செய்திகள் :

மூதாட்டியைக் கொலைசெய்து உடலின் மீது சர்க்கரை தூவியது ஏன்? - சிக்கிய ஜோடியின் 'பகீர்' வாக்குமூலம்!

post image

ஒரு கொலை... அதை மறைக்கத் தமிழ் சினிமா பாணியில் போடப்பட்ட திட்டம்... ஆனால், வெறும் 5 மணி நேரத்தில் அத்தனை ‘ஸ்கெட்சையும்’ காலி செய்து, கொலையாளிகளைச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியிருக்கிறது காவல்துறை.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள சூரக்குடியில் 70 வயதான பூச்சியம்மாள் என்ற மூதாட்டி கொடூரமாகக் கொல்லப்பட்டு, உடல் மீது சர்க்கரை தூவப்பட்டுக் கிடந்த சம்பவம், தமிழ்நாடு முழுவதையும் அதிர வைத்திருக்கிறது. தடம் தெரியாமல் தப்பிக்க நினைத்த ஜோடியை சில மணி நேரங்களில் தட்டித் தூக்கிய பின்னணி குறித்து எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் நம்மிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டனர்.

``சூரக்குடியைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரியோட கணவர் ஒரு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாரு. ரெண்டு குழந்தைகளோட சென்னையில அவர் தங்கியிருந்தப்போ, சரவணன் என்பவரோட பழக்கம் ஏற்பட்டிருக்கு.

ரெண்டு பேரும் திருவிழாவுக்காக ஊருக்கு வந்தப்போதான் அதே ஊரைச் சேர்ந்த, தனது உறவினரான பூச்சியம்மாள் நகையைப் பார்த்து கணக்கு போட்டிருக்காங்க. பூச்சியம்மாள் எப்போதும் தங்க நகை அணிந்திருக்கும் பழக்கம் உள்ளவர்.

கொலை செய்யப்பட்ட பூச்சியம்மாள்

சரவணனுக்கு இருந்த கடனை அடைக்க மூதாட்டியைக் கொன்றுவிட்டு நகையைக் கொள்ளையடிக்க முடிவு பண்ணியிருக்காங்க. முதல்ல தயங்கினாலும், சரவணனின் ஆசை வார்த்தையில சாமுண்டீஸ்வரியும் சம்மதிச்சிருக்காங்க.

கடந்த சனிக்கிழமை மாலை, உறவினர் வீட்டுக்குப் போறதா சொல்லிட்டுப்போன பூச்சியம்மாளை, சாமுண்டீஸ்வரி ஆசையா பேசித் தன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க. வீட்டுக்குள்ள வந்ததும், சரவணனும் சாமுண்டீஸ்வரியும் சேர்ந்து மூதாட்டியின் மூச்சு அடங்குற வரைக்கும் போர்வையால முகத்தை அமுக்கிக் கொடூரமா கொலை பண்ணியிருக்காங்க.

மூச்சுப் பேச்சில்லாம சுருண்டு விழுந்ததும், அவங்க உடம்பில் இருந்த 10.5 சவரன் தங்க நகைகளைக் கழட்டிக்கிட்டு, சடலத்தை ஒரு சாக்குல கட்டி எம்.சூரக்குடி அரசுப் பள்ளி பக்கத்துல இருக்குற கால்வாயில வீசியிருக்காங்க.

செல்போனை ஊரணியிலும், செருப்பை வயல் பகுதியிலும் வீசி இருக்காங்க. அதன் பின், காரில் காளாப்பூர் வரை சென்று விட்டு, மீண்டும் ஊருக்குள் வந்து மற்றவர்களுடன் சேர்ந்து பூச்சியம்மாளை தேடியிருக்காங்க.

சடலத்தின்மீது சர்க்கரை..!

பகீர் வாக்குமூலம்!

ஞாயிற்றுக்கிழமை காலையில சடலத்தைக் கைப்பற்றியபோது எங்களுக்குப் பெரிய அதிர்ச்சி. மூதாட்டியோட உடல் முழுக்க கிலோ கணக்குல சர்க்கரையைத் தூவியிருந்தாங்க. 'எதுக்காக இந்த சர்க்கரை?'னு கைது செய்யப்பட்ட சரவணன்கிட்ட விசாரிச்சப்போதான் அந்த பகீர் உண்மை வெளிவந்துச்சு.

