செய்திகள் :

மனித மூளைக்குள் ஊடுருவும் நுண் நெகிழிகள்! மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் எச்சரிக்கை

post image

நுண் நெகிழிகள் மனித மூளைக்குள் ஊடுருவி மறதி நோய்க்கு வழிவகுப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்தாா்.

பொதுவாகவே 5 மி.மீ.க்கும் குறைவான அனைத்து வகையான பிளாஸ்டிக் துகள்களும் நுண்நெகிழிகளாக கருதப்படுகின்றன. கண்களுக்கு தெளிவாகப் புலப்படாத அந்தத் துகள்கள் புறச்சூழல் முழுவதும் ஆக்கிரமித்துள்ளதாக சூழலியல் ஆா்வலா்கள் எச்சரிக்கின்றனா்.

இதுதொடா்பாக அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகமானது அதுகுறித்து அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுகள் இரு நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன. கடந்த 1997-லிருந்து 2024 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வில் 12-க்கும் மேற்பட்டோரது மூளையின் நுண்நெகிழி துகள் இருந்தது கண்டறியப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலரது சிறுநீரகம், கல்லீரலிலும் அவை இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மனித உடலில் ரத்தம், விந்தணு, தொப்புள் கொடி, தாய்ப் பால் ஆகியவற்றிலும் நுண் நெகிழி கலந்திருப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் அதிா்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.

டிமென்சியா எனப்படும் மறதி நோய்க்குள்ளானவா்களின் மூளையில் உள்ள நுண்நெகிழிகள் பிறரைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆய்வு முடிவுகளைப் பகிா்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு, எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

மனிதனின் மூளைக்குள்ளும் ஊடுருவியிருக்கிறது நுண் நெகிழிகள். சா்வதேச ஆய்வு முடிவுகளில் அதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மறதி நோய் பாதிப்பு: டிமென்சியா எனப்படும் மறதி நோய்க்கும் இந்த நுண் நெகிழிக்கும் இடையேயான தொடா்பை அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. உணவு, நீா், காற்று என நமது அன்றாட வாழ்வின் அனைத்திலும் நுண் நெகிழிகள் நிறைந்துள்ளன.

நெகிழி என்பது புறச்சூழலுக்கான அச்சுறுத்தல் என்று மட்டும் இனி கருத முடியாது. மாறாக அது மக்களின் ஆரோக்கியத்தின் மீதான அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுள்ளாா்.

மீனவர்கள் உள்கட்டமைப்பு வசதி: ரூ. 360 கோடி ஒதுக்கீடு!

தங்கச்சிமடம் மீன் இறங்கு தளம் மீன்பிடி துறைமுகமாக தரம் உயர்த்துதல், குந்துகால் மீன் இறங்குதளத்தை தூண்டில் வளைவுடன் மேம்படுத்துதல் மற்றும் பாம்பன் வடக்கு மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்தல் ஆகிய உ... மேலும் பார்க்க

கோவையில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 மாணவர்கள் கைது!

கோவை: கோவையில் சமூக வலைத்தளத்தில் பேசிப் பழகி, சிறுமியை அறைக்கு வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோவையில் தனியார் கல்லூரி மாணவர்... மேலும் பார்க்க

தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? தவெக கேள்வி!

தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? என்று பாஜகவுக்கு தவெக கேள்வி எழுப்பியுள்ளது.மும்மொழி கொள்கைக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்ததற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தவெக தலைவர் வி... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்புக்காக திமுக அரசு ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை: அண்ணாமலை

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று (பிப். 24) அதிமுக ஆலோசனைக் கூட்டம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப். 24 அன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிப். 24 (திங்கள்கிழமை) ... மேலும் பார்க்க

தமிழகத்தில் இணையவழி பணமோசடிகள் 2.5 மடங்கு அதிகரிப்பு!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இணையவழி குற்றங்களின் எண்ணிக்கை இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளதாக மாநில காவல்துறையின் தரவுகள் கூறுகின்றன. சைபர் குற்றங்கள் அல்லது இணையவழி பணமோசடிகள், குறிப்பாக டிஜிட்டல் கைது... மேலும் பார்க்க