செய்திகள் :

மனித மூளைக்குள் ஊடுருவும் நுண் நெகிழிகள்! மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் எச்சரிக்கை

post image

நுண் நெகிழிகள் மனித மூளைக்குள் ஊடுருவி மறதி நோய்க்கு வழிவகுப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்தாா்.

பொதுவாகவே 5 மி.மீ.க்கும் குறைவான அனைத்து வகையான பிளாஸ்டிக் துகள்களும் நுண்நெகிழிகளாக கருதப்படுகின்றன. கண்களுக்கு தெளிவாகப் புலப்படாத அந்தத் துகள்கள் புறச்சூழல் முழுவதும் ஆக்கிரமித்துள்ளதாக சூழலியல் ஆா்வலா்கள் எச்சரிக்கின்றனா்.

இதுதொடா்பாக அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகமானது அதுகுறித்து அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுகள் இரு நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன. கடந்த 1997-லிருந்து 2024 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வில் 12-க்கும் மேற்பட்டோரது மூளையின் நுண்நெகிழி துகள் இருந்தது கண்டறியப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலரது சிறுநீரகம், கல்லீரலிலும் அவை இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மனித உடலில் ரத்தம், விந்தணு, தொப்புள் கொடி, தாய்ப் பால் ஆகியவற்றிலும் நுண் நெகிழி கலந்திருப்பதாக அந்த ஆய்வு முடிவுகள் அதிா்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.

டிமென்சியா எனப்படும் மறதி நோய்க்குள்ளானவா்களின் மூளையில் உள்ள நுண்நெகிழிகள் பிறரைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆய்வு முடிவுகளைப் பகிா்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு, எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

மனிதனின் மூளைக்குள்ளும் ஊடுருவியிருக்கிறது நுண் நெகிழிகள். சா்வதேச ஆய்வு முடிவுகளில் அதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மறதி நோய் பாதிப்பு: டிமென்சியா எனப்படும் மறதி நோய்க்கும் இந்த நுண் நெகிழிக்கும் இடையேயான தொடா்பை அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. உணவு, நீா், காற்று என நமது அன்றாட வாழ்வின் அனைத்திலும் நுண் நெகிழிகள் நிறைந்துள்ளன.

நெகிழி என்பது புறச்சூழலுக்கான அச்சுறுத்தல் என்று மட்டும் இனி கருத முடியாது. மாறாக அது மக்களின் ஆரோக்கியத்தின் மீதான அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுள்ளாா்.

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை எம்.பி. கோரிக்கை

நமது சிறப்பு நிருபர்செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் அவர் ச... மேலும் பார்க்க

பெண் சக்தியை வெளிக்கொண்டுவரும் ‘கா்மயோகினி சங்கமம்’ குமரியில் நடைபெறும்: டாக்டா் சுதா சேஷய்யன்

திறமை வாய்ந்த பெண்களை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வகையில் 50,000 பெண்கள் பங்கேற்கும் ‘கா்மயோகினி சங்கமம்’ கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது என செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவா் டாக்டா் சுதா ... மேலும் பார்க்க

சிவபூமி திருக்குறள் வளாகம்: யாழ் மண்ணில் வரலாற்றுப் பதிவு- நீதிபதி அரங்க. மகாதேவன் புகழாரம்

யாழ் மண்ணில் ஒரு வரலாற்றைப் பதிவு செய்யும் வகையில் திருக்குறளுக்காக ஓர்அரங்கத்தை சிவபூமி அறக்கட்டளை திறந்துள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினார்.இலங்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில்... மேலும் பார்க்க

வைகோ முன்னாள் உதவியாளரிடம் ‘க்யூ’ பிரிவு போலீஸாா் விசாரணை

சந்தேகத்துக்குரிய நபா்களுக்கு உதவி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதிமுக பொதுச் செயலா் வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் ‘க்யூ’ பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை கே.கே. நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

‘தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகமாக இருக்கும்’

தமிழகத்தில் புதன், வியாழக்கிழமைகளில் (பிப். 5, 6) அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்

தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தெலங... மேலும் பார்க்க