'சமீபத்துல ஒரு தமிழ் சினிமா படம் பார்த்தேன். அதுல கொலையைப் பண்ணிட்டு பிணத்தைச் சுத்தி சர்க்கரையைத் தூவி விடுவாங்க. சர்க்கரை இருந்தா எறும்புகளும் பூச்சிகளும் வந்து மொய்க்கும். அப்படி மொய்க்கும்போது நாங்க விட்டுட்டுப் போன கால்தடங்கள், கைரேகைகள் எல்லாத்தையும் எறும்புகளே அழிச்சிடும்னு நம்பினேன். அதுமட்டுமல்லாம சர்க்கரை இருந்தா பிணம் சீக்கிரமா அழுகிடும், துர்நாற்றமும் வராதுனு நினைச்சேன்...' அப்படின்னு சொல்லி அதிர வைச்சாரு.

சரவணன், சாமுண்டீஸ்வரி

சினிமா லாஜிக் நிஜத்துக்கு செட் ஆகாதுங்கிறதும், எறும்புகளால தடயவியல் சான்றுகளை அழிக்க முடியாதுங்கிற அறிவியல் உண்மையும் அந்த ஜோடிக்குத் தெரியலை.

ஐந்து மணி நேரத்துல 'ஸ்கெட்ச்' காலி!

சடலம் கிடைச்சவுடனே மோப்ப நாய், தடயவியல் நிபுணர்களைக் களத்துல இறக்கினோம். இன்னொரு பக்கம், மூதாட்டி வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்து கால்வாய் வரைக்கும் இருந்த சிசிடிவி கேமராக்களை அலசினோம். அவ்வளவுதான்... சடலம் கிடைச்ச 5 மணி நேரத்துக்குள்ள ரெண்டு பேரையும் மடக்கிப் பிடிச்சோம்.

நாங்க பிடிச்சுடுவோம்னு பயந்து தங்களோட செல்போன், செருப்புகளை வெவ்வேறு இடங்களில் வீசி எறிஞ்சு திசை திருப்பப் பார்த்திருக்காங்க. ஆனா, சாமுண்டீஸ்வரியோட கார்ல மறைச்சு வச்சிருந்த 10.5 சவரன் நகைகளையும் மீட்டுட்டோம்…” என்றனர்.

சினிமா வித்தையைக் காட்டி தப்ப நினைத்த ஜோடி, தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறது

சாமியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கோயில் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற நபர்கள் - வைரலாகும் வீடியோ!

மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமாகக் கருதப்படும் நாக்பூரில் உள்ள ஷிட்லா தேவி கோயிலில் மர்ம் நபர்கள் இரண்டு பேர் நுழைந்து, அங்கிருந்த உண்டியல் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். கோயில் பொறுப்பாளர் ... மேலும் பார்க்க

அரக்கோணம்: கார் ஷெட்டில் ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள்; சிக்கிய இருவர்; பின்னணி என்ன?

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஜவ்வாது மலைத்தொடரில், இயற்கையாகவே மிக உயர்தரமான சந்தன மரங்கள் விளைகின்றன. இங்கிருந்து வெட்டப்படும் சந்தன மரங்களைச் சேகரிக்கவும், பாதுகாப்பாகப் பராமரிக்கவும் அரை ... மேலும் பார்க்க

`அவர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்கிறார்' - மதுவில் விஷம்; கணவனை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய மனைவி

குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரை சேர்ந்தவர் ஜிக்னேஷ். இவரது மனைவி பிரித்வி. ஜிக்னேஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதாக பிரித்வி அவரின் உறவினர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். இந்த நிலையில... மேலும் பார்க்க

தூத்துக்குடி த.வெ.க நிர்வாகி மீது இளம்பெண் மிரட்டல் புகார் - போலீஸார் விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியைச் சேர்ந்த த.வெ.க.வைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், த.வெ.க. நிர்வாகிகள் 2 பேர் தன்னை... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் நட்பால் விபரீதம்; 24 வயது பெண் எரித்துக் கொல்லப்பட்ட கொடூரம்; ஈரோட்டில் அதிர்ச்சி

ஈரோடு மாவட்டம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான வினோதினி. திருப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவரைத் திருமணம் செய்து ஆண் குழந்தையுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். ராமநாதபுரம் சாயல்குடியைச் சேர்ந்த நவநீதக... மேலும் பார்க்க

சிறுமியின் வாயில் செல்லோ டேப்பை ஒட்டி பாலியல் வன்கொடுமை; ஈரோட்டில் அதிர்ச்சிச் சம்பவம்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த மார்ச் மாதம் 10 - வகுப்பு தேர்வை எழுதி முடித்துவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், பகல் பொ... மேலும் பார்க்க