செய்திகள் :

மும்பை: வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பூச்சி; கொதித்த பயணிகள்; ரயில்வேயின் பதில் என்ன?

post image

நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் என்ற அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. குளிர்சாதன வசதியுடன் இருக்கை வசதி கொண்ட இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவும் வழங்கப்படுகிறது. இந்த உணவு குறித்து சில நேரங்களில் விமர்சனம் எழுவதுண்டு.

இந்நிலையில், மும்பையில் இருந்து அகமதாபாத்திற்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட சாப்பாட்டில் பூச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பயணிக்குக் கொடுக்கப்பட்ட பருப்பு குழம்பில் பூச்சி ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை அப்பயணி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனக்கு மட்டுமல்லாது தான் பயணம் செய்த பெட்டியில் இருந்த வேறு சிலரது உணவிலும் இது போன்று பூச்சி இருந்ததாக அந்தப் பயணி பதிவிட்டுள்ளார்.

உணவில் பூச்சி
உணவில் பூச்சி

அந்தப் பதிவு வைரலாகி இருக்கிறது. பூச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் யாரும் சாப்பிட மறுத்துவிட்டனர். இது தொடர்பான சமூக வலைத்தளப் பக்க பதிவுக்கு ஐ.ஆர்.சி.டி.சி பதிலளித்துள்ளது.

சம்பந்தப்பட்ட ரயிலில் உணவு சப்ளை செய்யும் ஒப்பந்ததாரருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதோடு அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு அந்த ஒப்பந்ததாரர் உணவு தயாரிக்கும் சமையல் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் ரயிலில் இது போன்று சாப்பாட்டில் பூச்சிகள் இருப்பது பயனிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதே போன்று வாரனாசியில் இருந்து தியோகர் நகருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த ஒரு பெண் பயணி ரயிலில் வழங்கபட்ட சாப்பாட்டைச் சாப்பிட்டதால் தனக்கு அலர்ஜி ஏற்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

பயணத்தின் போது வழங்கப்பட்ட சாப்பாட்டைச் சாப்பிட்ட தனது இரண்டு வயது மகன் நோய்வாய்ப்பட்டதாகவும், வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்லைனில் பகிரப்பட்ட படங்களில், மருத்துவரின் மருந்துச் சீட்டுடன், வீங்கிய உதடுகளுடன் அப்பெண் தனது படத்தைப் பகிர்ந்து இருந்தார். சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருந்திருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறுக்கு வழி பயணத்தால் விபரீதம்: கிணற்றுக்குள் பாய்ந்த கார்... குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகில் உள்ள தீண்டோரி என்ற இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கார் ஒன்று சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் விழுந்து 6 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்... மேலும் பார்க்க

நெருங்கும் ட்ரம்ப் காலக்கெடு; ஈரான் மின் உற்பத்தி மையங்களை பாதுகாக்க மனிதச் சங்கிலி?

ஈரான் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை இன்று மாலை 8 மணிக்குள் திறக்கவில்லையெனில் ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள்மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள... மேலும் பார்க்க

"GMTக்குப் பதில் மகாகால் ஸ்டாண்டர்ட் டைம்(MST)"- நேரக்கணக்கீட்டு முறையை மாற்ற கோரும் மத்திய அமைச்சர்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் நகரில் இருக்கும் மகாகால் கோயில் மிகவும் பிரபலமான கோயில்.தர்மேந்திர பிரதான்சமீபத்தில் உஜ்ஜைன் நகரில் சர்வதேச நேரக் கணக்கீட்டு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து க... மேலும் பார்க்க

சிறப்புப் படை, 12 விமானங்கள், ஹெலிகாப்டர்கள்- ஈரானுக்குள் நுழைந்த அமெரிக்கா விமானியை மீட்டது எப்படி?

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்க படைகள் F-15E மூலம் குண்டுகளை வீசியது. அப்போது ஈரான் வான் பாதுகாப்பு தடுப்பு ஏவுகணை மூலம் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இருந்த இரண்டு பே... மேலும் பார்க்க

"என் மகளின் கண்ணியமே எனக்கு முக்கியம்" - விவாகரத்து பெற்ற மகளை மேள தாளங்களுடன் அழைத்து வந்த தந்தை

உத்தரப்பிரதேசத்தில் கோர்ட்டால் விவாகரத்து வழங்கப்பட்ட மகளை ஆரவாரத்துடன் மேளதாளங்களுடன் தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் ஞானேந்திர சர்மா. ஓய்... மேலும் பார்க்க

600 மைல் சென்று தாக்கும் ஏவுகணை தயார்: ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் அமெரிக்கா!

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் இரண்டாவது மாதத்தில் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்கா கூட்டுப்படை நடத்தி வரும் வான்வெளித்தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகி... மேலும் பார்க்க