செய்திகள் :

'யூடியூப்பில் ஃபாலோவர்ஸ் இல்லை' - கோபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஸ்டூடியோவிற்கு தீ வைத்த வாலிபர்

post image

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கார்வா என்ற இடத்தைச் சேர்ந்த விதயக் பிரஜாபதி (27) என்பவர் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார்.

அதில் வீடியோக்களைப் போட தனது வீட்டில் ரூ.10 லட்சம் செலவு செய்து நவீன முறையில் ஸ்டூடியோ ஒன்றையும் உருவாக்கினார். ஆனால் சேனல் ஆரம்பித்து பல மாதங்கள் ஆன பிறகும் போதிய ஃபாலோவர்கள் வரவில்லை.

youtube
youtube

சப்ஸ்கிரைப்பர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை. இதனால் பிரஜாபதி மன அழுத்தத்திற்குச் சென்றார். இது குறித்து பிரஜாபதி வீட்டிற்கு அருகில் வசிக்கும் பிரகாஷ் குமார் என்பவர் கூறுகையில், பிரஜாபதி கடந்த ஒருவாரமாக ஸ்டூடியோவைப் பூட்டிக்கொண்டு தனிமையில் இருந்தார்.

இரவு 10 மணிக்கு வீட்டைப் பூட்டிக்கொண்டு ஸ்டூடியோவிற்குத் தீவைத்துக்கொண்டார். இத்தீயில் பிரஜாபதி குடும்பத்தினரும் சிக்கிக்கொண்டனர். இரும்புக் கதவை அவர்களால் திறக்க முடியவில்லை. அவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர்.

இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து சுவர் ஒன்றை உடைத்து உள்ளே இருந்தவர்களை மீட்டனர். குடும்பத்தினர் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டுவிட்டாலும், அங்கிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகிவிட்டன.

போலீஸார் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது பிரஜாபதி சுவரில் இருந்து வெளியில் குதித்து தப்பித்து ஓடிவிட்டார். மறுநாள் அவரை உறவினர்கள் கண்டுபிடித்து மனநல நிபுணரிடம் அழைத்துச் சென்று கவுன்சிலிங் கொடுத்தனர்.

`நடைபாதையில் சென்ற பைக்; காலால் தடுத்து நிறுத்திய மூதாட்டி' - அவ்வை சண்முகி என புகழும் நெட்டிசன்கள்!

கேரளாவில் சாலை ஒன்றில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நெரிசலாக நின்றுகொண்டிருந்த நிலையில், நடைபாதையில் சில பைக்குகள் வேகமாக சென்றுகொண்டிருந்தன. அப்போது நடைபாதையில் மூதாட்டி ஒருவர் நடந்து வந்துகொண்டிருந்தார்.... மேலும் பார்க்க

அளவுக்கு அதிகமான மருந்து கொடுத்த டாக்டர்கள்? எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்தபோது உயிரிழந்த 6 வயது சிறுவன்

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கே.பி.ஹெல்த்கேர் சென்டருக்கு 6 வயது சிறுவனை அவனது தந்தை பிரசாந்த் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க அழைத்து வந்தார். டாக்டர்கள் அச்சிறுவனுக்கு ஊசி போட்டு ஸ்கேன் ... மேலும் பார்க்க

எங்கள் சாதி `மனிதநேயம்' - சாதியில் இருந்து ஒட்டுமொத்தமாக விடுதலை பெற்ற மகாராஷ்டிரா கிராமம்!

சாதிப்பிரச்னை நாடு முழுவதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எதாவது ஒரு வகையில் மக்கள் சாதிப்பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். காதல் திருமணங்கள்தான் இதில் அதிக அளவில் சாதிப்பிரச்னையை சந்திக்கின்றன. மகா... மேலும் பார்க்க

ஒரே நதி... ஐந்து நிறங்கள்; நகரும் ஓவியம்; - கொலம்பியாவின் இந்த மாயாஜாலத்தை நம்புவீர்களா?

நகரும் ஓவியம்கொலம்பியாவின் அடர்ந்த காடுகளுக்குள் ஒளிந்திருக்கும் கானோ கிரிஸ்டலேஸ் (Caño Cristales), சாதாரண கண்களுக்கு ஒரு நதியாகத் தெரியாது; அது ஒரு நகரும் ஓவியம்.இந்த நதி ஆண்டு முழுவதும் வண்ணமயமாக இர... மேலும் பார்க்க

Retardmaxxing: புத்திசாலிகள் தோற்கும் இடத்தில், `மக்கு' வேஷம் போட்டு ஜெயிப்பது எப்படி? - Gen Z Term

இணையவாசிகளின் (குறிப்பாக Gen Z) அகராதியில் தினமும் புதுப்புது வார்த்தைகள் முளைக்கின்றன. Looksmaxxing (அழகை மெருகேற்றுவது), Mewing (தாடையை சீர் செய்வது) வரிசையில் இப்போது லேட்டஸ்ட் வரவுதான் இந்த Retard... மேலும் பார்க்க

`இரவில் படுக்கச்சென்ற இளம்பெண் இச்சாதாரி பாம்பாக மாறினாரா?' - பாம்பு தோல், வளையலை விட்டுவிட்டு மாயம்

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள சிகன்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரீனா(20). இப்பெண் இரவில் தனது படுக்கைக்கு படுக்க சென்றார். ஆனால் காலையில் அவரது படுக்கைக்கு சென்றபோது அவரை காணவில்லை... மேலும் பார்க்க