செய்திகள் :

மூதாட்டியைக் கொலைசெய்து உடலின் மீது சர்க்கரை தூவியது ஏன்? - சிக்கிய ஜோடியின் 'பகீர்' வாக்குமூலம்!

post image

ஒரு கொலை... அதை மறைக்கத் தமிழ் சினிமா பாணியில் போடப்பட்ட திட்டம்... ஆனால், வெறும் 5 மணி நேரத்தில் அத்தனை ‘ஸ்கெட்சையும்’ காலி செய்து, கொலையாளிகளைச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியிருக்கிறது காவல்துறை.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள சூரக்குடியில் 70 வயதான பூச்சியம்மாள் என்ற மூதாட்டி கொடூரமாகக் கொல்லப்பட்டு, உடல் மீது சர்க்கரை தூவப்பட்டுக் கிடந்த சம்பவம், தமிழ்நாடு முழுவதையும் அதிர வைத்திருக்கிறது. தடம் தெரியாமல் தப்பிக்க நினைத்த ஜோடியை சில மணி நேரங்களில் தட்டித் தூக்கிய பின்னணி குறித்து எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் நம்மிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டனர்.

``சூரக்குடியைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரியோட கணவர் ஒரு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாரு. ரெண்டு குழந்தைகளோட சென்னையில அவர் தங்கியிருந்தப்போ, சரவணன் என்பவரோட பழக்கம் ஏற்பட்டிருக்கு.

ரெண்டு பேரும் திருவிழாவுக்காக ஊருக்கு வந்தப்போதான் அதே ஊரைச் சேர்ந்த, தனது உறவினரான பூச்சியம்மாள் நகையைப் பார்த்து கணக்கு போட்டிருக்காங்க. பூச்சியம்மாள் எப்போதும் தங்க நகை அணிந்திருக்கும் பழக்கம் உள்ளவர்.

கொலை செய்யப்பட்ட பூச்சியம்மாள்

சரவணனுக்கு இருந்த கடனை அடைக்க மூதாட்டியைக் கொன்றுவிட்டு நகையைக் கொள்ளையடிக்க முடிவு பண்ணியிருக்காங்க. முதல்ல தயங்கினாலும், சரவணனின் ஆசை வார்த்தையில சாமுண்டீஸ்வரியும் சம்மதிச்சிருக்காங்க.

கடந்த சனிக்கிழமை மாலை, உறவினர் வீட்டுக்குப் போறதா சொல்லிட்டுப்போன பூச்சியம்மாளை, சாமுண்டீஸ்வரி ஆசையா பேசித் தன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க. வீட்டுக்குள்ள வந்ததும், சரவணனும் சாமுண்டீஸ்வரியும் சேர்ந்து மூதாட்டியின் மூச்சு அடங்குற வரைக்கும் போர்வையால முகத்தை அமுக்கிக் கொடூரமா கொலை பண்ணியிருக்காங்க.

மூச்சுப் பேச்சில்லாம சுருண்டு விழுந்ததும், அவங்க உடம்பில் இருந்த 10.5 சவரன் தங்க நகைகளைக் கழட்டிக்கிட்டு, சடலத்தை ஒரு சாக்குல கட்டி எம்.சூரக்குடி அரசுப் பள்ளி பக்கத்துல இருக்குற கால்வாயில வீசியிருக்காங்க.

செல்போனை ஊரணியிலும், செருப்பை வயல் பகுதியிலும் வீசி இருக்காங்க. அதன் பின், காரில் காளாப்பூர் வரை சென்று விட்டு, மீண்டும் ஊருக்குள் வந்து மற்றவர்களுடன் சேர்ந்து பூச்சியம்மாளை தேடியிருக்காங்க.

சடலத்தின்மீது சர்க்கரை..!

பகீர் வாக்குமூலம்!

ஞாயிற்றுக்கிழமை காலையில சடலத்தைக் கைப்பற்றியபோது எங்களுக்குப் பெரிய அதிர்ச்சி. மூதாட்டியோட உடல் முழுக்க கிலோ கணக்குல சர்க்கரையைத் தூவியிருந்தாங்க. 'எதுக்காக இந்த சர்க்கரை?'னு கைது செய்யப்பட்ட சரவணன்கிட்ட விசாரிச்சப்போதான் அந்த பகீர் உண்மை வெளிவந்துச்சு.

