செய்திகள் :

"மாபெரும் தலைவர்! வலிமையானவர், அறிவார்ந்த மனிதர்" - மோடிக்கு ட்ரம்ப், நெதன்யாகு, மெலோனி வாழ்த்து

post image

இதுவரை தொடர்ந்து அதிக நாள்கள் இந்திய பிரதமராக இருந்தவர் என்கிற பெருமையை இந்திய முன்னாள் பிரதமர் நேருவிடம் இருந்து அந்தச் சாதனையை நேற்று தட்டி சென்றிருக்கிறார் தற்போதைய இந்திய பிரதமர் மோடி.

மோடிக்கு பல உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அதன் தொகுப்பு இதோ...

ட்ரம்ப் - மோடி
ட்ரம்ப் - மோடி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்:

"இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவியில் இருக்கும் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள எனது நண்பர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

அவர் உண்மையிலேயே ஒரு மாபெரும் தலைவர்! அவர் மிகவும் வலிமையானவர், ஆரோக்கியமானவர், மற்றும் அறிவார்ந்த மனிதர்.

வரவிருக்கும் பல ஆண்டுகளிலும் அவர் இதே போன்ற மாபெரும் வெற்றிகளையும் பெருமைகளையும் தொடர்ந்து குவிப்பார்!"

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு:

"பிரதமர் மோடி, எனது அன்பு நண்பர் நரேந்திரா, இந்தியாவின் மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் இந்தியாவை முற்றிலும் மாற்றி அமைத்திருக்கிறீர்கள்.

இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளீர்கள். உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் மதிப்பையும் அன்பையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள்.

உங்களது தலைமை, 140 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு தேசத்தை உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. மேலும், 25 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து விடுபட நீங்கள் உதவியுள்ளீர்கள்.

நெதன்யாகு, மோடி
நெதன்யாகு, மோடி

இந்த உன்னதமான பணியைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறீர்கள்.

நமது நட்பும், நமது இரு மாபெரும் தேசங்களுக்கு இடையிலான பிணைப்பும் இதற்கு முன்பு எப்போதும் இந்த அளவுக்கு வலுவாக இருந்ததில்லை.

உங்களை விரைவில் மீண்டும் சந்திப்பதற்கும், வரவிருக்கும் ஆண்டுகளில் உங்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவதற்கும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

எங்களின் பாரம்பரிய வாழ்த்தான 'மசல் டோவ்' (Mazel Tov - நல்வாழ்த்துகள்), உங்களுக்கு நல்வாழ்த்துகள் எனது அன்பு நண்பரே; உங்களது தலைமையின் கீழ் இயங்கும் இந்தியாவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!"

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி:

"இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக இன்று பொறுப்பேற்றுள்ள மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

சமீபத்திய வாரங்களில் ரோம் நகரில் உங்களை மீண்டும் சந்தித்ததும், நமது நாடுகளுக்கும் மக்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், எதிர்காலத்தை நோக்கிய ஒரு 'சிறப்பு உன்னத கூட்டுப்பயணத்தை' (Special Strategic Partnership) நாம் இணைந்து தொடங்கியதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது."

ஜார்ஜியா மெலோனி, மோடி
ஜார்ஜியா மெலோனி, மோடி

கனடா பிரதமர் மார்க் கார்னி:

"இந்தியாவின் மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

கனடாவும் இந்தியாவும் தங்களது கூட்டுப்பயணத்தைப் புதுப்பித்து வரும் இந்த வேளையில், இரு நாட்டு மக்களுக்கும் மாபெரும் செழிப்பைக் கொண்டு சேர்ப்பதற்கான நமது கூட்டுப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்."

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்:

"இந்தியாவின் மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த மைல்கல், பல ஆண்டுகால அவரது அர்ப்பணிப்புமிக்க சேவையையும் தலைமையையும் பிரதிபலிக்கிறது. சிங்கப்பூர் – இந்தியா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தவும், நமது நாட்டு மக்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் நமது நெருக்கமான கூட்டுப்பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்."

லாரன்ஸ் வோங் - மோடி
லாரன்ஸ் வோங் - மோடி

ஐக்கிய ராஜ்ஜியத்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்:

"இந்தியாவின் மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் எட்டப்பட்டுள்ள இந்த அசாத்திய மைல்கல், பிரிட்டன் - இந்தியா (UK-India) இடையிலான கூட்டுப்பயணத்திற்கு மிகவும் சாதகமானது; இந்த உறவு வரும் காலங்களிலும் தொடர்ந்து மென்மேலும் வலுவடைந்து கொண்டே செல்லும்."

அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்பாகும் பாலிமர், நியூஸ் தமிழ், தமிழ் ஜனம் - சர்ச்சைக்கு முடிவா ?

தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிபரப்பில் இருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி சேனல்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்பட்டிருந்தது சர்ச... மேலும் பார்க்க

’திமுக கூட்டணியில் இப்போதைய சூழலில் இடம்பெற இயலாது!’ – சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிரடி

கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நீட், சிபிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து மக்... மேலும் பார்க்க

`எங்கள் வாடிக்கையாளர்கள் அமெரிக்காவில்.!' - இந்திய ஊழியர்களை ஒரே மெயிலில் பணிநீக்கம் செய்த ஓபன்டோர்

உலகத்தையே தொழில்நுட்பம் ஒரு கிராமமாகச் சுருக்கிவிட்டது என்று நாம் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், அந்தத் தொழில்நுட்ப உலகின் ஒரு மூலையில் இருந்து வந்த ஒரு வாக்கியம், இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள... மேலும் பார்க்க

கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்: '3 இந்தியர்கள் உயிரிழப்பு' - இந்திய அரசு என்ன சொல்கிறது?

ஓமன் வளைகுடாவில் ஈரான் எண்ணெயை ஏற்றிச் சென்ற பாலாவ் (Palau) கொடி ஏந்திய எண்ணெய் கப்பல் செட்டபெல்லோ மீது கடந்த 9-ம் தேதி தாக்குதல் நடத்தியது அமெரிக்க ராணுவம். அந்தக் கப்பலில் இருந்து மூன்று இந்தியர்களை... மேலும் பார்க்க

`15 வருட ராஜ்ஜியம்... 35 நாளில் சரிந்தது' திரிணாமூலை காங்கிரஸோடு இணைக்க மம்தா பேச்சுவார்த்தை?

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அக்கட்சியை சேர்ந்த பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களும், எம்.பிக்க... மேலும் பார்க்க

'ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல்' ; 'இல்லை, திறந்து தான் இருக்கிறது' - குழப்பும் ஈரான், அமெரிக்கா

ஈரான் போரின் மையமாக மீண்டும் 'ஹார்முஸ் நீர்ச்சந்தி' மாறியுள்ளது. ஹார்முஸ் இப்போது திறந்திருக்கிறதா... முடியிருக்கிறதா என்கிற கேள்வி, தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை அமெரிக... மேலும் பார்க்க