செய்திகள் :

மும்பை: கடற்கரை சாலை தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்த பி.எம்.டபிள்யூ கார்: 3 மாணவர்கள் பலி

post image

மும்பையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடற்கரையோரம் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த சாலை கடலுக்குள் கட்டப்பட்டுள்ளது. இந்த சாலையில் இன்று கறுப்பு நிற பிஎம்டபிள்யூ கார் ஒன்று, மெரைன் டிரைவிலிருந்து ஹாஜி அலி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. அதிவேகமாகச் சென்ற அந்த வாகனம் மேம்பாலத்தில் சென்றபோது சுற்றுத்தடுப்பு சுவரில் மோதிய பின்னர், பாலத்திலிருந்து கீழே விழுந்து.

கார் நிறுத்தும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிக்குள் கார் விழுந்தது. உடனே காரில் இருந்த நான்கு பேரும் நாயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் மூவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

ஆதித்ய கல்பேஷ்வர்(23) என்ற வாலிபர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஷனய் கஜ்ஜால்(21), தைரிய தர்ஷன் சேத்(17), ஆதித்யா ஜகஸ்னியா(19) என உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக கார் பாலத்தில் இருந்த விளம்பர பலகையை கிழித்தெறிந்தது. காரின் கண்ணாடி நூற்றுக்கணக்கான துண்டுகளாக உடைந்தது. காரின் முன்பகுதி முற்றிலும் நசுக்கப்பட்டது. பம்பர் கிழிந்து உள் பாகங்கள் வெளிப்பட்டன. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் இருந்த நான்கு இளைஞர்களும் ஜூஹுவில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றனர். அவர்கள் 'பேயிங் கெஸ்ட்' (paying guest) ஒன்றில் தங்கி இருந்தனர். அகமதாபாத்தைச் சேர்ந்த அவர்கள் மரைன் டிரைவிற்குச் சென்றிருந்தனர். மெரைன் டிரைவ் சென்றுவிட்டு அவர்கள் திரும்பிக்கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது.

சில வாரங்களுக்கு முன்பு கடற்கரைச் சாலை சுரங்கப்பாதையில் பந்தயத்தில் ஈடுபட்டதற்காக லம்போர்கினி, பிஎம்டபிள்யூ எம்2 மற்றும் பிஎம்டபிள்யூ இசட்4 உள்ளிட்ட ஆறு முதல் ஏழு சூப்பர் கார்கள் மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

சோளிங்கர்: பேருந்து மோதி விபத்து - தந்தை, மகள் பலியான சோகம்!

ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு (வயது 47). இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மகள் மதுமிதா (21). இவர் அங்குள்ள கல்லூரியில் பயின்று வந்தார். சுரேஷ் பாபுவின் ... மேலும் பார்க்க

மதுரை : நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் விபத்தில் உயிரிழந்த சோகம்!

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு கவின் நர்சரியை சேர்ந்தவர் சிமியோன் மகன் ஜெப பாஸ்டின் (வயது 29) காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும்திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரம் சக்கையா நாயக... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள பிரபல திரையங்கு கட்டிடத்தில் தீ விபத்து!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் மேற்கு கோபுரம் அருகேயுள்ள மேற்கு கோபுர வீதி பகுதியில் 1939ஆம் ஆண்டு முதல் பழமையான சென்ட்ரல் தியேட்டர் செயல்பட்டுவந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் போதிய ரசிகர்கள் வருகையின்... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணியின்போது விபத்து - இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளிகள்; இருவர் பலி?

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ள மஞ்சு கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சி.எஸ்.ஐ சியோன் மலை தேவாலய நிர்வாகத்தின் சார்பாக போதகர் ஜோன் கிருபாகரன் என்பவரால் புதிதாக பெரிய தேவாலயம் கட்டும் பணி நடைபெற்று வருக... மேலும் பார்க்க

மதுரை: லாரியிலிருந்து விழுந்த இரும்புப் பொருள் - ஜல்லிக்கட்டு நண்பர்கள் இருவர் உயிரிழந்த சோகம்

சோழவந்தான் அருகேயுள்ள சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோபால் மற்றும் அய்யனார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமின்றி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்த மாடுபிடி வீரர்கள்.ப... மேலும் பார்க்க

சரிந்து விழுந்த 5 மாடி மாணவர் விடுதி: 6 பேர் உயிரிழந்த சோகம் - மீட்புப் பணி தீவிரம்

தெற்கு டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் சுமார் 30 ஆண்டுகள் பழமையான 5 மாடி கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவர்களுக்கான விடுதியாகச் செயல்ப... மேலும் பார்க்க