செய்திகள் :

"'மூக்குத்தி அம்மன்' படத்துக்கு 3 டிக்கெட் வசனத்தை சூர்யா சார் நிக்கச் சொன்னார்!" - ஆர்.ஜே. பாலாஜி

post image

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது. திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியும் படத்திற்கு மக்களின் வரவேற்புக் கிடைத்து வருகிறது.

த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா ரவி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். படத்தின் ரிலீஸுக்குப் பிறகு நம் சினிமா விகடன் சேனலுக்கு ஆர்.ஜே. பாலாஜி பேட்டியளித்திருக்கிறார்.

Karuppu BTS
Karuppu BTS

'நானும் ரௌடிதான்' திரைப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 'அஞ்சான் படத்திற்கு 5 டிக்கெட் இருக்கு வர்றீயா' என நகைச்சுவையாக ஒரு வசனம் பேசியிருப்பார்.

இதுபோல, இந்தப் படத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் 'முக்குத்தி அம்மன்' படத்துக்கு 3 டிக்கெட் இருக்கு வர்றீயா என சூர்யா ஜாலியாக சொல்லும் ஒரு வசனம் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வசனம் பற்றி ஆர்.ஜே. பாலாஜி, "சூர்யா சார் அந்த வசனத்தைப் பேசவே மாட்டேன்னு சொல்லிட்டார். நான் நடிச்ச வெவ்வேறு படங்களுடைய டைட்டில் சொல்லிப் பேசச் சொன்னேன்.

ஆனா, அவர் பண்ண மாட்டேன்னு உறுதியாகச் சொன்னார். 'கருப்பு' படத்தின் ரிலீஸுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி அந்த வசனத்தை நீக்கச் சொல்லிட்டார். இன்னொருத்தருடைய படத்தை நான் கலாய்க்கக் கூடாதுனுதான் அவர் பேச மாட்டேன்னு சொன்னார்.

RJ Balaji Interview
RJ Balaji Interview

நான்தான் அந்தப் படத்தை டைரக்ட் பண்ணினேன்னு பேசச் சொன்னேன். தியேட்டர்ல அந்த வசனத்தை எல்லோரும் என்ஜாய் பண்றாங்க. ஆனால், 'முக்குத்தி அம்மன்' படம் ஓடிடியில் ரிலீஸ் ஆச்சு.

இந்த இடத்துல லாஜிக்கலாக மக்கள் யோசிக்க மாட்டாங்கனு நம்பினேன். ஏன்னா, சினிமா ஒரு மேஜிக். அதுபோல, சூர்யா சார் சில விஷயங்களுக்கு மட்டும் 'இதை கண்டிப்பா பேசணுமா'னு கேட்பார். பிறகு நான்தான் அவரைப் பேச வைப்பேன். அதுக்கு நானே பொறுப்பெடுத்துக்கிறேன்" எனப் பேசினார்.

Karuppu: ரஜினியின் பாராட்டு, ஆமீர் கான் சூர்யாவுக்கு அனுப்பிய மெசேஜ்! - மகிழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது. திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகியும் படத்திற்கு மக்களின் வரவேற்புக் கிட... மேலும் பார்க்க

'இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்' - அஜித் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி இன்று காலை காலமானார். இவருக்கு வயது 85. உடல்நலக் குறைபாடு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் காலமானார். இவர் சென்னையில் அஜித்துடன் அவருடைய வீட்டில்தான் வசித்து... மேலும் பார்க்க

சென்னை: நடிகர் அஜித் குமாரின் அம்மா காலமானார்

நடிகர் மற்றும் கார் ரேசருமான அஜித் குமாரின் அம்மா மோகினி மணி. இவருக்கு வயது 85.தெலங்கானாவைப் பூர்வீகமாக கொண்ட அஜித் குமார், தமிழில் நடிக்கத் தொடங்கிய பிறகு தமிழ்நாட்டில் செட்டில் ஆனார். சென்னையில் அஜி... மேலும் பார்க்க

What To Watch: 'பிளாஸ்ட்', 'கர', 'லீடர்' - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் என்னென்ன?

இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் வந்திருக்கும் படங்கள் என்னென்ன?பிளாஸ்ட் - தமிழ்சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி, ஜான் கொக்கன், விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம், பவன்... மேலும் பார்க்க

"இதுக்காக பேட்மிண்டன் கத்துக்கிட்டேன்'' - KPY பாலா ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படம்!

'காந்தி கண்ணாடி' திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான KPY பாலா, தற்போது தன்னுடைய இரண்டாவது படமாக 'ரீமேட்ச்' எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். KPY Bala - Rematch Movie'ரீமேட்ச்' பட பூஜை... மேலும் பார்க்க

"அடுத்த வண்டியில் ஏறி நான் உன்னிடம் வந்து சேர்ந்து கொள்கிறேன்!" - சத்யேந்திராவுக்கு மிஷ்கின் இரங்கல்

நடிகர் மற்றும் திரைப்பட விமர்சகர் சத்யேந்திரா நேற்று காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர் நேற்றைய தினம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அரசு மருத்துவமனையில் காலமானார். Actor Satyendraஇவருடைய ... மேலும் பார்க்க