செய்திகள் :

அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்பாகும் பாலிமர், நியூஸ் தமிழ், தமிழ் ஜனம் - சர்ச்சைக்கு முடிவா ?

post image

தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிபரப்பில் இருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி சேனல்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த பிரச்னை ஏற்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தாலும் எதிர்க்கட்சிகள், ஊடக அமைப்புகள் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் இதனை கடுமையாக விமர்சித்தன.

இந்த விவகாரத்தில் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். சென்னை பத்திரிகையாளர் மன்றமும் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பாக கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டு அரசின் நடவடிக்கை மீது கேள்வி எழுப்பியது.

சர்ச்சை தீவிரமடைந்த நிலையில், தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை (DIPR) இயக்குநர் அருண் தம்புராஜ் ஐஏஎஸ் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.

அரசு தரப்பில் அரசு கேபிளின் செட்-டாப் பாக்ஸ் செயல்பாடுகளை கையாளும் மந்த்ரா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரச்னையால் இந்த ஒளிபரப்பு பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மூன்று சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் சேனல்களின் செய்தி ஆசிரியர்கள் இடையே நேற்று மாலை நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் இன்று காலை முதல் பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று சேனல்களும் மீண்டும் அரசு கேபிள் தளத்தில் முழுமையாக ஒளிபரப்பாக தொடங்கியுள்ளன. தொழில்நுட்ப கோளாறு என அரசு கூறிய விளக்கத்தை உறுதிப்படுத்தும் வகையிலா அல்லது எழுந்த எதிர்ப்புகளின் விளைவாக அரசின் பின்வாங்கலா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

"சிங்கப்பெண் படையின் முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?" - தூத்துக்குடி சம்பவத்திற்கு பழனிசாமி கண்டனம்

தூத்துக்குடியில் நடந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். "தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண்... மேலும் பார்க்க

’திமுக கூட்டணியில் இப்போதைய சூழலில் இடம்பெற இயலாது!’ – சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிரடி

கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நீட், சிபிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து மக்... மேலும் பார்க்க

`எங்கள் வாடிக்கையாளர்கள் அமெரிக்காவில்.!' - இந்திய ஊழியர்களை ஒரே மெயிலில் பணிநீக்கம் செய்த ஓபன்டோர்

உலகத்தையே தொழில்நுட்பம் ஒரு கிராமமாகச் சுருக்கிவிட்டது என்று நாம் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், அந்தத் தொழில்நுட்ப உலகின் ஒரு மூலையில் இருந்து வந்த ஒரு வாக்கியம், இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள... மேலும் பார்க்க

கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்: '3 இந்தியர்கள் உயிரிழப்பு' - இந்திய அரசு என்ன சொல்கிறது?

ஓமன் வளைகுடாவில் ஈரான் எண்ணெயை ஏற்றிச் சென்ற பாலாவ் (Palau) கொடி ஏந்திய எண்ணெய் கப்பல் செட்டபெல்லோ மீது கடந்த 9-ம் தேதி தாக்குதல் நடத்தியது அமெரிக்க ராணுவம். அந்தக் கப்பலில் இருந்து மூன்று இந்தியர்களை... மேலும் பார்க்க

`15 வருட ராஜ்ஜியம்... 35 நாளில் சரிந்தது' திரிணாமூலை காங்கிரஸோடு இணைக்க மம்தா பேச்சுவார்த்தை?

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அக்கட்சியை சேர்ந்த பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களும், எம்.பிக்க... மேலும் பார்க்க

'ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல்' ; 'இல்லை, திறந்து தான் இருக்கிறது' - குழப்பும் ஈரான், அமெரிக்கா

ஈரான் போரின் மையமாக மீண்டும் 'ஹார்முஸ் நீர்ச்சந்தி' மாறியுள்ளது. ஹார்முஸ் இப்போது திறந்திருக்கிறதா... முடியிருக்கிறதா என்கிற கேள்வி, தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை அமெரிக... மேலும் பார்க்க