செய்திகள் :

விழுப்புரம்: சிறுமியை மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை; கதறிய குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் பெற்றோரை இழந்த 14 வயது சிறுமி ஒருவர், தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்ற நபர், அந்தச் சிறுமியிடம் நட்பாகப் பழகி வந்திருக்கிறார்.

கடந்த 2020-ம் ஆண்டு சிறுமியைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அத்துடன், அதுகுறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.

அதன்பிறகு அவ்வப்போது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார் சிவா. அதில் சிறுமியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதைக் கவனித்த சிறுமியின் உறவினர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

போக்சோ
போக்சோ

அப்போதுதான் சிவா என்ற நபர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அதையடுத்து 2021 ஏப்ரல் மாதம் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர் சிறுமியின் உறவினர்கள்.

அதனடிப்படையில் சிவா மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனர். விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சிவா குற்றவாளி என்று தீர்ப்பளித்தார் நீதிபதி வினோதா.

நீதிபதி தீர்ப்பை வாசித்ததும், `தெரியாம பண்ணிட்டேன்’ என்று கதறி அழுதார் சிவா. தொடர்ந்து, சிவாவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.11,000/- அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இளம்பெண் கூட்டு பாலியல் கொடுமை வழக்கு; `எம்.எல்.ஏ சரவணனை ஏன் கைது செய்யவில்லை?' - வலுக்கும் கண்டனம்!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர், பாலமுருகன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். அவரது நண்பர் ராமநா... மேலும் பார்க்க

`என் மகள் இறந்த மாதிரியே, நானும் சாகப் போகிறேன்!’ - ஆட்டோ ஓட்டுநரின் விபரீத முடிவு; பகீர் பின்னணி!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகேயுள்ள சக்கரகுப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரஜினி (வயது 41). இவரின் மனைவி கோமதி. இவர்களின் 15 வயது மகள் தர்ஷினி, கடந்த ஏப்ரல் மாதம் ... மேலும் பார்க்க

சென்னை: "ஐயா, என் மனைவிய கொன்னுட்டேன்" - 54 வயது பெண்மணியைக் கொடூரமாகக் கொன்ற 68 வயது முதியவர்

சென்னை அண்ணாநகர் கிழக்கு சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (68). இவரின் மனைவி சாந்தி (54). கடந்த 2010-ம் ஆண்டு ஏகாம்பரம் தற்கொலை செய்து கொண்டார். அதனால் சாந்தி, 2016-ம் ஆண்டு முதல் அதே பகுதியை... மேலும் பார்க்க

போலீஸ்காரரிடமே தங்க செயின், செல்போன் திருட்டு - வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அலறும் பயணிகள்!

காஞ்சிபுரம் டவுன் வ.உ.சி நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் அக்‌ஷய்பிரதீப் (வயது 32). செங்கல்பட்டு காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் அண்மையில், உறவினரின் வீ... மேலும் பார்க்க

கோவை: கடத்தப்பட்ட இளைஞர்கள்; ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த காவலர்கள் - அதிர்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம், போத்தனூரை அடுத்த சித்தண்ணபுரம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் நவீன் (29). இவர் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் தங்கியிருந்து ஆன்லைன் டிரேடிங் செய்து வந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி மதியம்,... மேலும் பார்க்க

பாலியல் விருந்து, மிரட்டல்; ரூ.954 கோடி வங்கி மோசடி! - அமெரிக்காவில் சிக்கிய இந்திய வம்சாவளி யார்?

அமெரிக்காவின் ஆடம்பர மாளிகையில் ஒரு கைது... அதன் பின்னணியில் 100 மில்லியன் டாலர் வங்கி மோசடி... சட்டத்தின் பிடியில் சிக்கிய இந்திய வம்சாவளி தொழிலதிபர்! அமெரிக்காவின் நிதித்துறையை அதிர வைத்திருக்கும் இ... மேலும் பார்க்க