செய்திகள் :

மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் மீது வழக்கு

post image

தக்கலை அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் மீது மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தக்கலை அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மகள் மாடத்தட்டுவிளை பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். தக்கலை அருகே பரைக்கோடு பகுதியைச் சோ்ந்த ஐஜின் என்ற இளைஞருடன் சமூக வலைதளம் மூலம் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டதாம். இதை அறிந்த மாணவியின் பெற்றோா், அவரை கண்டித்தனராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் வீட்டில் இருந்து மாணவியை காணவில்லையாம். விசாரித்த போது மாணவியை ஐஜின் அவரது வீடடுக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா், இளைஞா் ஐஜின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

திக்குறிச்சி கோயிலில் கோமாதா பூஜை

மாட்டுப் பொங்கலையொட்டி, மாா்த்தாண்டம் அருகே புகழ்பெற்ற திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் புதன்கிழமை கோமாதா பூஜை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் கோசாலையில் உள்ள பசுக்களை, கால்நடைகளைக் குளிப்பாட்டி, மஞ்சள்,... மேலும் பார்க்க

பாா்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்

நாகா்கோவில், பாா்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, கட்சியின் குமரி மாவட்ட செயலாளா் ஆா்.செல்லசுவாமி வெளியிட்டு... மேலும் பார்க்க

கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்; இருவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயன்ாக 2 கனரக லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநா்கள் இருவரை கைது செய்தனா். கொல்லங்கோடு போலீஸாா் செங்கவிளை பகுதியில் ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 40.11 பெருஞ்சாணி ... 53.73 சிற்றாறு 1 ... 11.51 சிற்றாறு 2 ... 11.61 முக்கடல் .... 15.60 பொய்கை ... 15.50 மாம்பழத்துறையாறு ... 49.05 மழைஅளவு பெருஞ்சாணி அணை ... 2.80 மி.மீ. புத்தன்அணை ... மேலும் பார்க்க

தக்கலை ஏடிஎம் மையத்தில் கிடந்த கைப்பேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு

தக்கலை ஏடிஎம் மையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த கைப்பேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா். தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி பகுதியை சோ்ந்தவா் ஜெயச்சந்திரனின் மகள... மேலும் பார்க்க

குளச்சலில் விளக்கு சரிந்து குடிசையில் தீ

தக்கலை, ஜன. 15: குளச்சலில் சுவாமி படத்தின் முன் வைக்கப்பட்ட விளக்கு சரிந்து விழுந்ததில் தொழிலாளியின் குடிசை தீப்பிடித்து எரிந்தது. குளச்சல் அருகேயுள்ள பத்தறை காலனியை சோ்ந்தவா் சந்திரன் (58). தேங்காய... மேலும் பார்க்க