செய்திகள் :

மூதாட்டிகள் கொலை வழக்கு; குவாரியிலிருந்து தப்பிய கொலையாளி; சுட்டுப்பிடித்த போலீஸ்

post image

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த பெரியம்மா மற்றும் பாவாயி ஆகிய இரண்டு பேரையும் கடந்த 03.11.2025 தேதியில் இருந்து காணவில்லை என மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், 04.11.2025 அன்று காலை தூதனூர் காட்டுளவில் உள்ள கல் குவாரியில் சடலம் மிதப்பதாக அந்தப் பக்கம் சென்றவர்கள் மகுடஞ்சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்த பின்னர் ஆட்டையாம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கல்குவாரியில் மிதந்த சடலத்தை மீட்டு பார்த்தபோது ஆடு மேய்க்கும் பெரியம்மா என்பது தெரிய வந்தது.

என்கவடர் செய்யப்பட்ட அய்யனார்

அதன் பின்னர் மூன்று மணி நேரம் கழித்து பாவாயின் உடல் மேலே மிதந்தது. அதனையும் மீட்டெடுத்தனர்.‌ இரு மூதாட்டியின் உடல்களையும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் முதல் கட்ட விசாரணையில் பெரியம்மா அணிந்திருந்த இரண்டு தோடு, மூக்குத்தி, வெள்ளி கால் காப்பு ஆகியவையும், பாவாயி அணிந்திருந்த தோடு, வெள்ளி கால் காப்பு ஆகியவையும் காணாமல் போயிருக்கின்றன. இதனையடுத்து கல் குவாரி அருகே குடிசை வீட்டில், சேலம் மாவட்டம் கருப்பூர், வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவர் குவாரி அருகே தங்கி உள்ளார்.

இவர் கடந்த 3 ஆம் தேதி இரவிலிருந்து காணவில்லை. அது மட்டுமல்லாமல் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீசார் அவர் மீது சந்தேகப்பட்டு மூதாட்டிகளின் நகைக்காக கொலை செய்யப்பட்டனரா என விசாரணை மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு மூதாட்டிகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அய்யனாரை சங்ககிரி அருகே ஒருக்காமலை பகுதியில் போலீசார் சுட்டு பிடித்தனர். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அய்யனார் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது.

ஓசூர்: இளம் பெண்ணுடன் ஏற்பட்ட தன்பாலின ஈர்ப்பு; கைக்குழந்தையை கொன்ற கொடூரத் தாய் - நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகேயுள்ள கெலமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). பெயிண்டர் தொழிலாளி. இவரின் மனைவி பாரதி (26). இந்த தம்பதிக்கு 5 மற்றும... மேலும் பார்க்க

அலறி துடித்த இளம்பெண், காரில் கடத்தலா? - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி; கோவை காவல் ஆணையர் விளக்கம்

கோவை விமான நிலையம் அருகே இளம் பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை இருகூர் அருகே அத்தப்பகவுண்டன்புதூரில் தீப... மேலும் பார்க்க

விருதுநகர்: கேரளாவில் தப்பிய கைதி - பந்தல்குடி எஸ்.எஸ்.ஐ உட்பட 3 போலீஸார் சஸ்பெண்ட்!

கேரளா சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் தப்பியது தொடர்பாக விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் உட்பட 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்... மேலும் பார்க்க

`பள்ளி, கல்லூரி மாணவர்களே டார்கெட்' - ஊட்டியில் சிக்கிய ஒடிசா கஞ்சா வியாபாரி!

மூன்று மாநிலங்களின் எல்லையில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்தது வருகிறது. அதிலும் குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் இருந... மேலும் பார்க்க

குஜராத்: கணவனைக் கொன்று கிட்சனில் புதைத்த மனைவி; அதன்மீது நின்று தினமும் சமைத்ததாக பகீர் வாக்குமூலம்

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள சர்கேஜ் என்ற இடத்தில் தனது மனைவியோடு வசித்து வந்தவர் மொகமத் இஸ்ரேயல். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மொகமத் கொத்தனார் வேலை செய்து வந்தார். திடீரென கடந்த ஒரு வருடத்தி... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பெண்ணை தாக்கியதாக புகார்; ஜி.பி.முத்து மற்றும் குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பெருமாள்புரம் கூலத்தெருவைச் சேர்ந்தவர் முத்து மகேஷ். இவரது மனைவி பால அமுதா. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்து மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் தெருவில் சென்று கொண்டிருந்த... மேலும் பார்க்க