செய்திகள் :

மும்பையின் முதல் பாஜக மேயராகும் ரிது தாவ்டே; சிவசேனாவிற்கு துணை மேயர் பதவி; முடிவுக்கு வந்த இழுபறி

post image

மும்பை மாநகராட்சிக்குக் கடந்த மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் பா.ஜ.க 89 வார்டுகளிலும், சிவசேனா (ஷிண்டே) 29 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இது தவிர உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 65 இடங்களில் வெற்றி பெற்றது.

பா.ஜ.க தனித்து மேயர் பதவியைப் பிடிக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கவில்லை. எனவே அக்கட்சி சிவசேனாவின் ஆதரவோடு மேயர் பதவிக்குப் போட்டியிட இருக்கிறது. எனவே மேயர் பதவிக்கு பா.ஜ.க ரிது தாவ்டே என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.

சிவசேனா சார்பாக துணை மேயர் பதவிக்கு சஞ்சய் சங்கர் காதி என்பவரது பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனாவிற்கு மேயர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று அக்கட்சி கோரி வந்த நிலையில் இப்போது மேயர் மற்றும் துணை மேயருக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் மிகவும் பணக்கார மாநகராட்சியாகக் கருதப்படும் மும்பையைப் பிடிக்க வேண்டும் என்பது பா.ஜ.க-வின் கனவாக இருந்தது. அந்தக் கனவு இப்போது நிறைவேற இருக்கிறது. அதேசமயம் கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சிவசேனா அல்லாத ஒருவர் மும்பையில் மேயராகப் பதவியேற்க இருக்கிறார்.

மும்பை மாநகராட்சி
மும்பை மாநகராட்சி

மும்பை மேயர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரிது தாவ்டே முதல் முறையாக 2017ம் ஆண்டு காட்கோபர் பகுதியிலிருந்து கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதோடு அவர் மும்பை மாநகராட்சியில் கல்விக் கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார். துணை மேயராக அறிவிக்கப்பட்டுள்ள சஞ்சய், தகிசர் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேயர் தேர்தல் வரும் 11ம் தேதி மும்பை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் சிவசேனா(உத்தவ்)வும் வேட்பாளரை நிறுத்த இருக்கிறது.

தங்களது வேட்பாளருக்கு 25 உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டுள்ள காங்கிரஸ், ஆதரவு கொடுக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மும்பை மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2022ம் ஆண்டே முடிந்துவிட்டது. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக மேயர் இல்லாமல் மாநகராட்சி செயல்பட்டு வந்தது.

ட்ரோன் பிராண்டிங்: விளம்பர உலகில் புதிய சகாப்தம் - தமிழகத்தில் அறிமுகம் செய்த அலோக் இன்ஃபோடெக்

360° கோணத்தில் முழுமையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் தீர்வுகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமான அலோக் இன்ஃபோடெக், தமிழகத்தின் முதல் ட்ரோன் பிராண்டிங் சேவையை பெருமையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதுமையான... மேலும் பார்க்க

மும்பை: ரயில் தண்டவாளத் தடுப்புகளில் கிரீஸ் தடவும் பணி; ரயில்வேயின் திட்டத்தின் பின்னணி என்ன?

மும்பை புறநகர் ரயில்களில் அடிபட்டு தினமும் 10 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். இந்த உயிரிழப்புகளைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் போதிய பலனளிக்காமல் இருக்கின்றன.ரயில் பயணிகள் அதி... மேலும் பார்க்க

பழுது பார்த்து கொடுக்க மறுப்பு: ரூ.2.50 லட்சத்துக்கு வாங்கிய எலக்ட்ரிக் ஆட்டோவை தீவைத்த பெண்

இப்போது பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் இது போன்ற எலக்ட்ரிக் வாகனங்களில் பழுது ஏற... மேலும் பார்க்க

"குழந்தை பெற்றுக்கொள்வது பெண்ணின் விருப்பம்" - 30 வாரக் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

மும்பையைச் சேர்ந்த 17 வயது பெண் தனது ஆண் நண்பருடனான உறவில் கர்ப்பமானார். அவருக்கு இப்போது 18 வயதாகிறது. அவரது வயிற்றில் உள்ள கருவின் வளர்ச்சி 30 வாரமாகிவிட்டது.இக்குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்... மேலும் பார்க்க

அருணாச்சலப் பிரதேசம்: இருசக்கர வாகனத்தில் சென்ற காவலருக்கு நேர்ந்த கொடூரம்; 'புலி' அச்சத்தில் மக்கள்

அருணாச்சலப் பிரதேசத்தில் புலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். ஆனால் அங்கு காவலர் ஒருவரை புலி ஒன்று தாக்கிக் கொன்றுள்ளது.அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள லோவர் திபாங்க் மாவட்டத்தில் தலைமைக் காவலராகப்... மேலும் பார்க்க

மணமான பெண்ணுக்குத் திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை; 'செல்லாது' - சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

திருமணமான பெண் வழக்கறிஞர் ஒருவர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்த ஒரு வழக்கில் தனது காதலன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதா... மேலும் பார்க்க