செய்திகள் :

விருதுநகர்: கேரளாவில் தப்பிய கைதி - பந்தல்குடி எஸ்.எஸ்.ஐ உட்பட 3 போலீஸார் சஸ்பெண்ட்!

post image

கேரளா சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் தப்பியது தொடர்பாக விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் உட்பட 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். தென்காசியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால், அவர் மீது பந்தல்குடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மேலும் இவர், கேரளா மாநிலத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால், அவர் மீது வையூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்கள்

இந்த நிலையில் பந்தல்குடி வழக்கு தொடர்பாக பாலமுருகனை அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, கேரளா ஜெயிலில் இருந்து, பந்தல்குடி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் நாகராஜன், காவலர்கள் ரவிஜோதி, சுதாகர் ஆகியோர் அழைத்து வந்தனர். அதன் பிறகு பாலமுருகனை ஒரு காரில் ஏற்றிக்கொண்டு கேரளா வையூர் ஜெயிலில் அடைப்பதற்காக சிறப்பு சார்பு ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர் சென்றனர். வையூர் ஜெயில் முன் சென்றபோது, பாலமுருகன் இயற்கை உபாதைக்கு செல்வதாக கூறி, காவலுக்கு சென்ற போலீசாரிடம் இருந்து தப்பி சென்றார்.

விருதுநகர் எஸ்பி கண்ணன்

அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்த தகவல் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பந்தல்குடி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் நாகராஜன், காவலர்கள் ரவிஜோதி, சுதாகர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் கேரளாவில் தப்பிய கைதி பாலமுருகனை பந்தல்குடி மற்றும் அருப்புக்கோட்டை போலீசார் கேரளா பகுதியில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

`பள்ளி, கல்லூரி மாணவர்களே டார்கெட்' - ஊட்டியில் சிக்கிய ஒடிசா கஞ்சா வியாபாரி!

மூன்று மாநிலங்களின் எல்லையில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்தது வருகிறது. அதிலும் குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் இருந... மேலும் பார்க்க

குஜராத்: கணவனைக் கொன்று கிட்சனில் புதைத்த மனைவி; அதன்மீது நின்று தினமும் சமைத்ததாக பகீர் வாக்குமூலம்

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள சர்கேஜ் என்ற இடத்தில் தனது மனைவியோடு வசித்து வந்தவர் மொகமத் இஸ்ரேயல். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மொகமத் கொத்தனார் வேலை செய்து வந்தார். திடீரென கடந்த ஒரு வருடத்தி... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பெண்ணை தாக்கியதாக புகார்; ஜி.பி.முத்து மற்றும் குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பெருமாள்புரம் கூலத்தெருவைச் சேர்ந்தவர் முத்து மகேஷ். இவரது மனைவி பால அமுதா. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்து மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் தெருவில் சென்று கொண்டிருந்த... மேலும் பார்க்க

தூத்துக்குடி: "வேலைக்கு அழைத்துச் செல்லாததால் கொன்றேன்" - பெயிண்டர் கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. பெயிண்டிங் காண்ட்ராக்டரான இவர், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வீடுகளில் பெண்டிங் காண்ட்ராக்ட் எடுத்து செய்து வந்துள்ளார். இவர... மேலும் பார்க்க

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இருவரை கிணற்றில் வீசி மறைத்ததாக இருவர் கைது - சாத்தூரில் துயரம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள நடுவப்பட்டி கெங்கையம்மன் கோயிலுக்கு திருமணத்திற்காக சிவலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தனது உறவினர்களுடன் கடந்த 31 ஆம் தேதி இரவு சென்றுள்ளார்.இ... மேலும் பார்க்க

Sexual Abuse: `வழி நெடுக வலியின் சத்தமும்; அழுகுரலின் நடுக்கமும்' #Hersafety

கோவையில் தனது நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த முதுகலை முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவியை கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிரு... மேலும் பார்க்க