'சமீபத்துல ஒரு தமிழ் சினிமா படம் பார்த்தேன். அதுல கொலையைப் பண்ணிட்டு பிணத்தைச் சுத்தி சர்க்கரையைத் தூவி விடுவாங்க. சர்க்கரை இருந்தா எறும்புகளும் பூச்சிகளும் வந்து மொய்க்கும். அப்படி மொய்க்கும்போது நாங்க விட்டுட்டுப் போன கால்தடங்கள், கைரேகைகள் எல்லாத்தையும் எறும்புகளே அழிச்சிடும்னு நம்பினேன். அதுமட்டுமல்லாம சர்க்கரை இருந்தா பிணம் சீக்கிரமா அழுகிடும், துர்நாற்றமும் வராதுனு நினைச்சேன்...' அப்படின்னு சொல்லி அதிர வைச்சாரு.

சரவணன், சாமுண்டீஸ்வரி

சினிமா லாஜிக் நிஜத்துக்கு செட் ஆகாதுங்கிறதும், எறும்புகளால தடயவியல் சான்றுகளை அழிக்க முடியாதுங்கிற அறிவியல் உண்மையும் அந்த ஜோடிக்குத் தெரியலை.

ஐந்து மணி நேரத்துல 'ஸ்கெட்ச்' காலி!

சடலம் கிடைச்சவுடனே மோப்ப நாய், தடயவியல் நிபுணர்களைக் களத்துல இறக்கினோம். இன்னொரு பக்கம், மூதாட்டி வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்து கால்வாய் வரைக்கும் இருந்த சிசிடிவி கேமராக்களை அலசினோம். அவ்வளவுதான்... சடலம் கிடைச்ச 5 மணி நேரத்துக்குள்ள ரெண்டு பேரையும் மடக்கிப் பிடிச்சோம்.

நாங்க பிடிச்சுடுவோம்னு பயந்து தங்களோட செல்போன், செருப்புகளை வெவ்வேறு இடங்களில் வீசி எறிஞ்சு திசை திருப்பப் பார்த்திருக்காங்க. ஆனா, சாமுண்டீஸ்வரியோட கார்ல மறைச்சு வச்சிருந்த 10.5 சவரன் நகைகளையும் மீட்டுட்டோம்…” என்றனர்.

சினிமா வித்தையைக் காட்டி தப்ப நினைத்த ஜோடி, தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறது

`இங்கதான் இருப்பா' - சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொன்றுவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து தேடிய இளைஞர்

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு படித்து வந்தாள். அவளது பெற்றோர் விவசாய வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், உடல் நிலை சரியில்லாமல் சிறுமி பள்ளிக... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். அதே பகுதி... மேலும் பார்க்க

'எனக்கு ​ஐபோன், உனக்கு பைக்' தாத்தாவை கொன்று நகையை திருட காதலனுக்கு கொட்டேஷன் கொடுத்த 13 வயது பேத்தி

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவாற்றா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சிவன்குட்டி (65). அம்பலப்புழாவைச் சேர்ந்த சிவன்குட்டி, குடும்பத்துடன் கொல்லம் பரவூரில் வசித்து வந்தார். மகளின் கணவர் ப... மேலும் பார்க்க

மதுரை: பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியைக் காட்டி ரூ. 35 ஆயிரம் பறிப்பு; வைரல் வீடியோவின் பின்னணி

மதுரை - மேலக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில், நேற்று இரவு மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தி... மேலும் பார்க்க

திருச்சி: ரீல்ஸ் மோகம்; கோயில் சுவற்றின்மீது பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசிய இருவர் கைது!

திருச்சி, பாலக்கரை, காஜாபேட்டை மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோயில் உள்ளது. அந்த கோயில் சுவற்றில் இரவு நேரத்தில் பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து அதை கோயிலின் சுவரில் மர்ம நபர்கள் வீசி உள்ளனர். இதனால், அந்த ... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்ற பெண்; துரத்திச் சென்று செயின் பறிக்க முயன்ற தவெக நிர்வாகி? - போலீஸ் தீவிர விசாரணை

கரூர் - கோவை சாலையில் உள்ள என்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்த மகுடபதியின் மனைவி பிரியா. இவர், தனது பெற்றோரை சந்திப்பதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி நோக்கி சென்றுள்ளார். அப்போது, ... மேலும் பார்க்க