செய்திகள் :

பேரணாம்பட்டு: ஒரே இடத்தில் இறந்து அழுகி கிடந்த 3 காட்டு யானைகள் - தொடரும் உயிரிழப்பால் அதிர்ச்சி!

post image

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்துள்ள அரவட்லா மலையில் பாஸ்மார்பெண்டா சீத்தாம்மா காலடி என்ற இடத்தில், கடந்த மாதம் அழுகிய நிலையிலான 7 வயது ஆண் யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 30-ம் தேதி சிந்த கனவாய் வனப்பகுதியிலுள்ள மூன்று புளியமரம் என்று அழைக்கப்படும் வன ஓடையில் 6 வயதான ஆண் யானை ஒன்று தும்பிக்கையில் ரத்தம் வழிந்தோடியபடி இறந்து கிடந்தது.

`அடுத்தடுத்து இந்த யானைகள் உயிரிழந்தது எப்படி?’ என்பதற்கான விடைத் தெரியாத நிலையில், பேரணாம்பட்டு அருகே சாத்கர் மலைப் பகுதி ஏரி தண்ணீரில் ஒரு யானையின் உடலும், அதன் அருகிலுள்ள பாறைமீது மேலும் 2 யானைகளின் உடல்களும் மிகஅழுகிய நிலையில் கிடப்பதாக நேற்றைய தினம் வனத்துறையினருக்குத் தகவல் கிடைக்கப் பெற்றது. வனத்துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்துசென்று பார்த்தபோது, 3 யானைகளும் இறந்து நீண்ட நாள்களானது தெரியவந்தது.

அழுகிய நிலையில் கிடந்த யானைகளின் உடல்கள்

ஏரியில் கிடந்த யானையின் உடலமைப்பை ஆய்வு செய்தபோது, சுமார் 2-ல் இருந்து 3 வயதே ஆன குட்டி யானை எனத் தெரியவந்திருக்கிறது. அதேபோல, ஏரிக்கரை அருகில் கிடந்த 2 யானைகளும் 5-ல் இருந்து 7 வயதுக்குஉட்பட்டவை எனத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, யானைகளின் உடல்களை கூராய்வு பரிசோதனை செய்வதற்காக 5-க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்களைக்கொண்ட சிறப்பு மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த குழுவினர் இன்று உடற்கூராய்வு பரிசோதனையில் ஈடுபடுகின்றனர். உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, யானைகள் தொடர் உயிரிழப்புக்கான காரணத்தையும் அறிய முடியும். அதே நேரத்தில், `சமூகவிரோத கும்பல்களின் சதி வேலைகளால் யானைகள் இறந்திருக்கின்றனவா?’ என்ற கோணத்திலும் வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நிகழ்விடங்களில், தடயவியல் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்குஉட்படுத்தப்பட்டு வருகின்றன.

ரவுடியை பிடிக்கச் சென்று மலை உச்சியில் சிக்கிய காவலர்கள்; நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(30) இவன் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். குறிப்பாக பாலமுர... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னையைக் கண்டித்த தலைமைக் காவலர்; காவல் நிலையத்திற்குள் புகுந்து வெட்டிய கும்பல்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பொத்தைப் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி. இவர், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.குடு... மேலும் பார்க்க

ஈரோடு: மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு - விசாரணையில் வனத்துறை; நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலையில் உள்ள ஈரட்டி, கடை ஈரட்டி, ஒந்தனை உள்ளிட்ட வனப் பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றி, சிறுத்தை என வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இரவு நேரத்தில் உணவுதேட... மேலும் பார்க்க

காரியாபட்டி: ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு லஞ்சம்; பேரூராட்சி பொறியாளர் கைது!

மதுரை செல்லூரைச் சேர்ந்த பழனி குமார், ஒப்பந்தக்காரராக உள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கடந்த 2022 ம் ஆண்டு ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு ஒப்பந்தம்... மேலும் பார்க்க

புதுச்சேரி: அடுத்தடுத்து சிக்கும் போலி மருந்து தொழிற்சாலைகள்! - கோடிக்கணக்கில் நாடு முழுவதும் சப்ளை

முன்னணி நிறுவனங்களின் மருந்துகள் போலியாக தயாரிப்புஇந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டியி... மேலும் பார்க்க

சேலம்: சாலை அமைக்கும் பணியில் தகராறு; மூதாட்டியைத் தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ; வீடியோ வைரல்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை பணி நடக்கிறது. அங்கு வசிக்கும் மூதாட்டி சரோஜா வீட்டை ஒட்டி சாலை அமைக்க முயன்றுள்ளனர். அப்போது வீட்டை ஒட்டி போடாமல், அந்தப... மேலும் பார்க்க