்பகுதியிலுள்ளவர்கள் அங்கு செல்லவும் இந்தச் சாலை உபயோகமாக இருக்கும்.

முதலில் இந்தச் சாலையைச் சீரமைத்து தரவேண்டும், அடுத்ததாக போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரவில்லையென்றால் இரு மாவட்டப் பகுதிகளில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.

”கோவை, மதுரை மெட்ரோ திட்ட விவகாரம்; யார் சொல்வதை நம்புவது என்றே தெரியவில்லை!”- அப்பாவு

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு. அப்போது பேசிய அவர், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதா குறித்து எவ்வ... மேலும் பார்க்க

Sanitary Workers : கொளத்தூரில் முதல்வரை எதிர்த்து தூய்மைப் பணியாளரை போட்டியிட செய்வோம்! - கு.பாரதி

பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் அம்பத்தூரில் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தை முன்னெடுத்து வரும் உழைப்போர் உரிமை... மேலும் பார்க்க

`திமுக, காங்கிரஸ் கூட்டணி இறுதியாகிறதா?’ முந்தி அறிவித்த ப.சி; `திடீர்’ குழு அமைப்பின் பின்னணி!

2021-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் தி.மு.க, கா... மேலும் பார்க்க

சேலம் திமுக நிர்வாகி கொலை: ``ரூ. 5000-க்கு துப்பாக்கிகள் கிடைக்கின்றன" - அன்புமணி குற்றச்சாட்டு

சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளரும், விவசாயியுமான ராஜேந்திரன் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இ... மேலும் பார்க்க

`வேட்புமனு வாபஸ் அச்சம்’ - கூட்டணியில் இருந்தும் வேட்பாளர்களை ஹோட்டலில் தங்கவைத்த பாஜக, சிவசேனா

மகாராஷ்டிராவில் வரும் டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிந்து, மனுவை வாபஸ் பெறும் நாள் நேற்றோடு முடிந்தது. வேட்பு மனுவை திரும்ப பெறும் கடைசி நாளி... மேலும் பார்க்க

`ராஜ் தாக்கரே வேண்டும்’ உத்தவ் உறுதி; காங்கிரஸ் முட்டுக்கட்டை - சரத் பவார் சமாதானம் கைகொடுக்குமா?

மகாராஷ்டிராவில் தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ம் தேதி நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தல் முடிந்த பிறகு அடுத்த கட்டமாக ஜனவரி மாதம் மும்பை உட்பட மாநிலம் முழுவத... மேலும் பார்க்க