செய்திகள் :

மேம்பாலத்தின் அருகே நின்ற காரில் 3 பேரின் சடலம்; கொலையா? தற்கொலையா?

post image

மேற்கு டெல்லியின் பீராகர்கி மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில், முதியவர் மற்றும் பெண் உட்பட மூன்று பேர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மதியம் 3.50 மணியளவில், மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை ஓரம் நின்றிருந்த கார் ஒன்றில், மூன்று பேர் நீண்ட நேரமாக அசைவின்றி இருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, காரின் கதவை உடைத்து திறந்தபோது உள்ளே இருந்த மூன்று பேரும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். மேலும், காரினுள் ஒருவித 'விஷப் பொருளின்' கடுமையான நெடி வீசியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம்

உயிரிழந்தவர்கள் பாப்ரோலா கிராமத்தைச் சேர்ந்த ரந்தீர் சிங் (76), சிவ நரேஷ் சிங் (47). லட்சுமி தேவி (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ரந்தீர் சிங் ஓட்டுநர் இருக்கையிலும், மற்ற இருவரும் பின் இருக்கையிலும் அமர்ந்திருந்தனர். இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த ரந்தீர் சிங்கின் உறவினர், சிவ நரேஷை அடையாளம் காட்டினார். ஆனால், உயிரிழந்த பெண் லட்சுமி தேவிக்கும், மற்ற இருவருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து தெரியவில்லை. காரில் இருந்த பணம், கைபேசிகள் மற்றும் அந்தப் பெண் அணிந்திருந்த நகைகள் அப்படியே இருந்ததால், இது கொள்ளைக்காக நடந்த கொலையாக இருக்க வாய்ப்பில்லை எனக் காவல்துறைக் கருதுகிறது.

காரில் இருந்து ஒரு குளிர்பான பாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் விஷம் ஏதேனும் கலக்கப்பட்டிருக்கலாமா என்ற சந்தேகத்தில், அது ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் வாகனத்தை முழுமையாக ஆய்வு செய்திருக்கின்றனர்.

டெல்லி காவல்துறை
டெல்லி காவல்துறை

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி, ``மூன்று பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த அறிக்கை வந்த பிறகுதான் இது தற்கொலையா அல்லது சதிச் செயலா என்பது உறுதியாகத் தெரியும்," என்றார்.

பட்டப்பகலில் மேம்பாலத்தின் அருகிலேயே கார் ஒன்றில் மூன்று பேர் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிழல் உலக மிரட்டல்: `190 இணையவழி மோசடி; ரூ.100 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள்' - இருவர் கைது!

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் 'டிஜிட்டல் கைது' மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை டெல்லி சைபர் பிரிவு காவல்துறை கைது செய்திருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்தப் புகாரில... மேலும் பார்க்க

கடனாளியாக்கிய சூதாட்டம்: ஒவ்வொரு முறையும் உடையை மாற்றி தப்பிய திருடன்; காட்டிக்கொடுத்த ஷூ!

மும்பையில் தினமும் ஏராளமான திருட்டு, செயின் பறிப்பு என பலதரப்பட்ட குற்றங்கள் நடக்கிறது. இதில் அதிகமான குற்றங்களில் துப்புத்துலங்காமலே போய்விடுகிறது. மும்பை சயான் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பைக்கில்... மேலும் பார்க்க

Cyber: ரூ.1700 மதிப்புள்ள ஆடையை ஆர்டர் செய்து ரூ.6.82 லட்சத்தை இழந்த பெண்; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசிக்கும் பெண் ஒருவர் “Biba.in” என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ.1700 மதிப்புள்ள ஆடை ஒன்றை ஆர்டர் செய்தார். அவர் பணத்தை ஆன்லைனில் செலுத்தாமல் ஆடையை வாங்கிய பிறகு பணம் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: சக மாணவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மாணவி; தாய் கண்டித்ததால் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி அப்பகுதியிலுள்ள அரசுப்பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார்.அதே பள்ளியில் படித்து வந்த உறவினரான மாணவர் ஒருவர், அந்த மாணவியுடன் பழகி வ... மேலும் பார்க்க

தென்காசி: நகை, பணம் கொள்ளை; மீண்டும் அதே வீட்டின் முன்பு வீசிச் சென்ற ’பர்தா கொள்ளையன்!’

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள பாம்புக்கோயில் சந்தையைச் சேர்ந்தவர் மாரியப்பன். அப்பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். கடந்த 6-ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் தன் மனைவி பார்வதியுடன் தன் உற... மேலும் பார்க்க

கோவை: 24 மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து மிரட்டல்; கல்லூரி மாணவர் கைதான பின்னணி என்ன?

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சாலையில் தனியார் கல்லூரி உள்ளது. அங்கு அண்மைக்காலமாக மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து இன்ஸ்டராகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டதாக க... மேலும் பார்க்க