செய்திகள் :

மது போதையில் ஆம்னி பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள்; காட்டிக்கொடுத்த மூச்சு பரிசோதனை கருவி!

post image

தூத்துக்குடி நகர போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீஸார் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் முன்பு இரவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  

அப்போது தூத்துக்குடியில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி டிரைவர்களுக்கு மூச்சு பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்தனர்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்

திருச்செந்தூர், உடன்குடி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் 3 ஆம்னி பேருந்து டிரைவர்களைப் பரிசோதனை செய்ததில் 3 பேருந்து டிரைவர்களும் மதுபோதையில் இருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து மது போதையில் ஆம்னி பேருந்துகளை ஓட்டி வந்த டிரைவர்கள் மீது அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

3 டிரைவர்களுக்கும் தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டதுடன் அவர்களின் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மது போதையில் ஆம்னி பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள்
மது போதையில் ஆம்னி பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள்

தொடர்ந்து போலீஸாரே 3 பேருந்துகளையும் இயக்கி ஓரமாக நிறுத்தி வைத்தனர். பேருந்து சுமார் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் மாற்று டிரைவர்கள் வரவழைக்கப்பட்டு 3 பேருந்துகளும் சென்னைக்கு இயக்கப்பட்டன.

"3 டிரைவர்கள் சென்னை வரை ஆம்னி பேருந்துகளை இயக்கியிருந்தால் ஒருவேளை விபத்து கூட ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. போக்குவரத்து போலீஸாரின் சோதனையினால் டிரைவர்கள் சிக்கிக் கொண்டனர்” என்றனர் பயணிகள்.

"அவர் பக்கத்திலேயே என்னையும் அடக்கம் செய்யுங்கள்" - காதலன் இறந்ததால் பெண் எடுத்த விபரீத முடிவு

கேரளம் மாநிலம் காசர்கோடு மாவட்டம் கும்பளா அருகே உள்ள கிதூர் குண்டங்கேரடுக்கை பகுதியைச் சேர்ந்த ஜெயானந்தன் - தேவி தம்பதியினரின் மகள் பிரபுல்லா (26). பாலக்காட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக... மேலும் பார்க்க

சிவகாசி: மகளைக் காதலித்த 2 இளைஞர்களை அடுத்தடுத்து கொலை செய்த தந்தை; சிக்கியது எப்படி?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகிலுள்ள செவளூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். லாரி டிரைவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் 17 வயது மகளைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தெரிந்... மேலும் பார்க்க

`ஒரே இடத்தில் 364 ரௌடிகள்; இனிமேல் எந்த குற்றத்திலும் ஈடுபடக்கூடாது' - திருச்சி எஸ்.பி வார்னிங்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 364 பேரை திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் வரவழைத்தனர். அவர்கள் அனைவரையு... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `சரியாக பூட்டப்படாத கைதி அறை; கண்ணயர்ந்த போலீஸார்' - கைதி தப்பியோடிது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள பன்னம்பாறையைச் சேர்ந்தவர் தமிழரசன். இவர் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த அடிதடி வழக்க... மேலும் பார்க்க

கம்போடியாவில் இருந்து மும்பை பெண்ணை டிஜிட்டலில் கைது என்று சொல்லி ரூ.60 லட்சம் பறிப்பு: 4 பேர் கைது

பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த சம்பவங்களில் ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். புதிதாக மும்பையை சேர்... மேலும் பார்க்க

மலேசியா டு திருச்சி: நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றிய நான்கு பேர்! - போலீஸார் விசாரணை

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முதர் மைதீன் (63). இவர், என்.எஸ்.பி பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது சகோதரியின் மகன் சாதிக் பாஷா. இவர், மலேசியாவில் வேலை செய்து வருகிற... மேலும் பார்க்க