செய்திகள் :

ரவுடியை பிடிக்கச் சென்று மலை உச்சியில் சிக்கிய காவலர்கள்; நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு

post image

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(30) இவன் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார்.

குறிப்பாக பாலமுருகன் மீது தென்காசி மட்டுமல்லாமல் திருநெல்வேலி, அருப்புக்கோட்டை, திருச்சி, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 90-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

சிறை
சிறை

அவரது சொந்த ஊரான கடையம் காவல் நிலையத்தில் மட்டும் பாலமுருகன் மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அதிகளவு திருட்டு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. பாலமுருகன் திருடுவதில் எவ்வளவு கை தேர்ந்தவரோ, அதே அளவுக்கு போலீஸ் பிடியில் இருந்து தப்புப்பதிலும் கைதேர்ந்தவராக இருந்துள்ளார். அதன்படி கேரளா மாநிலத்தில் நடைபெற்ற வழக்கில் கைதான பாலமுருகன் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையில் தமிழகத்தின் அருப்புக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக தமிழ்நாடு போலீசார் திருச்சூர் சிறையில் இருந்து பாலமுருகனை இரண்டு வாரங்களுக்கு முன்பு அழைத்து வந்துள்ளனர்.

மீண்டும் அவரை திருச்சூர் சிறைக்கு கொண்டு சென்ற போது சிறையில் வைத்து பாலமுருகன் தப்பிச் சென்றார். கடந்த இரண்டு வாரங்களாக அவரை பல இடங்களில் போலீசார் தேடி வந்த நிலையில் சொந்த ஊரான கடையம் ராமநதி அணை அருகே உள்ள சுமார் ஆயிரம் அடி உயரமுள்ள பொத்தையின் மேல் பதுங்கியிருப்பதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

சிறப்புப் படையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் நேற்றிரவு பாலமுருகனை தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

ரவுடி பாலமுருகன்
ரவுடி பாலமுருகன்

இரவு நேரத்தில் பலத்த மழை கொட்டித் தீர்த்த போதிலும், சக்தி வாய்ந்த லேசர் விளக்குகளுடன் போலீசார் தொடர்ந்து மலைப்பகுதியில் ஏறி தேடினர்.

இந்நிலையில், பாறையின் செங்குத்தான பகுதியில் ஏறிய ஐந்து காவலர்கள் மீண்டும் இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். பொத்தையின் நடுப்பகுதியில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்ததால் மீட்புப் பணியில் சுணக்கம் நீடித்தது.‌

உடனடியாக ஆலங்குளம் மற்றும் தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு இன்று அதிகாலை முதல் கட்டமாக 3 போலீசார் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் மற்ற இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.‌

தென்காசி
தென்காசி

இதனிடையே மலை பகுதியில் சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாக பதுங்கியுள்ள ரவுடி பாலமுருகனை தப்பிக்க விடாமல் பிடிப்பதற்கு மலையை சுற்றி 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ட்ரோன் கேமரா மற்றும் அப்பகுதியை சேர்ந்த உள்ளூர் வாசிகள் உதவியுடனும் ரவுடி பாலமுருகனை தேடி வருகின்றனர். இருப்பினும் போலீஸ் பிடியில் தப்புவதில் வல்லவரான பாலமுருகன் தொடர்ந்து டிமிக்கு கொடுத்து வருவதால் அவனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

பேரணாம்பட்டு: ஒரே இடத்தில் இறந்து அழுகி கிடந்த 3 காட்டு யானைகள் - தொடரும் உயிரிழப்பால் அதிர்ச்சி!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்துள்ள அரவட்லா மலையில் பாஸ்மார்பெண்டா சீத்தாம்மா காலடி என்ற இடத்தில், கடந்த மாதம் அழுகிய நிலையிலான 7 வயது ஆண் யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த ... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னையைக் கண்டித்த தலைமைக் காவலர்; காவல் நிலையத்திற்குள் புகுந்து வெட்டிய கும்பல்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பொத்தைப் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி. இவர், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.குடு... மேலும் பார்க்க

ஈரோடு: மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு - விசாரணையில் வனத்துறை; நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலையில் உள்ள ஈரட்டி, கடை ஈரட்டி, ஒந்தனை உள்ளிட்ட வனப் பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றி, சிறுத்தை என வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இரவு நேரத்தில் உணவுதேட... மேலும் பார்க்க

காரியாபட்டி: ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு லஞ்சம்; பேரூராட்சி பொறியாளர் கைது!

மதுரை செல்லூரைச் சேர்ந்த பழனி குமார், ஒப்பந்தக்காரராக உள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கடந்த 2022 ம் ஆண்டு ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு ஒப்பந்தம்... மேலும் பார்க்க

புதுச்சேரி: அடுத்தடுத்து சிக்கும் போலி மருந்து தொழிற்சாலைகள்! - கோடிக்கணக்கில் நாடு முழுவதும் சப்ளை

முன்னணி நிறுவனங்களின் மருந்துகள் போலியாக தயாரிப்புஇந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டியி... மேலும் பார்க்க

சேலம்: சாலை அமைக்கும் பணியில் தகராறு; மூதாட்டியைத் தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ; வீடியோ வைரல்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை பணி நடக்கிறது. அங்கு வசிக்கும் மூதாட்டி சரோஜா வீட்டை ஒட்டி சாலை அமைக்க முயன்றுள்ளனர். அப்போது வீட்டை ஒட்டி போடாமல், அந்தப... மேலும் பார்க்க