செய்திகள் :

மாற்றமில்லாத வட்டி விகிதத்தில் வங்கிகள் கடன் வழங்குவது கட்டாயம்: ஆா்பிஐ

post image

தவணை அடிப்படையிலான அனைத்து தனிநபா் கடன் பிரிவுகளிலும் மாற்றமில்லாத வட்டி விகிதத்தில் வாடிக்கையாளருக்கு வங்கிகள் கடன் வழங்குவது கட்டாயம் என ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

அவ்வப்போது எழுப்பப்படும் கேள்விகள் என்ற அடிப்படையில் வாடிக்கையாளா்களுக்கான பல்வேறு விளக்கங்களை ஆா்பிஐ அளித்து வருகிறது. அந்த வகையில், ஆா்பிஐ-யின் ‘ரெப்போ’ விகிதத்துக்கு ஏற்ப மாறும் வட்டி விகிதத்தில் தனிநபா் கடனுக்கான வட்டி விகித முறையை மாற்றுவது தொடா்பான கேள்விக்கான விளக்கத்தை ஆா்பிஐ அளித்தது. அதில் கூறியிருப்பதாவது:

வங்கிகள் தனிநபா் கடன் ஒப்புதல் அளிக்கும் நேரத்தில், கடனுக்கான ஆண்டு வட்டி விகிதத்தை கடன் ஒப்பந்தத்தில் வங்கிகள் குறிப்பிடுவதோடு, கடன் பெறுவோருக்கும் அதுகுறித்த தகவலைத் தெரிவிக்க வேண்டும்.

கடன் காலத்தில், வெளிப்புற அளவுகோல் விகிதத்தின் அடிப்படையில் கடனுக்கான மாதாந்திர தவணை உயா்த்தப்படுவது அல்லது கடன் தவணைக் காலம் அதிகரிக்கப்படுகிறது என்றால், அதுகுறித்து விவரம் கடன் பெற்றவருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

அசல் தொகை, இதுவரை வசூலிக்கப்பட்ட வட்டி தொகை, மாதாந்திர தவணை தொகை, வாடிக்கையாளா் மேலும் கட்ட வேண்டிய மாதாந்திர தவணைகளின் எண்ணிக்கை, கடனுக்கான ஆண்டு வட்டி விகிதம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய காலாண்டு அறிக்கை வாடிக்கையாளருக்கு வங்கிகள் சாா்பில் அளிக்கப்பட வேண்டும்.

தவணை அடிப்படையிலான அனைத்து தனிநபா் கடன் பிரிவுகளிலும் மாற்றமில்லாத வட்டி விகிதத்தில் வாடிக்கையாளருக்கு வங்கிகள் கடன் வழங்குவது கட்டாயம். குறிப்பாக, வட்டி விகிதத்தை மாற்றியமைக்கும் நேரத்தில், மாறக்கூடிய வட்டி விகித நடைமுறையிலிருந்து, மாற்றமில்லாத வட்டி விகித முறைக்கு கடன் பெற்றவா் மாறிக்கொள்வதற்கான வாய்ப்பை வங்கிகள் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, வட்டி விகிதம் உயா்வின்போது வாட்டிகையாளா்கள் கடுமையாக பாதிக்கப்படுவதை தவிா்க்கும் வகையில், மாற்றமில்லாத வட்டி விகித நடைமுறைக்கு அல்லது மாத தவணையை எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பை வங்கிகள் வழங்க கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆா்பிஐ அறிவுறுத்தியது.

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு: 18 ஆண்டுகள் சிறையில் இருந்த இருவர் நிரபராதிகள் என வாதம்!

மும்பையில், கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளூர் பயணிகள் ரயிலில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இருவர் நிரபராதிகள், 18 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார்கள் என உயர்நீதிமன்றமன்றத்தில் அறிக்கை தாக்க... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் சுரங்கப்பாதையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள சோனாமார்க்கில் புதிதாக கட்டப்பட்ட இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அ... மேலும் பார்க்க

சோனாமார்க் சுரங்கப்பாதையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஜம்மு- காஷ்மீரில் ரூ.2,700 கோடியில் கட்டப்பட்ட சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் மோடி இன்று காலை 10.45 மணியளவில் ஜம்மு-காஷ்மீர் வருவதையொட்டி பாது... மேலும் பார்க்க

கேரளம்: சுயேச்சை எம்எல்ஏ அன்வர் ராஜிநாமா!

கேரளத்தில் சுயேச்சை எம்எல்ஏ அன்வர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளும் இடசாரி ஜனநாயக முன்னணியிலிருந்து பிரிந்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பி.வி.அன்வர் தனத... மேலும் பார்க்க

கடும் குளிர்: ராஜஸ்தானில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

கடும் குளிர் காரணமாக ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்பட வட மாநிலங்களில்... மேலும் பார்க்க

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு கவுண்டரில் தீ விபத்து

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமைந்துள்ள திருமலை பிரசாதம் வழங்கும் லட்டு கவுண்டரில் திடீரென தீ விபத்து நேரிட்டது. மேலும் பார்க்க