செய்திகள் :

மும்பை: ரயில் தண்டவாளத் தடுப்புகளில் கிரீஸ் தடவும் பணி; ரயில்வேயின் திட்டத்தின் பின்னணி என்ன?

post image

மும்பை புறநகர் ரயில்களில் அடிபட்டு தினமும் 10 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். இந்த உயிரிழப்புகளைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் போதிய பலனளிக்காமல் இருக்கின்றன.

ரயில் பயணிகள் அதிக அளவில் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழக்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் மும்பையில் ரயில் தண்டவாளத்தைக் கடந்து 1063 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மும்பையில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இரு ரயில் தண்டவாளங்களுக்கு இடையில் இரும்புத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

அப்படி இருந்தும் இரும்புத் தடுப்பில் ஏறி சில பயணிகள் தண்டவாளத்தைக் கடக்கின்றனர். இதுபோன்ற பிரச்னைக்கு மேற்கு ரயில்வே நிர்வாகம் புதிய உக்தியைக் கடைப்பிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

மும்பையில் மேற்கு ரயில்வே நிர்வாகம் 60 கிலோமீட்டர் தூரத்திற்கு புறநகர் ரயில்களை இயக்கி வருகிறது. இந்த 60 கிலோமீட்டரிலும் தண்டவாளத்திற்குள் பொதுமக்கள் நுழையாமல் இருக்க இரும்பு தடுப்பு அல்லது சிமெண்ட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு ரயில்வேயில் மும்பைக்கு உட்பட்ட பகுதியில் 29 ரயில் நிலையங்கள் இருக்கின்றன.

இரும்பு தடுப்பு
இரும்பு தடுப்பு

இந்த ரயில் நிலையங்களில் உள்ள ரயில் தண்டவாளங்களிடையே இருக்கும் இரும்பு அல்லது சிமெண்ட் தடுப்புகளில் கிரீஸ் தடவும் வேலையில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் ரயில் பயணிகள் தடுப்புகளில் ஏறிக் குதிக்க முடியாது.

தடுப்புகளில் ஏறினாலும் உடைகளில் கிரீஸ் பட்டுவிடும். இது போன்ற திட்டத்திற்குப் பயணிகள் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் ரயில் தண்டவாளத்தைக் கடப்பது குறையும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கிரீஸ் காய அதிக நாட்கள் பிடிக்கும் என்றும், அப்படிக் காயும் போது ரயில்வே பராமரிப்பு ஊழியர்கள் மீண்டும் கிரீஸ் தடவுவார்கள் என்று மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டு மத்திய ரயில்வேயும் இது போன்று கிரீஸ் தடவி சோதனை செய்து பார்த்தது.

ட்ரோன் பிராண்டிங்: விளம்பர உலகில் புதிய சகாப்தம் - தமிழகத்தில் அறிமுகம் செய்த அலோக் இன்ஃபோடெக்

360° கோணத்தில் முழுமையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் தீர்வுகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமான அலோக் இன்ஃபோடெக், தமிழகத்தின் முதல் ட்ரோன் பிராண்டிங் சேவையை பெருமையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதுமையான... மேலும் பார்க்க

மும்பையின் முதல் பாஜக மேயராகும் ரிது தாவ்டே; சிவசேனாவிற்கு துணை மேயர் பதவி; முடிவுக்கு வந்த இழுபறி

மும்பை மாநகராட்சிக்குக் கடந்த மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் பா.ஜ.க 89 வார்டுகளிலும், சிவசேனா (ஷிண்டே) 29 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இது தவிர உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 65 இடங்களில் வ... மேலும் பார்க்க

பழுது பார்த்து கொடுக்க மறுப்பு: ரூ.2.50 லட்சத்துக்கு வாங்கிய எலக்ட்ரிக் ஆட்டோவை தீவைத்த பெண்

இப்போது பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் இது போன்ற எலக்ட்ரிக் வாகனங்களில் பழுது ஏற... மேலும் பார்க்க

"குழந்தை பெற்றுக்கொள்வது பெண்ணின் விருப்பம்" - 30 வாரக் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

மும்பையைச் சேர்ந்த 17 வயது பெண் தனது ஆண் நண்பருடனான உறவில் கர்ப்பமானார். அவருக்கு இப்போது 18 வயதாகிறது. அவரது வயிற்றில் உள்ள கருவின் வளர்ச்சி 30 வாரமாகிவிட்டது.இக்குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்... மேலும் பார்க்க

அருணாச்சலப் பிரதேசம்: இருசக்கர வாகனத்தில் சென்ற காவலருக்கு நேர்ந்த கொடூரம்; 'புலி' அச்சத்தில் மக்கள்

அருணாச்சலப் பிரதேசத்தில் புலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். ஆனால் அங்கு காவலர் ஒருவரை புலி ஒன்று தாக்கிக் கொன்றுள்ளது.அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள லோவர் திபாங்க் மாவட்டத்தில் தலைமைக் காவலராகப்... மேலும் பார்க்க

மணமான பெண்ணுக்குத் திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை; 'செல்லாது' - சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

திருமணமான பெண் வழக்கறிஞர் ஒருவர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்த ஒரு வழக்கில் தனது காதலன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதா... மேலும் பார்க்க