செய்திகள் :

`பைலட் பணி நேரம் குறைப்பு' - அரசின் புதிய விதி; 800 இண்டிகோ விமானங்கள் ரத்து - பயணிகள்அவதி

post image

நாட்டின் மிகப்பெரிய தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனமாக கருதப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை கடந்த இரண்டு நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளால், இண்டிகோவின் விமான சேவையே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 800-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இண்டிகோ நிறுவனம்
இண்டிகோ நிறுவனம்

இதனால் டெல்லி, புனே, மும்பை போன்ற முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மும்பை விமான நிலையத்தில் பயணிகளிடையே தள்ளுமுள்ளல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

பயணிகள் இரவு நேரத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விமான நிலையத்தில் காத்துக்கிடந்தனர். பாடகர் ராகுல் வைத்யா என்பவர் கோவாவில் இருந்து மும்பை செல்ல விமான டிக்கெட்களுக்கு ரூ. 4.2 லட்சம் செலவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் வைத்யா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கோவா மற்றும் மும்பை விமான நிலையங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

அவர் தனது பதிவில், “எங்களுக்கு கொல்கத்தாவில் இரவில் ஒரு ஷோ இருக்கிறது. அங்கு எப்படி செல்வது என்று தெரியவில்லை. கோவாவில் இருந்து மும்பைக்கு செல்ல மட்டும் டிக்கெட் கட்டணமாக ரூ. 4.20 லட்சம் செலவு செய்திருக்கிறேன். மும்பையில் இருந்து கொல்கத்தாவிற்கு தனி கட்டணம் செலவிட வேண்டியுள்ளது. உள்நாட்டில் நான் விமானப் பயணத்திற்கு அதிக அளவில் செலவிட்டது இதுவே முதல் முறையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் வைத்யா
ராகுல் வைத்யா

டி.வி. நடிகை நியா சர்மாவும் உள்ளாட்டு விமானப் பயணத்திற்கு ரூ. 54 ஆயிரம் செலவிட்டதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த இரண்டு நாள்களாக விமான சேவை பாதிக்கப்பட்டு வருவதற்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், விமான சேவையை சரிசெய்ய விமான போக்குவரத்துறை ஆணையம், விமான நிலையங்களுடன் இணைந்து முயற்சி செய்து வருவதாகவும் இண்டிகோ தெரிவித்துள்ளது.

``சக ஊழியர்களுக்கு பகிர்ந்து கொடுப்பேன்'' - அபுதாபியில் ரூ.60 கோடி லாட்டரி வென்ற கேரள அதிர்ஷ்டசாலி

அபுதாபியில் நடைபெறும் பிரபலமான ‘பிக் டிக்கெட்’ டிராவில், கேரளாவைச் சேர்ந்த ஒருவர் 25 மில்லியன் திர்ஹம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 60 கோடி) பரிசை வென்றுள்ளார். கேரளாவைச் சேர்ந்த ராஜன் என்ற 52 வயது நப... மேலும் பார்க்க

``இந்த ஆடையை உங்க மனைவிகிட்ட கொடுங்க, அவங்களுக்கு தெரியும்'' - சர்ச்சையை கிளப்பிய ஆடை நிறுவனம்

சீனாவைச் சேர்ந்த பிரபல ஆண்கள் ஆடை நிறுவனம் ஒன்று, தங்கள் தயாரிப்பில் இடம்பெற்ற வாசகத்திற்காக கடும் விமர்சனத்திற்குப் பாயப்பட்டுள்ளது."துணி துவைப்பது பெண்களுக்கான வேலை" என்ற தொனியில் அந்த நிறுவனம் கூறி... மேலும் பார்க்க

Indigo Cancelled : 'அவதியுறும் பயணிகள்; அவஸ்தைப்படும் ஊழியர்கள்' - சென்னை விமான நிலைய ஸ்பாட் விசிட்

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.நவம்பர் மாதத்தில் மட்டும் மொத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்த பாம்பு; CPR கொடுத்து உயிரைக் காப்பாற்றிய நபர் - வைரல் வீடியோ

குஜராத் மாநிலத்தின் வல்சாத் பகுதியில் மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்த பாம்பு ஒன்றுக்கு CPR செய்து உயிரைக் காப்பாற்றிய வனவிலங்கு மீட்பு நிபுணரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மின்கம்பியில்... மேலும் பார்க்க

AI Video: 90 வயது தாத்தாவுக்கு பேரன் கொடுத்த AI Gift; கண்கலங்கிய குடும்பம்; வைரலான வீடியோ!

90வது வயதை எட்டியுள்ள தனது தாத்தாவுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் அவரது பேரன் சர்ப்ரைஸ் கொடுத்துள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.தொழில்நுட்ப உலகில் 'செயற்கை நுண்ணறிவு' பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி... மேலும் பார்க்க

நாகாலாந்து: 'வெட்டுக்கிளி, பட்டுப்புழு, பூனை' - திகைத்த சுற்றுலாப் பயணி; வைரலான உணவுப் பட்டியல்

நாகாலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் வருடாந்திர ஹார்ன்பில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த விழா இப்போது தொடங்கி நடந்து வருகிறது. விழாவிற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்க... மேலும் பார்க்க